கடந்த
ஜுன் மாதத்துடன் என் 50 வருடகால ஊழியம் நிறைவு பெற்று 51ம் ஆண்டுக்குள் கால் எடுத்து வைத்துள்ளேன். விளம்பரமோ, விழாக்களோ, ஆர்ப்பாட்டங்களோ இல்லாமல் என் தனி ஜெபத்தில் தேவனைத்துதித்தேன். தகுதியில்லாத என்னை இந்த வித்தியாசமான ஊழியத்துக்கு தெரிந்தெடுத்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையோடு,
50 வருடங்கள் நிறைவுபெற்று அதே கிருபையோடு 51ம் ஊழிய வருடத்துக்குள் தொடர்ந்து பயணமாகிக்கொண்டிருக்கிறேன். என்னை பெலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை (Dr.புஷ்பராஜ் ஆகிய என்னை) உண்மையுள்ளவன்னென்று (மற்ற ஊழியர்கள் எவ்வளவு ஏசினாலும், எவ்வளவு கொலைமிரட்டல்கள், எதிர்ப்புகள், பயமுறுத்தல்கள் வந்தாலும் தொலை பேசியிலும், கடிதத்திலும் கெட்ட வார்த்தைகளைபேசி அவமானப்படுத்தினாலும், என்மேல் வெறுப்புற்று காணிக்கை அனுப்புவதை நிறுத்தினாலும் இவன்
தாங்குவான், சகிப்பான் என்று தகுதியில்லாத என்னைப்போய் கர்த்தர் நம்பி) இந்த ஊழியத்திற்கு என்னை ஏற்படுத்தினபடியால் அவரை இயேசுகிறிஸ்துவை துதிக்கிறேன். 1தீமோ 1:12. |