அவளுடைய பெற்றோரினால் சரியாக வளர்க்கப்படாதவளாக இருப்பாள் மனைவி அல்லது பாவம் செய்த கணவன், வேறு ஒரு பெண்ணோடு அல்லது ஆணோடு இரகசியமாய் குடும்பம் நடத்துகிற கணவன் அல்லது மனைவியாக இருந்தால்
சரீர காம உணர்ச்சி அதிகம் கொண்ட (ஹார்மோன் பிரச்சனையுள்ள மனைவி) மனைவி அல்லது கணவன் இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களோடு நீங்கள் வாழ்க்கை நடத்துகிறவரானால்,
கீழ்ப்படியாத மனைவி உங்களை எரிச்சலூட்டி உங்களை கோபத்தின் உச்சநிலைக்கு ஒவ்வொரு நிமிடமும் கொண்டுபோகும் அளவு நடந்துகொள்ளும் மோசமான
மனைவி அல்லது கணவன் உங்களுக்கு அமைந்தால் வேதம் கூறும் ஆலோசனை இதுதான். இந்த ஆலோசனை
ஆணுக்கும் - பெண்ணுக்கும் பொருந்தும்.... (1பேது 3:1,2) (தாழ்ந்து போங்கள்)
கீழ்ப்படிந்திருங்கள் இதுதான் முதல் உபதேசம். வேறு வழியில்லை. இருவரில் யாராவது ஒருவர் மனந்திரும்புதலின் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால்..... அவர்களை நீங்கள்
திருத்த முயற்சி செய்யவேண்டாம். அது தோல்வியாகத்தான் முடியும்.
மனிதன் மற்றொரு மனிதனை மாற்றமுடியாது என்று வேதம் கூறிவிட்டது. மாற்றுகிறவர் கர்த்தர் என்பதை மறக்காதீர்கள். இப்போது அடுத்த ஆலோசனையாக பேதுரு இந்த குறிப்பிட்ட வசனத்தில் என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள். வீட்டில் உங்கள் நல்ல நடத்தையை(நீங்கள் தாழ்ந்துப்போகிறதை), மனைவியின் அல்லது
புருஷனின் பைத்தியகார சுபாவத்தை நீங்கள் சகிக்கிறதை, பதிலுக்குபதில் கோபத்தை உங்கள் எரிச்சலை அவர்களிடம் காட்டாமல் இருக்கவேண்டும். அதோடு உங்கள் அமைதியுள்ள நடவடிக்கையை அவர்கள்
பார்க்கவேண்டுமாம்!- கவனிக்கவேண்டுமாம்!.
போதனையின்றி என்ற அந்த வசனத்தில் குறிப்பிட்டுள்ள அந்த வார்த்தையின் அர்த்தம் அவர்களை நீங்கள்
திருத்த முயலாதீர்கள் என்பதாகும். எவ்வளவுதான் அவர்களுக்கு ஆலோசனை கூறினாலும் அவர்களால் விளங்கிக்கொள்ளமுடியாது. நீங்கள் அவர்களுக்கு ஆலோசனை கூற கூற முன்பைவிட மிக அதிக மூர்க்கதனமான கோபம்தான் அவர்களுக்கு உண்டாகும். ஆகவே ஆலோசனை கூறுவதை நிறுத்திவிடுங்கள். என்னால் யாரையும் மாற்றமுடியாது என்பதை கர்த்தரிடம் கூறி ஒப்புக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியை அல்லது கணவனை மாற்றுகிற வேலையை கர்த்தரிடம் விட்டுவிடுங்கள். இரவு எல்லாரும் உறங்கினபிறகு மனைவியின் அல்லது புருஷனின் படுக்கைக்கு அருகில் முழங்காலிட்டு கர்த்தாவே என் புருஷனை அல்லது என் மனைவியை திருத்தி எனக்கு தாரும்! என்று கேளுங்கள். மனைவி பிரச்சனையாக இருந்தால் மனைவி உறங்கியபின் கணவன் மனைவிக்கு அருகில் முழங்காலிட்டு
என் மனைவி எனக்கு வேண்டும். என் பிள்ளைகளுக்கு
நல்ல தாயாக அவள் எனக்கு வேண்டும்! அவளை மாற்றிக்கொடும் ஆண்டவரே! என்று கெஞ்சிடுங்கள். சில சமயம் அந்த ஜெபத்துக்கு பல நாள் கடந்து பதில் கிடைக்கும், சில சமயம்
பல வருடங்கள் கழித்து பதில் கிடைக்கும்.
அதுவரை அந்த அதிகாரத்தில் 1ம் வசனத்தின் கடைசியில் கூறுகிறது: (உங்கள் நடக்கையின் மாற்றத்தை எத்தனை கோபப்படுத்தினாலும் நீங்கள் காட்டும் உங்கள் அமைதியும், உங்கள் அன்பையும் உங்கள் ஜெப வாழ்க்கையையும், உங்கள் வேதவாசிப்பையும்) அவர்கள் (பார்த்து)
கவனிக்கவேண்டும் என்று வேதம் கூறுகிறது. அந்த கவனிப்பு வீட்டில் பிரச்சனைக்கு காரணமானவர் உள்ளத்தில்
மெள்ள மெள்ள மாற்றத்தை உண்டாக்கும். இப்படித்தான் வேதம் நமக்கு போதிக்கிறது.
இதை மனநல ஆலோசகரோ, மனநல வைத்தியரோ கூறமாட்டார்கள். நம் வேதம் மட்டுமே இப்படி கூறுகிறது. இப்படிப்பட்ட
நடத்தயினாலேதான் வீட்டில் பிரச்சனை உள்ளவரை ஆதாயப்படுத்திக் கொள்ளமுடியும் என்று தீர்க்கமாக வேதம் போதிக்கிறது.
சிலர் என் மனைவி எனக்கு கொடுக்கும்
டார்ச்சர் என்னால் தாங்க முடியவில்லை. வேண்டும் என்றே என்னை கோபப்படுத்துகிறாள். ஆகவே என் மனைவியை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன் என்று என்னிடமே நேரில் சொன்னவர்கள் நிறையபேர் உண்டு.
உங்கள் பொறுமையினால் உங்கள்
ஆத்துமாவை காத்துக்கொள்ளுங்கள் என்று (லூக்கா 21:19) வேதம் கூறுகிறது.
ஆகவே ஒன்றை நீங்கள் தெளிவாக புரிந்துக்கொள்ளவேண்டும். நம்தேவன் பிரிக்கும் தேவன் அல்ல சேர்க்கும் தேவன் என்பதை மறக்கவேண்டாம். |