இயேசு அழைக்கிறார் பத்திரிக்கை 2009
நவம்பர் 39ம் பக்கம் தானி 9:21,22, நியா 13:2, லூக் 1:11, லூக் 1:26,27, லூக் 2:9, மத் 2:13, அப் 8:26 இந்த குறிப்பிட்ட வசனங்களில்
மனோவாவின் மனைவி, புதிய ஏற்பாட்டில் சகரியா, மரியாள், மேய்ப்பர்கள், யோசேப்பு, பிலிப்பு ஆகியவர்களுடன்
தேவ தூதர்கள் பேசினார்கள். இப்படி தேவதூதர்கள் பேசும்
பாஷையை நாமும் விளங்கிக் கொள்ள வேண்டுமானால் நாம் தூதர்களின் பாஷையை அறிந்திருக்கவேண்டும். இதை விளங்கிக் கொள்ளத்தான்
தேவன் நமக்கு புது தெய்வீக பாஷையை (அந்நியபாஷை) தருகிறார். (மாற் 16:17,1 கொரி 13:1).
இதற்கு இவர் ஒப்பிடும் வசனம் விசுவாசிக்கிறவர்கள்
நவமான பாஷைகளை பேசுவார்கள், நான் தூதர் பாஷைகளை பேசினாலும் அன்பு எனக்கு இல்லாவிட்டால்..... என்ற வசனத்தை ஆதாரமாக காட்டுகிறார். இதில்
நவமான பாஷைகள் என்றால் தூதர்கள் பாஷையா? பாஷைகள் பேசுவதைவிட
மிகமுக்கியமானது அன்பு என்பதை முக்கியப்படுத்தத்தான்
பவுல் நான் தூதர்கள் பாஷையை பேசினாலும் அது எனக்கு பிரயோஜனமில்லை என்று குறிப்பிடுகிறார். இந்த சின்ன விஷயத்தைக்கூட விளங்கிக்கொள்ள முடியாத இவர்களின் வேத அறிவு குறித்து என்ன சொல்ல?. மேலும்
மனோவா, சகரியா, மரியாள், மேய்ப்பர்கள், யோசேப்பு, பிலிப்பு ஆகியவர்கள் எல்லாரும்
தூதர் பாஷைகளை படித்தவர்களா? அன்று மேய்ப்பர்கள்
பரிசுத்த ஆவியினால் நிறைந்து தூதர் பாஷையை கற்றக்கொண்டார்களா? என்ன அறியாமை இது? தூதர்கள் இவர்களுடன் பேசும்போது
எபிரேய பாஷையிலும், அரமேய பாஷையிலும்தான் பேசியிருக்க வேண்டும். காரணம் தூதர்களுக்கு
எல்லா பாஷைகளும் தெரியுமே!. பழைய ஏற்பாட்டில் தானியேலோடும், புதிய ஏற்பாட்டில்
கொர்நெல்லிசோடும் தூதர்கள் நேரிடையாக வந்து பேசினார்கள்.
அவரவர்களின் பாஷையில்தானே தூதர்கள் செய்தியை அறிவித்தார்கள். தூதர்கள் தங்கள் பாஷையில் சொல்லும் தேவசெய்தியை புரிந்துக்கொள்ளவதற்காகவே கர்த்தர் இவர்களுக்கும், நமக்கும்
புது தெய்வீகபாஷையை நமக்கு தருகிறார் என்று பால்தினகரன் கூறுகிறார். இவர்கள் ஏன் இப்படி
தவறான, பொய்யான செய்திகளை தவறான வியாக்கியானங்களை மக்களுக்கு சொல்லி தூதர்கள் பாஷையை பெற்றுக்கொள்ள மக்களை ஏங்க வைக்கிறார்கள்?. இது கொடுமையானதாகும். |