பவுல் கொரிந்து சபைக்கு கடிதம் (நிருபம்) எழுதும்போது சபையில் நீங்கள்
அந்நியபாஷையில் பேசிக்கொண்டிருக்கும்போது அவிசுவாசி ஒருவன் உள்ளே நுழைந்தால் உங்களை
பைத்தியக்காரன் என்பானே என்று கண்டித்து பேசிய வசனங்களை இந்த மூன்று பேரும் (மோகன் சி.லாசரஸ், வின்சென்ட் செல்வகுமார், சாதுசெல்வராஜ்) படிக்கவில்லையோ? என்ன கூத்து இது?. சபைக்கே பவுல் அப்படி கட்டளையிட்டிருக்க இந்த மூவரணி பொய் தரிசனகாரர்கள் தமிழ்நாடு முதல்,
ஏஞ்சல் டிவி எங்கெங்கு காணப்படுகிறதோ அங்கெல்லாம் எத்தனை
புறமதத்தினர் எத்தனை RSS இயக்கத்தினர், அந்த காட்சியை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் மோகன் சி.லாசரஸ் ஆவியானவரின்
அந்நியபாஷை என்ற பெயரில் உளறுவதைப் பார்த்து என்ன சொல்வார்கள்?. இப்படிப்பட்ட உளறல்களை வெளி உலக மக்கள் காணும் வகையில் பேசலாமா? நிச்சயமாக இவர்களுக்கு நடுநடுவே கொஞ்சம் மூளையில் ஏதோ பாதிப்பு உண்டாகிறது அல்லது படித்த
கிறிஸ்தவ பைத்தியக்காரர்கள் என்றெல்லவா கூறுவார்கள். இந்த நிகழ்ச்சி டிவியில் வந்த அன்று நான் தங்கியிருந்த வீட்டில் உயர்நிலை பள்ளி பிள்ளைகள் யாவரும் அந்த நிகழ்ச்சியை பார்த்து கேலியாக சொல்லிசொல்லி சிரித்தார்களே? சிறுவர்களில் சிலர் இவர்கள் உளறிய மாதிரியே
லா பாபா என்று தாங்களும் சொல்லி பார்த்துக் கொண்டார்கள். அவர்களைப்போல் நானும் பேசுவேன் என்று அந்த பிள்ளைகள் அன்று கூறி சிரித்தது எத்தனை வேதனை! பயபக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தின் அந்த வாலிபபிள்ளைகளும், சிறுபிள்ளைகளும் கூட இவர்களின் உளறல்களை பார்த்து கிண்டல் அடித்தார்களே!. சிரித்தார்களே!, ஒரு இந்துமத குடும்பத்தினர் அல்லது முகமதிய மதமக்கள் இவர்கள் உளறலை டிவியில் பார்த்து என்ன என்று நினைப்பார்கள்?. சற்று யோசியுங்கள். சபையின் நாலு சுவர்களின் உள்ளே அல்லது
ஏசி அறைக்குள்ளே பேசியிருந்தால், உளறியிருந்தால் அது வேறு விஷயம். ஆனால்
மைக் வைத்து, ஒலிபெருக்கி வைத்து அல்லது
TV திரையில் உலக மக்கள் காண இப்படி உளறி ஆவியானவரை அவமானப்படுத்தலாமா?.
பாஸ்டர்.விக்டர் ராஜாமணி, பாஸ்டர்.மோகன், பாஸ்டர்.ஆல்வின் தாமஸ், ஜெப்ரி, ஆலன்பால், சாம்ஜெபதுரை, சேனாபதி இன்னும் திரளான ஊழியர்களும்
ஏஞ்சல் டிவி மூவரணியினரும் பரிசுத்த ஆவியானவரை
அந்நியபாஷை என்ற பெயரில் கொத்து புரோட்டாவை கொத்துவதைப்போல் கொத்தி கொத்தி இப்படியா அவமானப்படுத்துவது!.
புத்தியுள்ளவன் சிந்திக்கக்கடவன் - ஆவியானவர் இப்படிப்பட்ட ஊழியர்களாலும், பெந்தேகோஸ்தே பாஸ்டர்களாலும் உலக மக்கள் முன் தூஷிக்கப்படுகிறார்!.
தேவன் தம்மை பரியாசம் பண்ண ஒட்டார் என்று வேதம் கூறுகிறது.
இவர்கள் எல்லாரின் இப்படிப்பட்ட கூத்துக்கு ஒரு முடிவு நிச்சயம் உண்டு!.
5 வகுப்பு வரை மட்டும் படித்த ஒருவர் பெந்தேகோஸ்தே
சபை பாஸ்டராக இருக்கிறார். அவர் தன் ஆராதனையில் ஜெப வேளையில்
Yes Jesus, Yes Jesus, எஸ் ஜீசஸ், எஸ் ஜீசஸ் என்று கூறி பிறகு தீர்க்கதரிசனம் கூறுவார். இதற்கு அர்த்தம் ஆண்டவர் என்னமோ அவரின் காது வழியே பேசுகிறாராம்.
அதற்கு இவர் பதில் கூறும் வண்ணம் ஆமாம் கேட்கிறேன் சொல்லும்
என்பதற்குரிய பதிலாக Yes Jesus, எஸ் ஜீசஸ் என்று பதில் கூறுகிறதை சபைமக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவும், தனக்கும் ஆங்கிலம் தெரியும் என்பதை சபை மக்களுக்கு அறிவிக்கவுமே இந்த போலித்தனமான ஏற்பாடு? சின்ன பையன் சாமுவேல் கர்த்தரின் சத்தம் கேட்டபோது அதை ஆசாரியனான
ஏலிதான் பேசுகிறார் என்று பிழையாக அவன் நினைத்து, தாத்தா என்னை கூப்பிட்டீர்களா? என்றான்.
ஏலி உடனே விளங்கிக்கொண்டார். கர்த்தர் அந்த
பையனுடன் பேச விரும்புகிறார் என்பதை அறிந்த ஏலி மகனே, அடுத்தமுறை பேசும் சத்தம் நீ கேட்டால்,
கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்று பதில் சொல் என்று சொல்லிக்கொடுத்தான். அடுத்த முறை கர்த்தர் மறுபடியும் சின்னபையன் சாமுவேலோடு பேசினார். இவனும்
ஏலி சொல்லி கொடுத்த மாதிரி பதில் கொடுத்தான். உடனே
கர்த்தர் அவனோடு சொல்ல வேண்டியதை சொன்னார். இவனும் அதைகேட்டு அதன்படி செய்தான் என்று வேதத்தில் வாசிக்கிறோம். இந்த இடத்தில் சாமுவேல் கர்த்தரிடம் பதில் சொல்லும்போது தூதர்கள் பாஷையோ,
பரலோக பாஷையிலோ பேசவில்லை!. அவனுடைய தாய்மொழியான
எபிரேய பாஷையில்தான் பேசினான். |