நான் கன்வென்ஷனில் பிரசங்கிக்கும் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு சபையிலும் உள்ள குடும்பங்களில் விதவிதமான பிரச்சனைகள், வெளியில் மற்றவர்களிடம் கூறமுடியாத அளவு இரகசிய பிரச்சனைகளும், பலருடைய வாழ்க்கையில் போராட்டங்களும் நிறைந்திருந்ததை, ஜெபத்துக்காக பலர் எனக்கு எழுதும் கடிதங்கள் மூலம் அவைகளை அறிய முடிந்தது. பிள்ளைகளைப்பற்றிய பிரச்சனை, வளர்ந்த
வாலிப பிள்ளைகளின் காதல் பிரச்சனை, திருமணமானவர்களும், மனைவி பிள்ளைகளுடன் வாழும்போதே வேறு பெண்களின் காதல் வலையில் விழுந்து எழுந்திருக்க வழி தெரியாமல் தவிப்பது, சிலருடைய வேலை
இடங்களில் மேலதிகாரிகள் தங்களை வெறுப்பது, சிலருக்கு தொழிலில் முன்னேற விடாமல் தடைசெய்யும் அப்படிப்பட்ட நபர்களை எப்படி சமாளிப்பது என்பதைப்பற்றியும், வீட்டுக்குள்ளேயே உள்ள உறவினர்களில் உண்டாகும் பிரச்சனை, கூடபிறந்தவர்களே ஒருவருக்கொருவர் வெறுப்பது,
சொத்துப்பிரச்சனை, திருமண பிரச்சனை, தங்கள் சரீரத்திலுள்ள குறைப்பாடுகளை வெளியே கூற கூச்சப்பட்டு திருமண வாழ்க்கையில் விரத்திக்கொண்டு
தற்கொலைவரை சென்று திரும்பியவர்கள், இப்படி விதவிதமான பிரச்சனைகளைக்குறித்து இவர்கள் ஜெபிப்பதற்காக இப்படிப்பட்டவர்கள் எனக்கு கடிதம் எழுதுவார்கள். ஆனால் இவர்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் நான் கடிதம் மூலம் விரிவாக
ஆலோசனையோ, விளக்கமோ கொடுக்கமுடியாது. கணவன்-மனைவி பிரச்சனையானால், 2 பேரையும், தனித்தனியாக சந்தித்து பிறகு இருவரையும் ஒன்றாக அமரவைத்து முதல் அமர்வு 1st
sitting இரண்டாம் அமர்வு 2nd sitting என்று குறைந்தது இரண்டு முறையாவது சந்தித்து பேசி ஆலோசனை கொடுத்தால் அவர்கள் சமாதானமாக வாழ்க்கை வாழ அது உதவியாக இருக்கும். |