68 வருடங்களுக்குமுன் இந்தியா சுதந்திரநாடாக மாறி, இன்று நம்மைநாமே ஆட்சி செய்யும் சுதந்திரத்தை பெற்றோம். நம்முடைய தேச தலைவர்கள் கஷ்டப்பட்டு உயிர் தியாகம் செய்து பெற்ற இந்த சுதந்திரத்தை
தவறாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என அத்தனை பேர்களையும் நம் தேவன் உணர்த்தி தெய்வபயத்துடன், லஞ்சம் இல்லாமல், ஊழல் இல்லாமல் தேசத்தை ஆளுகை செய்யவும் நாம் தினமும் ஜெபிப்போம்.
"தேசத்தை அழிக்காதப்படி திறப்பின் வாசலில் நிற்கத்தக்கதாய் ஒரு புருஷனை தேடினேன்" .எசே 22:30.
"தேசத்தில் நடக்கிற அருவருப்புகளினிமித்தமும் பெரூமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு" என்றார். எசே 9:4.
- ஜாமக்காரன்
|