சென்னை பாஸ்டர்.விக்டர் ராஜாமணி அவரின் பத்திரிக்கையில் அவர்கள் 7ம் பக்கத்தில்
பரிசுத்த ஆவியானவரின் ஒப்பனைகள் என்ற தலைப்பில் வசனத்துக்கு சம்பந்தமே இல்லாது, வசனத்துக்கு தொடர்பற்ற,
பொருத்தமற்ற, வியாக்கியானத்தை சம்பந்தமில்லாத வசனத்தோடு குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
பரிசுத்தாவியானவர்:
புறாவுக்கு ஒப்பானவர் என்று லூக்கா 3:22ல் எழுதப்பட்டது. யோவானுக்குமட்டும்
மேசியா யார் என்பதை அறிந்துக்கொள்ள பிதாவால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த புறா அடையாளத்தின்மூலம் அதை சுட்டிக்காட்டுகிறார். ஆவியானவருக்கு
உருவம் இல்லாததால் அந்த வசனத்தில் ஆவியானவர் புறா ரூபத்தில் இயேசுவின்மேல் இறங்கி வருவதை காணவைத்து
யோவானை அறிய வைத்தார். வேதத்தில் மற்ற எந்த ஒரு இடத்திலும் யார்மேலும் - ஆவியானவருக்கு அடையாளமாக புறா வந்திறங்கியதாக காணமுடியாது.
பாஸ்டர்.விக்டர் ராஜாமணி அவர்கள் பரிசுத்த ஆவியானவரை
புறா என்று தன் பத்திரிக்கையில் குறிப்பிட்ட ஏசா 60:8, உன் 2:14, உன் 5:12, ஏரே 9:1, லூக் 7:44, உன் 2:14,ஏசா 38:14, மத் 12:36-37, லேவி 1:14,ரோம 12:1 இந்த வசனங்களில்
ஒன்றாவது பரிசுத்த ஆவியானவரை சுட்டிக்காட்டுகிறதா? என்பதை பாஸ்டர்கள் வாசித்து அறியுங்கள்.
அதே பாஸ்டர் அக்கினிக்கு ஒப்பனையாக பரிசுத்தாவியானவரை மத் 3:11, அப் 2:3, மத் 3:11 ஆகிய வசனங்கள்மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அக்கினி என்பது கெட்டதை, மனம்திரும்பாதவர்களை கோதுமை பதருக்கு (உமிக்கு) ஒப்பாக்கி அவர்களை சுட்டெரிக்கப்போவதாக அல்லது அழிக்க போவதைக்குறித்து அந்த வசனம் ஒப்பிடப்பட்டிருக்கிறது.
அப் 2:3ல் ஆவியானவரின்
முதல் இறக்கத்திற்கு 3 முக்கிய அடையாளங்களை கர்த்தர் அங்கு அன்று ஏற்பாடு செய்தார். இந்த அடையாளம் அந்தகால யூதர்கள்
பாபேல் கோபுரம் கட்டும்போது கோபுரம் பணிவதை நிறுத்த கர்த்தர் அவர்களை பல பாஷைகளை
பேசவைத்து அந்தகால யூதர்களை குழம்ப செய்து உலகமெங்கும் அவர்களை சிதறடித்தார். சிதறடிக்கப்பட்ட அந்த மக்கள் ஒவ்வொரு பஸ்கா பண்டிகைக்கும்
எருசலேமுக்கு தவறாமல் கர்த்தரை பணிந்துக்கொள்ளவருவார்கள். அப்படி பற்பல பாஷை பேசிய அந்த யூதர்கள் அன்று எருசலேமில் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு இடத்தில் கூட்டிக்சேர்க்க கர்த்தர் ஒரு ஏற்பாடு செய்தார். பெரும்
காற்று வீசினால் எப்படி சத்தம் உண்டாகுமோ அப்படிப்பட்ட
காற்றின் முழக்கம் போன்ற சத்தம் அங்கு உண்டாகச் செய்தார். அதை கேட்டவர்கள் பதறிபோய் சிலர் வீட்டிலிருந்தும், சிலர் விடுதியிலிருந்தும்
சத்தம் ஏன் வந்தது என்று பார்க்க வெளியே வந்தனர். அப்போதுதான் 120
பேர் தங்கியிருந்த அந்த வீட்டின் அருகே மக்களை கொண்டுவந்து
கூட்டிசேர்க்க, அந்த வீட்டின்முன் அக்கினிமயமான
நாவுகள்போல் [ஆங்கிலத்தில் Flam (ஜுவாலை)] என்று குறிப்பிடுகிறது. மேலும் வேதத்தில் அங்கு
அக்கினிமயமான நாவு காணப்பட்டது என்று எழுதப்படவில்லை என்பதை கவனியுங்கள். அக்கினிமயமான
நாவுபோல, நெருப்புப்போன்ற நாவுகள் என்று கத்தோலிக்க வேதம் மொழிபெயர்த்துள்ளது. ஆங்கிலத்தில்
Looked Like மற்றொரு மொழிபெயர்ப்பில் Cloven Tongues Like தீ நாவுகள் என்றால் அது நெருப்பல்ல என்று நாம் அறியமுடிகிறது. இந்த அடையாளத்தை கர்த்தர் காண்பிக்க காரணம், அன்று மோசேயுடன் கர்த்தர் பேசும்போது
முள்செடி பற்றியெறிந்தது. யாத் 3:2ல் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த
முட்செடி அக்கினியால் ஜீவாலித்து எரிந்தும் அது
வெந்துபோகாமல் இருந்தது என்பதை கவனிக்க வேண்டும். அதுபோல் இங்கும் காணப்பட்டது. ஆனால் இதுவும்
உண்மையான நெருப்பல்ல. நெருப்புநாவுகள்போல காட்சியளித்தது. இது அன்று அங்கு கூடின யூதர்களுக்கு மோசேயுடன் கர்த்தர் நெருப்பு மாதிரியான
ஜுவாலைமூலமாக பேசியதை நினைவுப்படுத்தியது. அதன்மூலம் இந்த 120 பேர் நம் தேவனை ஆராதிக்கும் நம்
இனத்தவர்தான் இவர்கள். ஆகவே இவர்கள் சொல்வதை நாம் கேட்போம் என்ற உணர்வு இவர்களுக்கு உண்டாக்கவே கர்த்தர் அந்த முதல்
பரிசுத்த ஆவியானவரின் இறக்கத்தில் அக்கினி மயமான
அடையாளத்தைக்காட்டினார். வேதவிளக்கம் இப்படியிருக்க பெந்தேகோஸ்தே ஊழியர்கள்
பரிசுத்த ஆவியானவரின் முதல் இறக்கத்தில் காணப்பட்ட அந்த அடையாளம் இப்போதும் வேண்டும் என்று இப்போதுள்ள ஊழியர்கள் கேட்பது எத்தனை அறிவீனம். |