வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர். அடுத்தத்திருப்பம் என்னவென்று சொல்லவியலாது. வாழ்க்கை அள்ளி அளிப்பதைக் கொண்டு சிறப்பாய் செயல்படப் பழகவேண்டும். சிலர் இடிதாங்கிகளாய் துயரங்களை ஏற்று நிற்க உறுதியுள்ளவர்கள். சிலர் துவண்டுவிடுவர். மனநிலைப் பாதிப்புகள் மனநோய்க்கோ தற்கொலைக்கோ வழிநடத்தலாம். ஆகவே முதலாவது நீங்கள் செய்யவேண்டியது துயருர நேரமெடுத்தலாகும். "'அழாதே கண்ணைத் துடைத்துக்கொள். அழுது என்ன பயன், எழுந்திரு. வெளியே வா" என்று சிலர் நல்லெண்ணத்தோடு உங்களை அவசரப்படுத்தலாம். துயரம் என்பது வாழ்வின் ஓர் உண்மை. நேரமெடுத்துச் கொள்ளுங்கள். அழுவது, பிறரை சந்திக்க மறுப்பது, முடங்கிக் கிடப்பது இவையெல்லாம் இயல்புதான் பரவாயில்லை.
துயரத்தில் மூழ்குவோர் ஓராண்டில் பழைய நிலைக்குத் திரும்ப எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள். என்றாவது ஒருநாள் நீங்கள் உண்மையை ஏற்றுக்கொண்டு, எதிர் சக்திகளை முறியடித்து, சவாலை எதிர்க்கொண்டு உயிர்மீட்சியடையத்தான் வேண்டும். வளையிலிருந்து வெளிவந்து மக்களைச் சந்திக்கத் துவங்குங்கள். உங்களைப்போன்ற மக்களுடன் கரங்கோர்த்து, அதே நிலையில் தத்தளித்துக் கொண்டிருப்போரை தாங்கிப்பிடிக்க ஒரு சுமைதாங்கிக் குழுவை உருவாக்குங்கள். புதுக் கலைகளைக் கற்கலாம். கணினியோ, ஓவியக் கலையோ உங்கள் ஆர்வத்தைத் தூண்டிவிடும் எதிலாகிலும் தேர்ச்சியடையலாம். நடப்பதுபோன்ற உடற்பயிற்சி உங்கள் மனதுக்கும் உடலுக்கும் இதமளிக்கும். வாழ்க்கையை அனுபவிக்கப் பழகுங்கள். முன்னோக்கிப் பாருங்கள். பின்னிட்டுப் பார்க்காதேயுங்கள். கடந்த காலத்தின் கைதியாகிவிடாதபடிக்கு விழிப்பாயிருங்கள்.
கடினமான சிக்கல்களுக்குத் தீர்வுகாண தேவன் உறுதியானவர்களைப் பொறுக்கியெடுக்கிறார். மற்றப் பெண்களுக்கு கற்பிப்பதற்காக இந்தக் காரியம் உங்களுக்கு நடக்க நீங்கள் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களோ என்னவோ, உங்களுக்கு நேரிட்ட ஒரு பயங்கரத்தை அப்படியே திருப்பி பிறருக்கு வழிகாட்டியாக்கலாம்.
உங்கள் நிலையை நினைத்து நொந்து நொந்து வாழ்வை வீணடிக்கக்கூடாது. முன்னேறுங்கள். ஒரு பெண், மனைவி, தாய், எருமை மாட்டைப்போலவாயிருக்கவேண்டும். எழுந்து நில்லுங்கள். தைரியம் கொள்ளுங்கள். வீறுநடை போடுங்கள். |