ஆகவே கடந்த 37 வருடங்களாக கன்வென்ஷனில் பிரசங்கிக்கபோகும் இடங்களில்
பகல் நேரத்தில் வேதபாட (Bible Study) கூட்டத்தை நடத்தாமல்,
ஆலோசனை நேரம் என்ற பெயரில் மேலே குறிப்பிட்ட பல பிரச்சனைகளுக்கும், குடும்ப பிரச்சனைகளுக்கும் தனிநபர் பிரச்சனைகளுக்கும் வேதவசன அடிப்படையில் ஆலோசனைகள் கொடுக்கிறேன். அப்படிப்பட்ட அந்த ஆலோசனை நேர சந்திப்பில்
பிரிந்த குடும்பங்கள் பல ஒன்று சேர்ந்துள்ளன. படிப்பில் நாட்டம் இல்லாத பிள்ளைகளுக்கு, படிக்காமல் போனால் என்ன நடக்கும் என்று அந்த பிள்ளைகளுக்கு ஆலோசனைக்கூறி அவர்களின் பிற்கால வாழ்க்கையை அவர்களுக்கு சுட்டிகாட்டி படிப்பில் அவர்களுக்கு நாட்டம் உண்டாகச்செய்ய
ஆலோசனை நேரம் மிகவும் பயன்படுகிறது. அந்த ஆலோசனை நேரத்தை வெளிநாடுகளுக்கு ஊழியத்துக்கு சென்றாலும், அங்கும் நான் அதற்கு நேரம் ஒதுக்குகிறேன். அந்த குறிப்பிட்ட ஆலோசனை நேரத்தில் சபை மக்களுக்கு மனதில் உண்டாகும் வேதவசன சந்தேகங்களுக்கும், வசன ஆதாரத்துடன் பதில் அளித்து, அவர்கள் வசனத்தில் தெளிவுபெற அந்த நேரம் மிகவும் உதவியாக இருக்கிறது. இப்போதெல்லாம் எங்கு போனாலும்
அந்நியபாஷை, ஜெபத்தில் கீழேவிழும் கலாச்சாரம், பரிசுத்தாவியானரைப்பற்றி தெளிவில்லாதவர்களுக்கு சரியான வசன விவரங்கள் கூறி சரியான விளக்கங்கள் அறிவிக்கின்றேன். இதைப்போன்ற விஷயங்கள்தான் அந்த நேரங்களில் மிக அதிகமாக என்னிடம் கேட்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு வேதவசனத்தை வாசித்துக் காட்டி விளக்கியதால் தவறான உபதேசத்திலிருந்து தெளிவுபெற்ற பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள், விசுவாசிகள் ஏராளம். அந்த குறிப்பிட்ட ஆலோசனை நேரத்தில்தான் நான் ஜெபிக்க வருபவர்களின் தலையில் கைவைத்து ஜெபிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறேன். அதன்மூலம்
சுகம் பெற்றவர், பிசாசு பிடியிலிருந்து விடுபட்டவர்கள் மிகவும் அதிகம். கர்த்தருக்கு மாத்திரம் மகிமை உண்டாகட்டும். இந்த ஆலோசனை நேரத்தில் என்னை சந்திப்பதற்காக வெளிஊர்களிலிருந்தெல்லாம் ஆட்கள் கூடுவார்கள். காலையில் ஆலோசனை நேரத்தில் நான் அமர்ந்தால், மதியம் சாப்பிட இயலாமல் போகும். மாலை 6 மணி வரை ஏராளமான கூட்டம் வரிசையில் காத்திருப்பார்கள். கன்வென்ஷனில் நான் பிரசங்கிப்பதில் ஏற்படும்
மாற்றங்களைவிட ஆலோசனை நேரத்தில் மனம்மாறியவர்கள், மனந்திரும்பியவர்கள் ஒப்புரவானவர்கள், சுகம் பெற்றவர்களின் எண்ணிக்கை ஏராளம். ஸ்தோத்திரம். |