Dr.புஷ்பராஜ் எப்போதும் பிஷப்மார்களை குறிவைத்து பிஷப்மார்களை அவமானப்படுத்தும் விதத்தில் எழுதுகிறார். ஆகவே இனி நம் டையோசிஸ்களில் டாக்டரை கன்வென்ஷன்களில் பேச அனுமதித்தால் நம் டையோசிஸ்ஸின் அல்லது பிஷப்மார்களின் பல ரகசியங்கள், ஊழல்களை, நம் ஆயர்களில் பலர் டாக்டரிடம் கூறிவிடுகிறார்கள் அல்லது சபையில் உள்ளவர்கள் அவரிடம் அறிவித்து விடுகிறார்கள். உடனே டாக்டர் அதை விசாரிக்காமல் ஜாமக்காரனில் எழுதிவிடுவதால் மக்கள் பிஷப்மார்களை அல்லது ஆயர்களை மதிப்பதில்லை. அதனால் அவமானமடைய வேண்டியுள்ளது என்று சில பிஷப்மார் நினைத்து என்னை கூட்டங்களுக்கு அழைக்கக்கூடாது என்று எழுதிய அறிக்கையாக ஆயர்களுக்கு அனுப்பாமல்,
வாய்மொழியாக என்னை அழைக்கக்கூடாது என்று ஆயர்களுக்கு அறிவித்ததாக அறிந்தேன்.
நான் யாரையும், எந்த ஊழியனையும், பிஷப்மார்களையும், எந்த சபைகளையும்
குறிவைத்து உள்நோக்கத்தோடு எழுதுவது இல்லை. பிஷப்மார்களை, ஆயர்களை, பாஸ்டர்களை, ஊழியர்களை மதிக்கிறேன். அதிகாரிகளை மதிக்கவேண்டும் என்றும், தீதாய் பேசக்கூடாது என்றும், அதிகாரிகளுக்கு கீழ்படியவேண்டும் என்றும் நம் வேதம் போதிப்பதை நான் அறிவேன்.
ஆனால் ஊழல்கள், தவறுகள் நடந்ததை எனக்கு என் வாசகர்கள் அறிவித்து என் வாசகர்களாகிய ஆயர்கள், சபை மக்கள் என்னிடம் கேள்விகள் கேட்கும்போது அவர்களுக்கு நான் அறிந்ததையும் என் வாசகர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் சபைக்குள் இருந்தபடி அதை எப்படி நேரிடவேண்டும் என்பதையும் ஆலோசனையாக பத்திரிக்கையில் அறிவிக்கிறேன். எச்சரிக்கிறேன். அது பல சமயங்களில் பெரிய பிரசித்திபெற்ற ஊழியனையும் அல்லது பிஷப்மார்களையும் பாதிப்படைய செய்கிறது அதை என்னால் தவிர்க்க
இயலாது.
இப்படி இவர்களைப்பற்றிய தகவல்கள், ஆதாரங்கள் கன்வென்ஷனில் நான் பிரசங்கம் செய்ய வரும் இடங்களில் யாரும் எனக்கு அவைகளை கொடுப்பதில்லை. சேலத்துக்கே அனைத்து தகவல்களும், போட்டோ ஆதாரங்களுடன் என் வீட்டுக்கே வாசகர்கள் அனுப்பிவிடுகிறார்கள்.
|