வாழ்க்கையில் இவ்வளவு பிரசங்கங்கள் கேட்டு, பல ஆண்டுகள் சபைக்கு சென்று, கூட்டங்களுக்கு சென்று, ஒருவன்கூட உங்கள்மூலம் மனந்திரும்பவில்லையென்றால் நீங்கள் ஆவிக்குரியவர்கள், கிறிஸ்தவர்கள், கர்த்தர் எங்களோடு இருக்கிறார் என்று சொல்லிக்கொள்வது அர்த்தமற்றது. ஆழமாய் யோசித்துப்பாருங்கள். இத்தனை காரியங்களின் விளைவுகள் என்ன?


4. சாட்சியாக வாழ்வான் அப் 1:8.

இந்த வசனத்தில் வருகிற சாட்சி என்ற வார்த்தை சபையில் தலை வலித்தது ஜெபித்தேன் சுகமானது என்று ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக சொல்லுகின்ற சாட்சி அல்ல.

கிரேக்க வார்த்தை: "மார்ட்டியோ" GK:Marts of martio: அதாவது 1. இரத்தசாட்சியாக வாழ்வது, 2. இரத்த சாட்சியாக மரிப்பது.

மரிப்பதைவிட இரத்தசாட்சியாக வாழ்வது கடினம். பவுல் கூறுகின்றார். நான் அனுதினமும் சாகிறேன். ஆவிக்குரியவன் எந்த சூழ்நிலையிலும் சாட்சியை இழந்துப்போகமாட்டான். தன்னுடைய வாழ்க்கையில் எல்லா உபத்திரவங்களையும் தாங்கி கிறிஸ்துவை வெளிப்படுத்துவான். இன்றைக்கு ஊழியம் அநேகருக்கு வயிற்று பிழைப்பாகிவிட்டதினாலும், தேவனுடைய மன்னிப்பை எளிமையாக எடுத்து கொள்வதினாலும், சாட்சியில்லாத வாழ்க்கை அவர்களை மட்டுமல்ல, சாட்சியோடு வாழ்கிற மற்றவர்களையும் ஜனங்கள் தவறாக புரிந்துக்கொள்ள ஏதுவாகிறது.

ஆவிக்குரியவன் என்றால் அவனுடைய சாட்சிதான் அவனை ஆவிக்குரியவன் என்று காட்டும். சாட்சியில்லாவிட்டால் 1000 ஆழமான பிரசங்கம் செய்தாலும் தேவன் கிரியை செய்யமாட்டார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


5. தனக்கு தேவன் (கர்த்தர்) கொடுத்த தோட்டமாகிய சபையில் இருப்பான்.
(மத் 20:1)

தோட்டம் என்றால் சபை என்று அர்த்தம் இது நமக்கு தெரிந்த ஒன்றுதான். நாபோத்துக்கு ஒரு தோட்டம் இருந்தது. 1ராஜ 21:1. சாலமோனுக்கு ஒரு தோட்டம். உன் 8:11, நேசருக்கு தோட்டம் ஏசா 5:1. இயேசுவுக்கு ஒரு தோட்டம் இருந்தது. யோ 18:1. அதேபோல் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் ஒரு தோட்டம் உண்டு. அதை ஜெபித்து தேர்வு செய்யவேண்டும். அநேகர் சொல்வார்கள் அதுவும் சபைதானே அங்கும் பைபிளைத்தானே போதிக்கின்றார்கள். அங்கும் இயேசுவைத்தானே கும்பிடுகிறார்கள்.

ஆகவே ஒவ்வொரு சபையாக சென்று மார்க்கம் தப்பி அலைகிற நட்சத்திரம் என்று யூதா கூறுவதுபோல அலைந்து பிறகு எந்த சபையும் சரியில்லை என்று அவர்கள் ஒரு சபையை தேவன் சொல்லாமலே ஆரம்பிப்பார்கள். 100 சதவீதம் நல்ல சபை எதிர்ப்பார்ப்பவர்கள் உடனடியாக பரலோகம் செல்லலாம். ஆனால் 75 சதவீதம் நல்ல சபை எங்கு இருக்கிறது என்று தேடி கண்டுபிடியுங்கள்.

நாம் சபையை மாற்றுவது அல்ல. சபை நம்மை மாற்றுவதுதான் விஷயம். சபை மாறிபோக வேண்டுமென்றால் சில காரியத்திற்காக

1. பெண்கள் விஷயத்தில் (பாஸ்டர்கள்) ஊழியன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால்,

2. ஒரு பாஸ்டர் அளவுக்கு மீறி தன் குடும்பத்திற்கு சொத்துசேர்க்க ஆரம்பித்தால்,

3. பாஸ்டர் தவறான உபதேசத்தை போதித்தால், மற்றபடி சிறிய சிறிய விஷயத்திற்குகெல்லாம் அல்லது சின்ன பிரச்சனைக்கெல்லாம் சபையை மாற்றுவது சரியல்ல.

ஆகவே ஆவிக்குரியவன் கர்த்தர் தன் வேலைக்கு அமர்த்தின (தோட்டத்தில்) சபையில் இருந்து வேலை செய்து கூலியை பெற்றுக்கொள்வான். விசுவாசிகளாகிய நாம் யாவருக்கும் ஒருநாள் எல்லோரும் ஓரிடத்தில் ஒரே மேய்ப்பன் இயேசுவின் கீழ் இருக்கபோகிறோம் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM