வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர். அடுத்தத்திருப்பம் என்னவென்று சொல்லவியலாது. வாழ்க்கை அள்ளி அளிப்பதைக் கொண்டு சிறப்பாய் செயல்படப் பழகவேண்டும். சிலர் இடிதாங்கிகளாய் துயரங்களை ஏற்று நிற்க உறுதியுள்ளவர்கள். சிலர் துவண்டுவிடுவர். மனநிலைப் பாதிப்புகள் மனநோய்க்கோ தற்கொலைக்கோ வழிநடத்தலாம். ஆகவே முதலாவது நீங்கள் செய்யவேண்டியது துயருர நேரமெடுத்தலாகும். "'அழாதே கண்ணைத் துடைத்துக்கொள். அழுது என்ன பயன், எழுந்திரு. வெளியே வா" என்று சிலர் நல்லெண்ணத்தோடு உங்களை அவசரப்படுத்தலாம். துயரம் என்பது வாழ்வின் ஓர் உண்மை. நேரமெடுத்துச் கொள்ளுங்கள். அழுவது, பிறரை சந்திக்க மறுப்பது, முடங்கிக் கிடப்பது இவையெல்லாம் இயல்புதான் பரவாயில்லை.

துயரத்தில் மூழ்குவோர் ஓராண்டில் பழைய நிலைக்குத் திரும்ப எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள். என்றாவது ஒருநாள் நீங்கள் உண்மையை ஏற்றுக்கொண்டு, எதிர் சக்திகளை முறியடித்து, சவாலை எதிர்க்கொண்டு உயிர்மீட்சியடையத்தான் வேண்டும். வளையிலிருந்து வெளிவந்து மக்களைச் சந்திக்கத் துவங்குங்கள். உங்களைப்போன்ற மக்களுடன் கரங்கோர்த்து, அதே நிலையில் தத்தளித்துக் கொண்டிருப்போரை தாங்கிப்பிடிக்க ஒரு சுமைதாங்கிக் குழுவை உருவாக்குங்கள். புதுக் கலைகளைக் கற்கலாம். கணினியோ, ஓவியக் கலையோ உங்கள் ஆர்வத்தைத் தூண்டிவிடும் எதிலாகிலும் தேர்ச்சியடையலாம். நடப்பதுபோன்ற உடற்பயிற்சி உங்கள் மனதுக்கும் உடலுக்கும் இதமளிக்கும். வாழ்க்கையை அனுபவிக்கப் பழகுங்கள். முன்னோக்கிப் பாருங்கள். பின்னிட்டுப் பார்க்காதேயுங்கள். கடந்த காலத்தின் கைதியாகிவிடாதபடிக்கு விழிப்பாயிருங்கள்.

கடினமான சிக்கல்களுக்குத் தீர்வுகாண தேவன் உறுதியானவர்களைப் பொறுக்கியெடுக்கிறார். மற்றப் பெண்களுக்கு கற்பிப்பதற்காக இந்தக் காரியம் உங்களுக்கு நடக்க நீங்கள் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ என்னவோ, உங்களுக்கு நேரிட்ட ஒரு பயங்கரத்தை அப்படியே திருப்பி பிறருக்கு வழிகாட்டியாக்கலாம்.

உங்கள் நிலையை நினைத்து நொந்து நொந்து வாழ்வை வீணடிக்கக்கூடாது. முன்னேறுங்கள். ஒரு பெண், மனைவி, தாய், எருமை மாட்டைப்போலவாயிருக்கவேண்டும். எழுந்து நில்லுங்கள். தைரியம் கொள்ளுங்கள். வீறுநடை போடுங்கள்.


7. நான் முற்றிலும் தோற்றவள்:

இல்லை. இல்லவேயில்லை. மறுபடியும் உங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர்கள். வாழ்க்கையில் தோல்வியுற்றவர் என்று நம்மை நாம் கணிப்பதற்குக் காரணம் நாம் தோல்வியுற்றவர் என்பதினாலல்ல. நம்முடைய அன்றாட வெற்றிகளை நாம் கணக்கெடுக்காததினால், நீங்கள் வாழ்க்கை ஓட்டத்தில் தோற்றுப் போனவர்கள் என்று பிசாசு சொல்லும் பொய்யை நம்பாதீர்கள். வாழ்க்கையை வானவில்லாய் பாருங்கள். தான் வாழ்க்கையில் முற்றிலும் தோல்வியுற்றவள் என்று என்னிடம் சொல்லி அழுவதற்கென்றே ஒரு பெண்மனி தூரப் பட்டணம் ஒன்றிலிருந்து வந்தார்கள். அவர்கள் கதையைக் கூறும்போது அவர்கள் செய்த பல அசத்தலான காரியங்களைக் கவனித்தேன். தன் கதையை முடித்து, கண்ணைத் துடைத்து, மூக்கை உறிஞ்சியபோது அவர்களது வெற்றிகளை ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டினேன். கண்ணீர் காய்ந்தது. முகம் ஜொலித்தது. "அப்படின்னா நான் தோல்வியடைந்தவள் என்று நீங்கள் நினைக்கவில்லைiயா?" என்று உதடுகள் துடிக்கக் கேட்டார்கள். "சே. இல்லவே இல்லை" என்றேன். புதுப் பெண்மணியாகத் திரும்பிச்சென்றார்கள்.

சிலுவையில் மரித்ததினால் இயேசு தோற்றுப்போனவரோ? உலகமனைத்திற்கும் இரட்சகரானாரே. மண்ணைக் கவ்வியதால் ஏவாள் தோற்றுப்போனவளோ? ஜீவனுள்ளோர் அனைவருக்கும் தாயானாளே. பாவத்தில் விழுந்ததினாலே தாவீது தோற்றுப்போனவரோ? அவர் அழுது அழுது பாடின பாட்டு அனைவரையும் அணைத்துக்கொள்ளுகிறதே.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN