பேப்பர் கட்டிங் செய்திகளும், அப்படியே டெல்லியிருந்தும், கேரளத்திலிருந்தும் 22 CSI டையோசிஸ்களிலிருந்து பல விஷயங்கள் எனக்கு அனுப்பிகொண்டியிருப்பார்கள். ஆகவே கன்வென்ஷனுக்கு என்னை அழைத்தாலும் அழைக்காமல் போனாலும் ஜாமக்காரன் பத்திரிக்கை ஊழியம் தொடர்ந்து நடைபெறும். குற்றம் செய்தவர்கள் மட்டுமே தங்கள் தவறுகள், ஊழல்களை ஜாமக்காரனுக்கு தெரிவித்துவிடுவார்களோ என்று பயப்படுவார்கள். மற்றவர்களுக்கு அப்படிப்பட்ட பயம் இல்லாததால்தான் டையோசிஸ் பிஷப்மார்கள் என்னை தொடர்ந்து உபயோகித்துக்கொண்டிருக்கிறார்கள்.

காண்பதை தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்று கர்த்தர் கூறினார். ஏசா 21:6. ஜாமக்காரனே இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டு கேட்க அதற்கு ஜாமக்காரன் விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது நீங்கள் கேட்க மனதானால்... கேளுங்கள் என்று சொல்கிறான். ஏசா 21:11,12. விடியற்காலமும் - இராக்காலமும் எப்போதும் இணைந்து வராது. மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டு வசனத்தின்படி ஜீவிக்கிறவர்களுக்கு கர்த்தரின் வருகை விடியற்காலம்போல் பயமில்லாமல் சந்தோஷமாக அமையும். மனந்திரும்பாத பெயர் கிறிஸ்தவர்களுக்கும், இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கும், அந்த ஒரே நாள் இருளாக இருக்கும். அக்கினி அபிஷேகம் என்று கூறி ஏமாற்றியவர்களும், அக்கினி அபிஷேகம் வேண்டும் என்று அதன் அர்த்தத்தை விளங்கிக்கொள்ள மனதற்றவர்களையும் அக்கினி அபிஷேகம் என்று கூறி ஏமாற்றிய எல்லா ஊழியர்களையும், பாஸ்டர்களையும் அந்த அக்கினியே அழிக்கும்.

கடந்த 50 வருடங்கள் என்னை தங்கள் டையோசிஸ்க்கு அழைத்து ஊழியம் நடப்பித்து அநேக ஆயிரமக்கள் மனந்திரும்ப காரணமாயிருந்த பிஷப்மார்களுக்கும், ஆயர்களுக்கும், பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களுக்கும் ஒவ்வொரு சபை நிர்வாகிகளுக்கும், இந்த விசேஷித்த நாட்களில் என் வாழ்த்துதலை கூறிக்கொள்கிறேன்.

கடந்த 50 வருடங்களாக காணிக்கைகளால், ஜெபங்களால் தாங்கி அவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து தாங்கிவந்த என் அருமை வாசகர் குடும்பங்களுக்கும், அவர்களின் பிள்ளைகள் சந்ததிகள் யாவருக்கும் என் வாழ்த்துதலை கூறிக்கொள்கிறேன்.

என் 50 வருட ஊழியத்தில் நான் ஊழியம் தொடங்கிய ஆறாவது வருடம் என் வாழ்வில் இணைந்த என் வாழ்க்கை துணையான என் அன்பு மனைவி திருமதி.மங்களவதனி அவர்களுக்கும் நான் வாழ்த்துதல் கூறியாகவேண்டும். என் சுபாவம் எப்போது மாறும் என்று சொல்லமுடியாது. அது மிகவும் வித்தியாசமான சுபாவம் ஆகும். வெளி உலகத்துக்கு அது தெரியாது. எப்போதும் நான் யோசித்துக்கொண்டேயிருப்பேன். அப்படிப்பட்ட என் சுபாவத்துக்கு ஏற்றப்படி என்னை அனுசரித்து சகித்துபோவது என்பது விசேஷ தாலந்தும், சாமத்தியமுமாகும். அதற்கு விசேஷ ஞானம், விசேஷ தேவக்கிருபை வேண்டும், தேவன் அதை என் மனைவிக்கு கொடுத்திருக்கிறார். அவைகளையெல்லாம் ஜெபித்து பெற்றுக்கொண்டு என் 50 வருட ஊழியத்தில் உறுதுணையாக இருந்து என்னை ஜெபத்தில் தாங்கின தாங்கிக்கொண்டிருக்கும் என் அன்பு மனைவிக்காக தேவனை துதிக்கிறேன். நான் வீட்டில் தங்குவது வாரத்தில் இரண்டு நாட்கள்தான். ஆகவே என் அலுவலக வேலை முழுவதும், இமெயில், கடிதங்கள், மணியார்டர்கள், அதோடு இடைவிடாது வரும் தொலைபேசி ஜெபவேண்டுகோள் எல்லாவற்றையும் மிகப்பொறுப்போடும், பொறுமையோடும் கையாளும் என் மனைவியின் பொறுமை எல்லையற்றது. என் மனைவியின் ஜெபத்தையும் ஆலோசனையும் பலர் கேட்டு நன்மையடைந்துள்ளார்கள். கர்த்தர்தாமே அவருக்கு ஏற்ற பெலனை தந்து அவர் தனது 70வது வயதிலும் என் ஊழியத்தில் என்னை தொடர்ந்து தாங்க கர்த்தர் அருள்புரிவாராக. என் மனைவிக்கு அருளிய விசேஷ கிருபைக்காக தேவனை துதிக்கிறேன்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN