இது ஆண்டவர் பார்வையில் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் அல்ல. இதற்கெல்லாம் அந்த பெண்ணை பெற்றவர்கள்தான் மூலக்காரணமாவர். இரவு நேரத்தில் பிள்ளை சிறுநீர் கழிக்க டாய்லெட் போக அழுவாள் மனைவி நிம்மதியாக அதை காணாதவர் போலவும், உறங்குவதைப் போலவும் பாவனை செய்வார். கணவன்தான் அந்த விஷயத்திலும் தன் பிள்ளைக்கு உதவி செய்யவேண்டும். இது சாட்சியில்லா கிறிஸ்தவ குடும்பம். மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்க தகுதியற்ற கிறிஸ்தவ குடும்பம் ஆகும். அந்த வீட்டில் பிள்ளைகளும் பெற்றோரின் அந்த தவறான செயலைத்தான் பிற்காலத்தில் பின்பற்றும். பிள்ளைகள் பிற்காலத்தில் முரடராக, கொலைகாரனாக மாற அந்த பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வதும், பிள்ளைகளிடம் அன்பு செலுத்தாதுமே காரணமாகும். பெற்றோரின் முன்கோப நடவடிக்கை காரணமாக சிறுவயதிலேயே வீட்டைவிட்டு ஓடிப்போன பிள்ளைகள் எத்தனைப்பேர். ஜாக்கிரதை! கிறிஸ்தவ பெற்றோர்கள் இதற்கெல்லாம் கர்த்தரிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நாள் வரும். இவர்கள் பரலோக பாக்கியமும் இழக்கநேரும்.

அன்பின் அடிப்படையில் ஒரு கணவன் மனைவியின் புடவையைகூட துவைத்து உதவமுடியும். ஆனால் பெண் ஆதிக்க அடிப்படையில் கட்டாயப்படுத்தி, கட்டளையிட்டு ஒரு மனைவியோ ஒரு கணவனோ வீட்டுவேலையை செய்ய கட்டாயப்படுத்தினால் அவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் நேசிக்காதவராகும். அப்படிப்பட்ட குடும்பம் என்றைக்கு வேண்டுமானாலும் இரண்டாக உடையலாம்.

அன்பினால் செய்யவேண்டியதை கட்டளையினால் செயல்படுத்த முயக்கூடாது.

HYSTERIA IN WOMEN - MEN

சிலருடைய மனைவிமார்கள் அல்லது கணவன்மார்கள் இப்படிப்பட்ட ஒருவித மனநோயினால் பாதிக்கப்பட்டவராக இருப்பார்கள். நல்ல படிப்பு, நல்ல குணம், நேரில் பார்க்கும்போதோ - பழகும்போதோ இப்படிப்பட்ட மனநோய் Hysteria இருப்பதாகவே தெரியாது. ஆனால் எந்த காரியத்துக்காவது கோபம் வந்துவிட்டால் எல்லை மீறி வார்த்தைகளை உதிர்த்து குடும்பம் இரண்டாக உடையகூடிய அளவு நடந்துக்கொள்வார்கள். சில சமயம் இப்படிப்பட்ட கேரக்டர் (குணாதியசங்கள் உள்ளவர்) உள்ளவர்கள் தங்கள் சரீரத்தை காயப்படுத்திக்கொள்வார்கள். தன் கைகளை கோபம் வரும்போது தானே கடித்துக்கொள்வார்கள்.

சீத்தலை சாத்தனார் என்ற பிரபல தமிழ் புலவர் நம் தமிழ் பாட புத்தகத்தில் வாசித்திருப்பீர்கள். இவரிடம் படிக்கும் மாணவனுக்கு ஒருமுறை கற்றுக்கொடுத்த பாடத்தை அந்த மாணவன் புரிந்துக் கொள்ள முடியாமல்போனதால் பலமுறை அவனுக்கு கற்றுக்கொடுக்கும் நிலை வந்தால் சாத்தனார் என்ற அந்த புலவருக்கு கோபம் வரும். எந்த புலவராவது பாடல் எழுதும்போது இலக்கண பிழையோ, வல்லினம் - இடையினம் தவறுதலாக எழுதிவிட்டாலோ, உடனே அந்த புலவருக்கு அளவுக்குமீறி கோபம்வந்து மற்றவர்களை தண்டிப்பதற்கு பதில் கையில் உள்ள எழுத்தாணியை வைத்து தானே தன் தலையில் குத்திக்கொள்வராம். பலமுறை இப்படி நிகழ்வதால் தலை முழுவதுடன் காயமுற்று சீழ்பிடித்து காணப்படுமாம். அதனாலேயே அவரை சீ தலை சாத்தனார் என்று அழைத்தார்களாம்.

அதுபோல இப்படிப்பட்ட மனநோய் சில கணவன்-மனைவிகளிடம் காணப்படும். இவர்கள் சிறு குழந்தையாக வளர்ந்தபோது தாயின் அன்பு கிடைக்காமல் போயிருக்கலாம். அல்லது வெளி உலக மக்களோடு தொடர்பு கொள்ளமாலேயே தனிமையில் வாழ்ந்திருக்கலாம். அல்லது வளர்த்தப்பட்ட விதம் சரியில்லாமல் ஆலோசனை கொடுக்க ஆளில்லாமல் இப்படிப்பட்டவர்கள் வளர்ந்திருக்கலாம்.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்-ஆசிரியைகளின் கவனகுறைவாகவும், ஆசிரியர்களால் கொடுமைப்படுத்தப்பட்டவர்களாய், மாணவ-மாணவிகள்முன் அவமானப்படுத்தப்பட்டவர்களாய் அதன் காரணமாக சிறுவயதில் உண்டான கோபம், வெறுப்பு, அவமானம் ஆகியவைகளின் பாதிப்பு. அதன் பிரதிபலிப்பை அந்த பிள்ளை வெளியே காட்டமுடியாமல் மனத்திற்குள்ளேயே அடக்கிவைத்து கொண்டவர்களாக இருக்கலாம். இதுதான் அந்த பிள்ளை வளர்ந்தபின் குடும்ப வாழ்க்கையில் பிரதிபலிக்கும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM