இப்போது நான்
74 வயதை மிகவும் சீக்கிரம் நெருங்கிவிடுவேன். நவம்பர் 13ம் தேதி வந்துவிட்டால் கர்த்தர் அனுமதித்திருந்தால் அடுத்த வருடத்துக்குள் அந்த வயதை நெருங்கிவிடுவேன் என்று கர்த்தருக்குள் நம்புகிறேன்.
கடந்த
50 வருடத்தில் எந்த ஊழியத்துக்கும் நான் தாமதித்து சென்றதில்லை.
ஊழியம் நடத்த முடியாமல் எந்த ஊரிலும் நான் வியாதியில் படுத்ததில்லை. கடைசி நேரத்தில் என்
ஊழியம் கேன்ஸல் செய்யப்பட்டதும் இல்லை. ஒரே ஒருமுறை
டைபாய்டு காய்ச்சலில் தலைபாரம் உண்டானதை அனுபவப்பட்டிருக்கிறேன். ஆனால் பிறந்ததிலிருந்து
தலைவலி நான் அனுபவப்பட்டதில்லை. கர்த்தரின் கிருபை இன்னும் என்னை தொடருகிறது.
வேதத்தில் யோசுவா 14:11ல்
இன்று நான் எண்பத்தைந்து வயதுடையவன். மோசே என்னை அனுப்பின நாளில் நான் 45 வயதுடையவன். அந்த 45வயதில் எனக்கு இருந்த அதே பெலன். 85வயதான இந்நாள்வரை இருக்கிறது. யுத்தத்துக்கு போகவும், வரவும் அப்போது இருந்த பெலன் இப்போதும் எனக்குள் இருக்கிறது என்றான். எத்தனை
அருமையான அனுபவ சாட்சி இது.
நானும் ஒவ்வொரு மாதமும் ஒருவாரம் முழுவதும் இந்தியாவின் மலைநாடுகளில் இயேசுவை அறியாத மக்கள் மத்தியில் ஊழியம் செய்கிறேன்.
கடந்த 2014 மே மாதம் 7ம் தேதி நேபாள எல்லையில் ஊழியம் செய்ய காடுகளுக்குள் சென்றபோது என்னை தொடர்ந்து வந்த வாலிபர்கள், 45 வயதுடையவர்கள் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க, உடல் வியர்த்து பல இடங்களில் உட்கார்ந்து விட்டனர். ஆனால் கர்த்தர் என்னை
காலேப் கூறியதைப்போல் நடத்தியதை குறித்து இந்த தலையங்கம் எழுதும்போது
என் வாசகர்களுக்கு அறிவித்து துதிக்க விரும்பினேன். எத்தனை கிருபை. எத்தனை இரக்கம். கர்த்தர் என்மேல் காட்டி நடத்துகிறார்.
என்
ஆயுளுக்கு எல்லை உண்டு.
என் ஊழியமும் இப்படியே நீண்டுபோகாது என்பதும் எனக்கு தெரியும். ஆகவே என் ஊழியத்துக்கும் ஒரு எல்லை உண்டு. அது எப்போது என்றுதான் தெரியாது.
வியாதியே இல்லை, தலைவலி அனுபவப்பட்டதில்லை என்று
பெருமையோடு கூறவில்லை. கர்த்தரின் கிருபை எப்படியாய் என்னோடு இருக்கிறது என்பதை அறிவிக்கவே அப்படி கூறினேன். அந்த தலைவலியை நான் அனுபவபட்டதில்லை என்று நான் கூறியதற்கும் ஒரு எல்லை உண்டு. எல்லாவற்றுக்கும்
எல்லை உண்டு. ஆனால் என் ஆண்டவர் என்மேல் வைத்த
கிருபைக்கோ, இரக்கத்துக்கோ எல்லையேயில்லை!. ருசித்துப்பாருங்கள் அந்த கிருபையை.
காலேபைப்பற்றி கர்த்தர் கொடுக்கும் மற்றொரு சாட்சி என்னவென்றால் என் தாசனாகிய காலேப்
வேறே ஆவியை (சுபாவம்) உடையவனாக இருக்கிறபடியால் அவன் உத்தமமாக கர்த்தரை பின்பற்ற முடிந்தது. எண் 14:24.
எனக்கும் கர்த்தர் வித்தியாசமான முறையில் அதே ஆவியானவர் என்னை நடத்துகிறபடியால், நாலுமாவடி
மோகன் சி.லாசரஸ், சகோ.சாம்ஜெபதுரை போன்ற பல கூட்டணிகள் எனக்கு வைத்திருக்கிற
பெயர் குற்றம் சுமத்துகிற ஆவியை உடையவன். ஆம் என் ஊழியம் வித்தியாசம், என்
ஜாமக்காரனில் எழுதும் எழுத்து வித்தியாசம். ஆகவே
நான் வேறு ஆவியை உடையவன்தான். இவர்கள் நல்லநல்ல காரியங்களை
மனிதர்கள்முன் டிவியில், பத்திரிக்கை சாட்சி எழுதினாலும் இவர்கள்
ஜெபத்தில் பெயர் அழைப்பது பொய்யான செயல் ஆகும்.
வியாதிகளின் பெயர் ஜெபத்தில் இவர்கள் கூறுவது
பொய், பத்திரிக்கையில், டிவியில் இவர்களைப்போன்ற
பொய்யான அந்நியபாஷை என்ற பெயரில் இவர்கள் உளறுவது
நூற்றுக்குநூறு பொய்யானது ஆகும். |