அன்றைய மிஷனரிகள் நமக்காக நம் சந்ததிக்காக பள்ளிக்கூடம், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள் கட்டிகொடுத்தார்கள். ஆனால் இன்று பல சிஎஸ்ஐ, சிஎன்ஐ, லூத்தரன் சபைகளின் நிர்வாகிகள் இவைகளை லாபம் உண்டாக்கும் வியாபார ஸ்தாபனங்களாக மாற்றிபோட்டதால்தான் சபை தேர்தல்களில் போட்டியும், பதவி சண்டையும் பதவிகளை கோடிகணக்கில் விலை கொடுத்து வாங்குவது, பதவிக்கு வந்துவிட்டால் செலவழித்த பணத்தை திரும்ப எடுக்க வேலை நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு இப்படிப்பட்ட விஷயங்களில் துணிகரமாக பணம் வாங்கும் நிர்வாகிகள், ஆயர்கள், பிஷப்மார்கள் தமிழ்நாடு,
கர்நாடகா மிக அதிகமாக ஆந்திர டையோசிஸ்களில் உண்டு. சபையை வியாபார
குகையாக மாற்றுபவர்களை தண்டிக்க சாட்டையுடன் கூடிய இயேசு சபைக்குள் இன்று இல்லை. டையோசிஸ்ஸிலும் இல்லை. பிரம்பை கொண்டுவரவா என்று துணிந்து பவுலைப்போல் கேட்கும், உண்மை ஊழியர் பிஷப், நிர்வாகிகள் இப்படிப்பட்ட இடங்களில் இல்லை. தற்கொலைகள் மேலும் நடக்கவும் கொலை செய்யப்படாமல் மனநோயாளியாக மாற்றவும் இப்படிப்பட்ட சம்பவங்கள் காரணமாகக்கூடாது. ஜெபிப்போம்.
|