வெள்ளை துணியில் ஒரு கருப்பு புள்ளி

பாஸ்டர்.G.சுந்தரம், ஸ்தாபகர்

தமிழ்நாட்டில் முதல் பெரிய சபை பாஸ்டர்.சுந்தரம் என்ற தேவ மனிதர் 1949ம் ஆண்டு ஆரம்பித்த (ACA)அப்போஸ்தலிக் சர்ச் அசம்பளி என்ற சபையாகும். பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் கோயமுத்தூரிலிருந்து சென்னைக்கு கர்த்தரால் அழைப்பை பெற்றுவந்து ஆரம்பித்த சபைதான் பாஸ்டர்.சுந்தரம் அவர்களின் சபையாகும். சபை ஆரம்பிக்கும்போது நான்கு பிச்சைக்காரர்களை அழைத்து அவர்களுக்கு உணவு அளித்து ஆராதனையில் உட்காரவைத்து ஆராதனை நடத்தினார். அநேக நாட்களுக்குப்பின் பாஸ்டர்.சுந்தரம் அவர்களின் சபை தமிழ்நாட்டிலேயே அதிக விசுவாசிகளை கொண்ட சபையாக மாறியது.

சகோ.தினகரன் அவர்கள்தான் 1968ம் வருடம் டிசம்பர் மாதம் பாஸ்டர்.சுந்தரம் அவர்களுக்கு என்னை மிகப்பெரிய கன்வென்ஷன் பிரசங்கி என்று புகழ்ந்து அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அடிக்கடி பாஸ்டர் அவர்களோடு நான் நெருக்கமாக உறவாடாமல்போனாலும், ஒன்று, இரண்டு முறை வேதத்தின் ஆவிக்குரிய சந்தேகங்களை கேட்க வாரநாட்களில் பாஸ்டர் அவர்களை சந்தித்து நீண்டநேரம் உரையாடியிருக்கிறோம். என்னைக்குறித்து பலர் மூலமாக அதிகம் கேள்விப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் முதல் முழுஇரவு ஜெபத்தை நானும், பாஸ்டர்.ஜீவானந்தம், சகோ.தினகரன், கனம் வேதநாயகசாஸ்திரியார் ஆகிய நான்கு பேரும் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகேயுள்ள V.P.ஹால் என்ற கட்டிடத்தில் ஆரம்பித்தோம். அந்த முழு இரவு ஜெபம் நடத்துவது பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் அவ்வளவாக இஷ்டப்படவில்லை என்பதை சகோ.தினகரன் அவர்கள் கூறக்கேள்விப்பட்டேன். என்றாலும் அந்த ஜெபம் நடத்த எப்போதாவது நான் சென்னை செல்லும்போது பாஸ்டர்.சுந்தரம் அவர்களை எப்படியும் சந்தித்து பேசி, ஜெபித்து வருவேன்.


பாஸ்டர்.சாம்சுந்தரம்

சகோ.தினகரன் அவர்கள் மிகவும் மதிக்கும், மிக முக்கிய ஊழியர்கள் பாஸ்டர்.சுந்தரம், பாஸ்டர்.வாசு என்பவர்களாவர். அதனால்தான் சகோ.தினகரன் மகள் மரித்தபோது அந்த மரணம் கர்த்தரின் எச்சரிப்பு என்று தைரியமாக நேரில் சென்று நேருக்குநேர் கூறி உரிமையோடு அறிவித்த ஒரே ஊழியர் பாஸ்டர்.சுந்தரம் அவர்களாவார். பாஸ்டர்.சுந்தரம் அவர்களின் மரணத்துக்குபிறகு அந்த சபையில் மாலை நேர ஆராதனையில் மட்டும் பிரசங்கம் செய்துகொண்டிருந்த பாஸ்டர்.சுந்தரம் அவர்களின் மனைவியின் சகோதரரான பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்கள் அந்த சபையின் தலைமை பாஸ்டராக 1989ம் வருடம் பொறுப்பெடுத்தார். ஊழியம் விரிவடைந்தது. சபைக்கு புதிய இடம் பல கோடி ரூபாயில் வாங்கி ஆராதனை மிக சிறப்பாக நடந்துக்கொண்டிருந்தது.


பாஸ்டர்.சாம்சுந்தரம் வியாதி படுக்கையில்

கை-கால்கள் தளர்ந்து பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்கள் வியாதி படுக்கையிலாகி ஞாபகசக்தியும் கொஞ்சம்கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தார். கிட்னி இயக்கம் குறைந்தது. அப்பெல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN