இன்றைய நவீன பெந்தேகோஸ்தே சபைகள், கரிஸ்மேட்டிக் உபதேசம் கொண்ட
ஊழியர்கள் ஆகியவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் - அந்நியபாஷை என்ற பெயரில் மிகவும்
அவமானப்படுத்தப்படுகிறார். அந்நியபாஷை இப்படிப்பட்டவர்களிடம் அகப்பட்டு படாதபாடு படுகிறது.
இவர்களின் அக்கினி அபிஷேகம், ஆவியின் நீர்வீழ்ச்சி, அபிஷேக ஆராதனை, துதி ஆராதனை அபிஷேகம் என்ற பல பெயரில் கவர்ச்சியாக மக்கள்முன் அறிவிக்கப்பட்டு,
வல்லமை முகாம் என்றும் ஆவியின் வல்லமை பெற்றுக்கொள்ளுதல் இப்படியெல்லாம் அறிவிக்கப்பட்டு
படித்தவர்கள், படிக்காதவர்கள், பாமரர்கள், பிரச்சனையுள்ளவர்கள் இப்படிப்பட்டவர்கள் இவர்களின் இப்படிப்பட்ட கவர்ச்சி அறிவிப்பைக் கேட்டு இப்படிப்பட்டவர்களின் கூட்டத்தில் கலந்துக் கொண்டதால்
பைத்தியக்காரர்களாக மாற்றப்படுகின்றனர்.
பிசாசு இப்படிப்பட்ட ஊழியர்களை தன்வசப்படுத்தி தன்னுடைய கடைசிக்கால திட்டத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறான்.
இதுவரை இவர்கள் கூட்டத்தில் பிசாசானவன் பிரசங்கத்துக்கு
பின் அல்லது பிரசங்கத்தின் முன் கொஞ்சம்
அந்நியபாஷை என்ற பெயரில் சபை மக்களை உளற வைப்பான். ஆனால் இப்போது முழுகூட்டமும்
அந்நியபாஷை பேசும் கூட்டம் என்ற பெயரில் ஒரு புது அறிவிப்பை பிசாசு சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளான்.
அற்புதப் பெருவிழா, அமாவாசை இரவு, பாஸ்டர்களின் அமாவாசை ஜெபம் இப்படி கிறிஸ்தவ
மந்திரவாதிகளாக பரிமளித்த இவர்கள் இப்போது புதுமையான பிசாசின் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
பாஸ்டர்.விக்டர் ராஜாமணி
சென்னை AG சபை பாஸ்டர்.விக்டர் ராஜாமணி அவர்கள் நடத்தும் பத்திரிக்கையில்தான் அந்த அற்புத அறிவிப்பை காண நேர்ந்தது. சென்னை ஜாமக்காரன் வாசகர்கள் சிலர் அவருடைய சபையை சேர்ந்தவர்களே! அந்த குறிப்பிட்ட அறிவிப்பு பகுதியை போட்டோ காப்பி எடுத்து எனக்கு அனுப்பியுள்ளார்கள்.
அவருடைய பத்திரிக்கை பக்கம் 8ல் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
10 நாள் அந்நியபாஷை ஜெபம் தினமும் 6 மணிமுதல் 8 மணிவரை நடத்தப்படும் 10 நாட்களும் அந்நியபாஷையிலேயே ஜெபம் செய்வது எப்படி?
இந்தியாவில் அல்லது தமிழ்நாட்டில் எங்காவது இப்படி
10 நாட்கள் விடாமல் அந்நியபாஷையில் ஜெபிப்பது என்பதை கேள்விப்பட்டதுண்டா?. அதன் அறிவிப்பை அடுத்த பக்கத்தில் பாருங்கள். |