ஒரு பாட்டில் இந்த இடம் அசைய உள்ளம் நிறைய இறங்கி வாருமே என்று
சகோ.சாம்ஜெபதுரை அவர்கள் எழுதிய பாட்டை இன்று பலர் பாடுகிறார்கள்.
எதற்கு இடம் அசையவேண்டும். ஆராதனை நடக்கும் சபையில்
இடம் ஏன் அசையவேண்டும் என்று யாராவது யோசித்தது
உண்டா? ஒருவர் இப்படி கேட்கிறார். இவர்தான் தவறாக அந்தபாட்டை
எழுதிவிட்டார். ஆனால் எல்லா பெந்தேகோஸ்தே சபையினரும் இடம்
அசையவேண்டும் என்று நாம் ஏன் பாடவேண்டும்?. இடம் அசைக்க நாம்
ஏன் ஜெபிக்கவேண்டும்?. இப்படி கேட்பதில் ஒரு அர்த்தம் வேண்டாமா? என்று
யாரும் யோசிக்கவில்லை. அப்படி இடம் அசைந்ததானால் ஆராதிக்கும் கட்டிடம் சமீபத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பல நூறுபேர் மரித்துபோனதுபோல் சம்பவிக்குமே!.
மேலும் பாஸ்டர்.விக்டர் ராஜாமணி பரிசுத்த ஆவியானவரின்
அக்கினிக்கு மேற்கோள் காட்டிய வசனங்களை படித்துப்பாருங்கள். 1 ராஜா 8:38-39,ஏசா 6:6-7, சகரியா 2:5, 2 ராஜா 6:17, உன்னத 8:6-7,லேவி 6:13, யாத் 3:2-4, எரே 20:7-9,2 தீமோ 1:6,ரோ 12:11 இந்த வசனங்களில் ஏதாவது ஒன்று
பரிசுத்த ஆவியானவரை குறிக்கிறதா? யோசித்துப்பாருங்கள்!.
எண்ணைக்கு
ஒப்பான ஆவியானவர் என்று 1 சாமு 10:1, 16:1 வசனங்களை குறிப்பிட்டு எழுதியுள்ளார். இங்கு குறிப்பிட்ட இந்த இரண்டு வசனமும்
ஆவியானவரைக்குறிக்கும் வசனம் அல்ல. இதில் அபிஷேகம் என்ற ஒரு வார்த்தை வந்துவிட்டதாம். உடனே அதற்கு
பரிசுத்த ஆவியானவர் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
அபிஷேகம் என்றால் நியமிக்கப்படுவது என்று அர்த்தம். சவுலை இஸ்ரவேலுக்கு ராஜாவாக அவன்மேல் என்னை வார்த்து
அபிஷேகம் பண்ணு என்றால் அவனை ராஜாவாக நியமி என்று கர்த்தர் கூறுகிறார் என்பதுதான் அதன் அர்த்தம். அதே 1 சாமு 16:1ல்
உன் கொம்பை தைலத்தால் நிரப்பி கொண்டுவா என்பது, வேறு ஒருவரை ராஜாவாக நியமிக்க கர்த்தர் சாமுவேலோடு கூறும் இடம் ஆகும்.
தைலம், எண்ணை என்பதை பரிசுத்தாவியானவர் என்று இவர்கள் கூறுவது இவர்களின் சொந்த வியாக்கியானமாகும். ஆலய சாமான்களை
அபிஷேகம் செய் என்று கர்த்தர் கூறுகிறார். அப்படியானால் ஆலயசாமான்கள்
பரிசுத்த ஆவியால் நிரப்பு என்று கர்த்தர் கூறுகிறாரா?. என்ன முட்டாள்தனமான வியாக்கியானம் இது. ஆலயபணி பொருட்களை அபிஷேகம் செய்வது என்றால் அந்தபொருட்கள்
ஆலய உபயோகத்துக்காக மட்டும் உபயோகப்படுத்தபடவேண்டும் என்றுதான் அர்த்தம். இந்த சின்ன விஷயம்கூட பெரிய ஊழியர்களான பல பெந்தேகோஸ்தே பாஸ்டர்மார்களுக்கு தெரியாமல் இருப்பது குருடன் - குருடனுக்கு வழி காட்டுவதுபோல தானும் - தவறாக புரிந்துக்கொண்டு தன் சபை மக்களையும், தவறாக புரிய வைத்து
சபை மக்களை இவர்கள் குருடர்களாக நடத்துகிறார்கள்.
எண்ணை என்பது பரிசுத்தாவிக்கு அடையாளம் என்பதற்கு
பாஸ்டர்.விக்டர் ராஜாமணி அவர்கள் குறிப்பிடும் வசனங்களை வாசித்துப்பாருங்கள். சங் 45:7, எபிரேயர் 1:9.
ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார் என்ற இதே வசனத்தை
எபிரேயர் நிருபத்தை எழுதியவர். எபி 1:9ல் மேற்கோள்காட்டி எழுதியுள்ளார். இதில் பரிசுத்த ஆவியானவரை எண்ணையோடு எந்த வகையில் ஒப்பிடமுடியும்?.
யாத் 29:7, ஏசா 61:3 ஆகிய வசனங்களை குறிப்பிட்டு
தைலம் ஆறுதல் தருகிறது என்று எழுதியுள்ளார். லூக் 10:34, யாக் 5:14, மத் 25
எண்ணெய் எரிய செய்கிறது என்று குறிப்பிடுகிறார். சங் 33:5, 92:10, 1 சாமு 9:16 ஆகிய இந்த வசனங்கள் எந்த வகையில் பரிசுத்த ஆவியானவரோடு ஒப்பிடமுடியும்.
காற்று ஆவியானவரின் முதல் இறக்கத்துக்கு அங்குள்ள யூதர்களுக்கு கர்த்தரால் காட்டப்பட்ட அடையாளம் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். ஆனால் பாஸ்டர்.விக்டர்ராஜாமணி யோபு 37:21,22, 1இராஜ 19:11, எசே 37:9, 10:14, யோ 3:8, 1 கொரி 12:11 ஆகிய இன்னும் ஏராளமான வசனங்களை சம்பந்தமே இல்லாமல்
பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்பிட்டு எழுதியுள்ளார். |