இந்தியாவிலும், உலக நாடுகளிலும் ஆயிரக்கணக்கில் என்னோடு கடித தொடர்புகொண்டு வேத வசனம் சம்பந்தமாகவும் குடும்ப பிரச்சனைக்கான ஆலோசனை சம்பந்தமாகவும் ஏராளமானவர்கள்
கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். இவர்களுக்காகவே
நான் பத்திரிக்கை ஊழியத்தை 1969ம் வருடம் தொடங்கினேன்.
ஜாமக்காரன் என்ற பெயரில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் அச்சடித்து வெளியிட்டேன். தற்போது நேரம் இல்லாததால்
தமிழ் மற்றும் மலையாளம் பாஷைகளில் மட்டுமே ஜாமக்காரன் வெளியிடப்படுகிறது. அதன்பின்தான் பிஷப்மார்களும், ஆயர்களும், பெந்தேகோஸ்தே சபைகளும், பாஸ்டர்களும், சகோ.DGS.தினகரன் போன்ற நட்சத்திர ஊழியர்கள் பலருடைய வெறுப்புக்குள்ளானேன். குறிப்பிட்டவர்களின்
ஊழல்கள், பாவங்கள், பிழையான உபதேசங்கள் இவைகளையெல்லாம் சுட்டிக்காட்டி ஜாமக்காரன் வாசகர்களை
எச்சரித்து அறிவித்தேன். என் எழுத்தே அனைத்து ஊழியர்களும், பிஷப்மார்களும் என்னை வெறுக்க காரணமாயிருந்தது. என்றாலும் எல்லாரும் என்னை வெறுக்கவில்லை. கர்த்தர் ஒரு சிலரை என்னை புரிந்துக்கொள்ளச் செய்தார். |