கிறிஸ்தவ நாடாகிய அமெரிக்காவில் நான் கிறிஸ்தவனே அல்ல என்று என் முன்னேற்றத்தை தடுக்க சிலர் வதந்திகளை பரவவிட்டார்கள். வேறு சிலர் ஒபாமா ஒரு முஸ்லீம் என்றும் பொய் பிரசரங்களை செய்தார்கள். அந்த வதந்திகளை நம்பின பலர் நான் போகும் இடமெல்லாம் இவைகளைக்குறித்து கேள்வி எழுப்பி என் பிறப்பைக்குறிப்பிட்டு அவமானப்படுத்த முயன்றார்கள். உலகில் நாம் தேடும் அமைதி என்பது மனிதனின் இதயத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது என்பதை நாம் எல்லாரும் உணர வேண்டும்.
கடைசியாக ஒபாமாவின் உச்சக்கட்ட செய்தியாக அவர்கள் கூறி முடித்தது என்னவென்றால், ஒவ்வொரு மனிதனும் தன் மத நம்பிக்கையை எந்தவிதமான அச்சமும், பாகுபாடும் இல்லாமல் தொடர இந்த நாட்டில் உரிமையுள்ளது. அதே நேரத்தில் மத அடிப்படையில் இந்தியா பிளவுபடாதவரை இந்தியா வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் (அதன் அர்த்தம் மத அடிப்படையியல் இந்திய பிளவுபட்டதேயானால் எந்த முன்னேற்றமும் அடையமுடியாது என்பதே) மேலும் அவர் குறிப்பிட்டதாவது இந்திய அரசியல் சட்டத்தின் 23வது பிரிவானது இந்தியாவில் வாழும் அனைவரும் தங்களின் மத நம்பிக்கைகளை தடையின்றி தொடர அந்த சட்டம் மக்களுக்கு சுதந்திரம் அளிக்கிறது. அந்த நம்பிக்கைகளை விருத்தி செய்யவும் சுதந்திரம் அளிக்கிறது. இந்தியா-அமெரிக்கா மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளும், மத சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அது ஒவ்வொரு நபரின் கடமையாகும் என்று தன் நீண்ட உரையை கூறி முடித்தார்.
இந்தியாவில் குடியரசு தினத்தில் ஒரு வெளிநாட்டு ஜனாதிபதி இத்தனை நீண்ட நேரம் பிரசங்கம் நிகழ்த்தியது கிடையாது. இந்தியாவின் தற்போதைய மதவெறி உள்ள தலைவர்களையும் அவர்களின் செயல்களையும் மனதில் கொண்டு அதன் அடிப்படையில்தான் மேலே கூறிய முக்கிய ஆலோசனைகளை செய்தியாகவும் இந்திய நாட்டு தலைவர்களுக்கு ஒரு எச்சரிப்பாகவும் மிக தைரியமாக ஒபாமா கூறி அமர்ந்தார். அவர் நிகழ்த்திய பிரசங்கத்தில் நம் நாட்டு சட்டங்களைப்பற்றியும் அவைகளை மிகத்தெளிவாக படித்தறிந்து இந்திய அரசியல் சட்டத்தின் 23வது பிரிவை தெளிவாக அவர் மேற்கோள்காட்டி பேசியது இந்திய தலைவர்களுக்கு குறிப்பாக BJP, RSS போன்ற தலைவர்களுக்கு ஒபாமாவின் அந்த பேச்சு பெரும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது என்றால் மிகையாகாது. |