கன்வென்ஷன் ஊழியம்:

கன்வென்ஷன் பிரசங்கியாக பிரசங்கிக்க இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும், உலகமெங்கும் உள்ள 162 தேசங்களிலும் கன்வென்ஷன் பிரசங்கியாக கர்த்தரின் கிருபையாலும் ஆவியானவரின் ஏவுதலின்படியும் நான் பயன்படுத்தப்பட்டு ஏராளமானவர்களை மனந்திரும்புதலுக்கு நேராகவும், சபைகளை வசனத்துக்கு நேராகவும் திருப்ப பரிசுத்த ஆவியானவர் தன் கருவியாக என்னை பயன்படுத்தினார்.

இந்தியாவில் நான் கன்வென்ஷனில் பேச அழைக்கப்பட்ட முதல் ஊர், முதல் கன்வென்ஷன் கன்னியாகுமரி மாவட்டம் காரியாவிளை CSI சபையாகும்.


பத்திரிக்கை ஊழியம்:

இந்தியாவிலும், உலக நாடுகளிலும் ஆயிரக்கணக்கில் என்னோடு கடித தொடர்புகொண்டு வேத வசனம் சம்பந்தமாகவும் குடும்ப பிரச்சனைக்கான ஆலோசனை சம்பந்தமாகவும் ஏராளமானவர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். இவர்களுக்காகவே நான் பத்திரிக்கை ஊழியத்தை 1969ம் வருடம் தொடங்கினேன். ஜாமக்காரன் என்ற பெயரில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் அச்சடித்து வெளியிட்டேன். தற்போது நேரம் இல்லாததால் தமிழ் மற்றும் மலையாளம் பாஷைகளில் மட்டுமே ஜாமக்காரன் வெளியிடப்படுகிறது. அதன்பின்தான் பிஷப்மார்களும், ஆயர்களும், பெந்தேகோஸ்தே சபைகளும், பாஸ்டர்களும், சகோ.DGS.தினகரன் போன்ற நட்சத்திர ஊழியர்கள் பலருடைய வெறுப்புக்குள்ளானேன். குறிப்பிட்டவர்களின் ஊழல்கள், பாவங்கள், பிழையான உபதேசங்கள் இவைகளையெல்லாம் சுட்டிக்காட்டி ஜாமக்காரன் வாசகர்களை எச்சரித்து அறிவித்தேன். என் எழுத்தே அனைத்து ஊழியர்களும், பிஷப்மார்களும் என்னை வெறுக்க காரணமாயிருந்தது. என்றாலும் எல்லாரும் என்னை வெறுக்கவில்லை. கர்த்தர் ஒரு சிலரை என்னை புரிந்துக்கொள்ளச் செய்தார்.


மிஷனரி ஊழியம்:

இதனிடையே 1967ம் வருடம் செப்டம்பர் மாதம் 9ம் தேதி FMPB மிஷனரி ஸ்தாபனத்தின் முதல் மிஷனரியாக நானும், சகோ.ஹாரீஸ் ஹில்டன் அவர்களும் பெரியமலை என்று அழைக்கப்படும் ஆதிவாசிகள் வாழும் மலைக்கு சுவிசேஷம் அறிவிக்கும் முதல் மிஷனரிகளாக புறப்பட்டு சென்றோம்.


FMPBயிலிருந்து ஏன் விலகினேன்:

1967ம் வருடம் செப்டம்பர் மாதம் பெரியமலையில் மிஷனரியாக கால்வைத்ததும் மதுரை கீழ்வாசல் CSI ஆலயத்தின் கன்வென்ஷனில் பேச கடித அழைப்பு என் வீட்டுக்கு வந்தது. என் தகப்பனார் அதை பெரியமலைக்கு Redirect செய்தார். உடனே FMPB பொதுசெயலர் சகோ.எமில் அவர்களுக்கு கன்வென்ஷனில் பேச அழைத்த அக்கடிதத்தை அனுப்பி உத்தரவு கேட்டேன். அவரிடமிருந்து பதில் வரவில்லை. சகோ.எமில் அதை விரும்பவில்லை. ஆகவே நானே மலையைவிட்டு இறங்கி மதுரை சென்று கன்வென்ஷனில் பிரசங்கம் செய்துவிட்டு மலைக்கு திரும்பினேன். சிலமாதம் கழித்து மறுபடியும் மதுரை St.George Churchல் பிரசங்கிக்க அழைக்கப்பட்டேன். அப்போதுதான் சகோ.எமில் என்னோடு தனிமையில் ஒருமணி நேரம் பேசினார். நீங்கள் மிஷனரி ஊழியத்துக்கு அழைக்கப்பட்டிருந்தால் மிஷனரி ஊழியத்தைமட்டும் செய்யவேண்டும். கன்வென்ஷனில் பேசும் தாலந்து உங்களுக்கு உண்டு. ஆனால் இரண்டையும் இணைத்து செய்தால் உங்களோடுகூட மிஷனரியாக இணைந்து ஊழியம் செய்யும் சகோ.ஹாரிஸ் ஹில்டன் என்ன நினைப்பார்!. மலையைவிட்டு இறங்கி தன்மனைவியை பார்க்கவும் சொந்த ஊரில் ஊழியம் செய்யவும் அவருக்கும் ஆசை வருமே!. ஆகவே உங்கள் அழைப்பை சரியாக உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். என்ற நல்ல ஒரு ஆலோசனையை எனக்களித்தார்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN