1964
2014
கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் என் ஊழியத்தை (நடத்தி) கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? 2சாமு7:18.
கடந்த 50 ஆண்டுகள் என் ஊழியத்தையும், பத்திரிக்கை ஊழியத்தையும், என் குடும்பத்தையும் ஜெபத்திலும், காணிக்கை மூலமாகவும் என்னை தாங்கிவந்த
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள அனைத்து வாசகர்களுக்கும் என் இதயம்கனிந்த நன்றி.
தங்கள் திருச்சபைகளில் உள்ள சபை மக்கள்
உயிர்மீட்சி பெற வசனத்தில் வழிநடத்த, கன்வென்ஷன் ஏற்பாடுகள் செய்து என்னை அழைத்து உபயோகித்த இப்போதும் உபயோகித்துகொண்டிருக்கும்
CSI, மார்தோமா, லூத்தரன், மெத்தடிஸ்ட் சபைகளின் பிஷப்மார், ஆயர்கள், சபை நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துதல் கூறிக்கொள்கிறேன். உபதேச வித்தியாசம் இருந்தாலும் தங்கள் கன்வென்ஷன்களிலும் என்னை உபயோகிக்கும்
பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களுக்கும், விசுவாசிகளுக்கும் வாழ்த்துதல் கூறிக்கொள்கிறேன். அனைத்து
மிஷனரி ஸ்தாபன நிர்வாகிகளுக்கும், சத்தியவசன நிகழ்ச்சிகளில் வானொலி மற்றும்
டிவி மூலம் என்னை உபயோகப்படுத்திகொண்டிருக்கும் இந்தியா மற்றும் இலங்கை நிர்வாகிகளுக்கும் வாழ்த்துதல் கூறிக்கொள்கிறேன்.
என் ஜாமக்காரன் பத்திரிக்கையில் வெளிவந்த என் கட்டுரையால் பாதிக்கப்பட்ட பிஷப்மார்கள் உண்டு, ஸ்டார் ஊழியர்கள் உண்டு. அவர்களும், அவர்களை தாங்குபவர்களுக்கும் என் எழுத்தால் கோபமும், வெறுப்பும் என்மேல் உண்டு என்று அறிவேன். அவர்கள் அனைவரையும் ஊழியக்காரன் என்ற முறையில் ஆசீர்வதித்து வாழ்த்துகிறேன். கர்த்தருக்கே கனமும், மகிமையும் உண்டாவதாக.
|