கூட்டு குடும்பத்தில் அகப்படாமல் சில தம்பதியர் உண்டு. இவர்கள் வாழ்க்கையில் மனைவியும், வேலைக்கு போவார், புருஷனும் வேலைக்கு போவார். இப்படிப்பட்ட குடும்பத்தில் மாமியார் பிரச்சனை அதிகம் இருக்காது. ஆனால்
உன் பணம், என் பணம் என்று தம்பதியர் இருவரும் பிரித்துப்பார்க்க தொடங்கிவிட்டால் அங்கு உண்மையான
அன்பு நீங்கிவிடும். ஒருமனம் இவர்களுக்குள் இருக்காது. இருவரும் சம்பாதிக்கிறார்கள் இருவரும்
சம உரிமை எதிர்ப்பார்ப்பார்கள். யாரும், யாருக்கும் கீழ்படிந்து, பணிந்துப்போவதை
அடிமை வாழ்க்கை எனக்கு கருதுவார்கள். பல குடும்பங்களில்
சொந்தக் காலில் நிற்கும் தைரியம் கிடைத்த பெண்கள் கணவனை
மதிக்கமாட்டார்கள். இதனால்தான் பல குடும்பங்களில் கணவன்மார் மனைவியை வேலைக்கு அனுப்புவதில்லை.
தம்பதிகள் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் வேதவசனத்தின் படி
விசுவாசி-விசுவாசியைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் திருமண வாழ்க்கை அமைந்திருக்கும். நல்ல ஆவிக்குரிய பெற்றோர்களாக இருந்தால் இரட்சிக்கப்பட்ட பெண்ணணயும் - ஆணையும் தேடி கண்டுபிடித்து, ஜெப ஆயத்தத்துடன், தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைப்பார்கள். அந்த முறையில் திருமணம் செய்த தம்பதிகள்,
கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தாலும், தனிக்குடித்தனம் நடத்தினாலும் கணவன்-மனைவி இருவரும் இணைந்து ஜெபித்து, இருவரும் ஏகசிந்தையுடன் திட்டமிட்டு செயல்படுவார்கள். அந்த குடும்பம்
குட்டிப் பரலோகம்போல அமைந்துவிடும். அதன் காரணமாக சரீரத்திலும், ஆத்துமாவிலும் சந்தோஷத்தை அந்த தம்பதிகள் நிச்சயமாக அனுபவிக்க இயலும்.
|