முதல்முறையாக FEBA வானொலியில் பிரசங்கம் செய்ய சகோ.எமில்ஜெபசிங் (விஷ்வவாணி,
FMPB பொதுசெயலர்) அவர்கள் நற்செய்தி என்ற பெயரில் வானொலி நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருந்த
Rev.ஆப்பில்பீ என்பவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது
Rev.Applebe அவர்கள் திண்டுக்கல் ரயில்வே கேட் அருகில்
ரிக்கார்டிங் ஸ்டுடியோ அமைத்து நிகழ்ச்சிகள் தயாரித்து
FEBAக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். சகோ.எமில் என்னை அறிமுகப்படுத்திய அன்றே என்னுடைய 11 பிரசங்கங்கள் அங்கு பதிவு செய்யப்பட்டன. அந்த நாட்களில் சகோ.எமில் எந்த ஊழியத்திலும் இல்லை. சாயர்புரம் போப்ஸ் கல்லூரியில் லெக்சரராக பணியாற்றி வாலிபர்கள் மத்தியில் அருமையான ஊழியம் செய்துகொண்டிருந்தார். என் பிரசங்கம்
FEBA வானொலியில் நற்செய்தி நிகழ்ச்சியில் வெளிவந்தவுடன்
நாகர்கோவில் Rev.தேவதாசன் வருகையின் தூதன் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியரின் மூத்தமகனும்,
வருகையின் தூதன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியரும், ஸ்காட் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியருமான சகோ.D.T.ராஜா அவர்கள்
FEBA வானொலியில் வாலிபர் விருந்து என்ற பெயரில் நடத்திய தொடர் வானொலி நிகழ்ச்சியில் என்னை பிரசங்கம் செய்ய வைத்தார். வாலிபர் விருந்து நிகழ்ச்சிக்காக அன்று நான் பாடிய பாடல்கள் மிகவும் பிரசித்தமாக அமைந்தது. ஏராளமான பாடல்களும், பிரசங்கங்களும் வாலிபர் விருந்துக்காக
FEBA (பெங்களுர்) ஸ்டுடியோவில் பதிவுசெய்து ஒலிபரப்பப்பட்டதால் செய்திகள் உலகெங்கும் கேட்கப்பட்டது.
அதன்பின் தான்
இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் வெளிவந்துகொண்டிருந்த
Back to the Bible சத்தியவசன நிகழ்ச்சிக்காக வேதபாடம் நடத்த இலங்கை சத்தியவசன நிகழ்ச்சி பொறுப்பாளர்கள்
Mr & Mrs.மெடோஸ் அவர்களால் இலங்கைக்கு அழைக்கப்பட்டேன். இலங்கை சத்தியவசனத்தில் வெளிவந்த வானொலி பிரசங்கம் மூலமாகத்தான் உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களிடையே நான் பிரபலமாக பேசப்பட்டேன்.
அதே பெங்களுர் குநுடீயு வானொலியில்
இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சிகளை சகோ.DGS.தினகரன் அவர்களுக்காக நான் ஏற்பாடு செய்து ஆரம்பித்து வைத்தேன். அதில் ஆரம்பத்திலும், கடைசியிலும் சகோ.தினகரனை அறிமுகப்படுத்தவும், மற்ற அறிவிப்புகளையும் நான் பேசி முடிப்பேன்.
அவருக்கு பிறகு
மகிழ்ச்சி ஆசிரியர் பாஸ்டர்.ஜீவானந்தம் அவர்களுக்காக
மகிழ்ச்சி என்ற பெயரில் வானொலி நிழச்சிகளை ஆரம்பித்து நானே சகோதரனை அறிமுகப்படுத்தி ஆரம்பித்திலும், கடைசியிலும் அறிவிப்புகளை அறிவித்து ஜெபம் செய்து முடிப்பேன்.
முதல்
முழுஇரவு ஜெபத்தை தமிழ்நாட்டிலேயே நானும், சகோ.DGS.தினகரனும் அவர்களும், பாஸ்டர்.ஜீவானந்தம் அவர்களும், பாகவதர்.வேதநாயக சாஸ்திரியார் அவர்களும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில்
வி.பி ஹாலில் மாதம் ஒருமுறை தொடர்ந்து நடத்தினோம். அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும் நாங்கள் நால்வரும் தனித்தனியாக ஒவ்வொரு பெரிய ஊர்களை மையமாக்கி
முழுஇரவு ஜெபத்தை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தினோம்.
வேதநாயக சாஸ்திரியார் அவர்களை
இலங்கை சத்தியவசன நிகழ்ச்சியில் பேச ஏற்பாடு செய்தேன். அப்படியே சகோ.வேதநாயக சாஸ்திரியாரின் பாடல்களை முதன்முதல் கேசட்டில் பதிவு செய்ய பண உதவிகளுக்கு ஏற்பாடு செய்து உதவ கர்த்தர் கிருபையளித்தார். கர்த்தருக்கே மகிமை உண்டவாதாக. |