ஏற்கனவே ஒரு நண்பர் தன் பத்திரிக்கையில் எழுதியதைப்போல பெரியமலை சென்ற
சில மிஷனரிகள் போன வேகத்திலேயே திரும்பி ஓடிவந்து விட்டனர் என்று அவர் எழுதியதைபோல் அல்லவா மக்கள் கூறுவார்கள். அன்றைய என் மனப்போராட்டம் மிக கொடியதாக எனக்கு தோன்றியது.
அப்போது
Dr.பில்லகிரஹாம் அவர்கள் எழுதிய புத்தகத்தின் வாசகங்கள்தான் என்னை மிகவும் தேற்றின. எந்த ஒரு கிறிஸ்தவனும் தன் உள்ளத்தில்
முதலாவது கர்த்தருக்கு இடம் கொடுக்க வேண்டும்.
இரண்டாவது சொந்த
குடும்பத்துக்கு இடம் கொடுக்கவேண்டும்.
மூன்றாவதுதான் ஊழியத்துக்கு இடம் கொடுக்கவேண்டும். ஊழியம் மூன்றாம் இடத்தில்தான்
வைக்கப்படவேண்டும்.
பவுல் கூறுகிறதைப்போல்
சொந்த குடும்பத்தை சரியாக நடத்தாதவன் எப்படி சபையை நடத்துவான்? (எப்படி
ஊழியத்தை செய்வான்?)
குடும்பத்தை பட்டினியில் கிடத்திவிட்டு
இயேசு ஜீவிக்கிறார் என்று சுவிசேஷம் அறிவிக்க அவனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?. இயேசுகிறிஸ்துவும் சிலுவையில் மரிப்பதற்குமுன் தன் ஆவிக்குரிய தாயை அனாதையாக விட்டுவிடாமல் குடும்ப பொறுப்புள்ள மகனாக தனக்கு பதில் தன் தாய்க்கு தன்
சீஷனை மகனாக பொறுப்பெடுக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டுதான் இயேசுகிறிஸ்து தன் ஜீவனை விட்டார்.
இவைகளையெல்லாம் ஆவியானவர்மூலம் நான் உணர்த்தப்பட்டேன். அதன்பின்னர்தான் மறுபடியும் என் டாக்டர் தொழிலை செய்து என் குடும்பத்தை காப்பாற்றினேன். என்றாலும் ஆரம்பகால மிஷனரி
ஊழிய தரிசனத்தை நான் இழக்காமல் பார்த்துக்கொண்டேன். என் தொழிலுடன் இணைந்து பிரசங்க ஊழியத்தையும், பல மாநிலங்களில் உள்ள மலைகளுக்கு சென்று மிஷனரி பணியையும் நிறைவேற்றினேன். இப்போதும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். சபைகளை வசனத்துக்கு நேராக திருப்பும் பணியும், இயேசுவை ஒருமுறைகூட கேள்விப்படாத
ஆதிவாசிகள் மத்தியில் இலவச மருத்துவத்துடன் சுவிசேஷம் அறிவிக்கும் பணியும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். இந்த ஊழியங்களை டாக்டர் தொழில் செய்துக்கொண்டே நிறைவேற்றினேன். ஆனாலும்
முழுநேர ஊழிய பாரம் முழுநேர ஊழிய அழைப்பை என்னை தொடர்ந்து அழுத்திக்கொண்டிருந்தது. |