தன் மனைவி தன் தாயை நேசிக்கவும், தன் சகோதரிகளை நேசிக்கவும், நியாயமான தேவைகளுக்கு தன் மனைவி மூலமாகவே தன் பெற்றோர், சகோதர, சகோதரிகளுக்கு உதவி செய்ய தன் மனைவியை ஆரம்பத்திலேயே ஜெபத்தோடு தயார்படுத்துவான். இப்படிப்பட்ட ஜெப ஆயத்தமும், ஞானமுமில்லாமல் கூட்டுக்குடும்பத்தில் வாழும் தம்பதிகள் பலவிதமான மனவேதனைக்குள் அகப்பட்டு, மனநிம்மதி இழக்கிறார்கள். மனைவி தனிகுடித்தனம் நடத்த கூட்டுக்குடும்பத்தைவிட்டு பிரிந்துபோக கணவனை கட்டாயப்படுத்துவாள். அதன் பிறகு எப்போதும் அந்த வீட்டில் போராட்டங்கள்தான். மனசமாதானம் குறைந்து ஜெபிக்க முடியாமல் கணவனும், மனைவியும் கர்த்தரைவிட்டு அகன்றுபோவார்கள்.


வேறு சில வித்தியாசமான குடும்பங்கள்:

கூட்டு குடும்பத்தில் அகப்படாமல் சில தம்பதியர் உண்டு. இவர்கள் வாழ்க்கையில் மனைவியும், வேலைக்கு போவார், புருஷனும் வேலைக்கு போவார். இப்படிப்பட்ட குடும்பத்தில் மாமியார் பிரச்சனை அதிகம் இருக்காது. ஆனால் உன் பணம், என் பணம் என்று தம்பதியர் இருவரும் பிரித்துப்பார்க்க தொடங்கிவிட்டால் அங்கு உண்மையான அன்பு நீங்கிவிடும். ஒருமனம் இவர்களுக்குள் இருக்காது. இருவரும் சம்பாதிக்கிறார்கள் இருவரும் சம உரிமை எதிர்ப்பார்ப்பார்கள். யாரும், யாருக்கும் கீழ்படிந்து, பணிந்துப்போவதை அடிமை வாழ்க்கை எனக்கு கருதுவார்கள். பல குடும்பங்களில் சொந்தக் காலில் நிற்கும் தைரியம் கிடைத்த பெண்கள் கணவனை மதிக்கமாட்டார்கள். இதனால்தான் பல குடும்பங்களில் கணவன்மார் மனைவியை வேலைக்கு அனுப்புவதில்லை.

தம்பதிகள் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் வேதவசனத்தின் படி விசுவாசி-விசுவாசியைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் திருமண வாழ்க்கை அமைந்திருக்கும். நல்ல ஆவிக்குரிய பெற்றோர்களாக இருந்தால் இரட்சிக்கப்பட்ட பெண்ணணயும் - ஆணையும் தேடி கண்டுபிடித்து, ஜெப ஆயத்தத்துடன், தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைப்பார்கள். அந்த முறையில் திருமணம் செய்த தம்பதிகள், கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தாலும், தனிக்குடித்தனம் நடத்தினாலும் கணவன்-மனைவி இருவரும் இணைந்து ஜெபித்து, இருவரும் ஏகசிந்தையுடன் திட்டமிட்டு செயல்படுவார்கள். அந்த குடும்பம் குட்டிப் பரலோகம்போல அமைந்துவிடும். அதன் காரணமாக சரீரத்திலும், ஆத்துமாவிலும் சந்தோஷத்தை அந்த தம்பதிகள் நிச்சயமாக அனுபவிக்க இயலும்.


விவாகரத்து தேவனுக்கு பிரியமானது அல்ல:

கர்த்தர் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்று பவுல் கூறுகிறார். திருமணம் செர்க்கத்தில் நிச்சியிக்கப்படுகிறதாக உலக மக்கள்தான் கூறுவார்களேதவிர நம் வேதம் அப்படிக் கூறுவதில்லை. வேதத்தில் கர்த்தர் இணைத்ததை என்று கூறப்பட்ட அந்த வசனம் வேதவசனத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்டவர்களை குறிப்பதாகும். வசனமும்-தேவனும் ஒன்றே! வார்த்தை - மாம்சமாகி என்று யோவான் கூறுகிறார். வசனத்துக்கு கீழ்படியாதவன் கர்த்தருக்கு கீழ்ப்படியாதவனாகிறான். இந்த வசனத்தின்படி தேவன் இணைத்தது என்றால் இரட்சிக்கப்பட்ட விசுவாசி, இரட்சிக்கப்பட்டவரை திருமணம் செய்வதைதான் குறிக்கும். அதனால்தான் அந்நிய நுகத்தில் இணைக்கப்படாதிருங்கள் என்று வேதம் கூறுகிறது. அப்படி வேதவசனத்தின்படி ஒரு விசுவாசி - மற்றொரு விசுவாசியை திருமணம் செய்தால் அவர்களைத்தான் தேவன் இணைத்தது என்று கூறலாம்.

கர்த்தர் சொல்வதை கவனியுங்கள்: 1 கொரி 7:10 விவாகம் செய்தவர்களுக்கு கர்த்தர் உரைப்பதாவது என்று பவுல் ஆரம்பிக்கிறார். விவாகம் செய்வதர்களுக்கு ஆலோசனை கொடுக்கும்போது மட்டும் கர்த்தர் அவனுக்கு தனிப்பட்ட முறையில் கூறியதை, கர்த்தர் சொன்னார் என்று குறிப்பிடுகிறார். அதாவது அவர் கூறுவது அவரின் சொந்த ஆலோசனையல்ல, என் மூளையிலிருந்து உதித்த ஆலோசனையல்ல அது கர்த்தரின் அனாதி நோக்கமாகும் என்பதுதான் அதன் அர்த்தம்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN