2015 மார்ச் மாதம் இந்திய பிரதமர்.திரு.மோடி அவர்கள் இலங்கை சென்று யாழ்பாண மக்களையும் சந்தித்து ஏற்கனவே இந்தியா கட்டித்தந்த வீடுகளில் தமிழ் மக்களை குடியேற செய்து வந்ததும் இன்னும் பல ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக்கொடுக்க உடனடி ஏற்பாடுகளை செய்ததும், இந்திய ரயில்வே பணியாளர்களை அனுப்பி கொளும்பு - யாழ்பாணம் (யாழ்தேவி ரயில்) இப்போது தலைமன்னார் வரை ரயில்பாதையும், ரயில் பெட்டிகள் இஞ்சின் ஆகியவைகளை அனுப்பி ரயிலை இயக்கி திறப்புவிழா நடத்தி வந்த காட்சியை டிவியில் பார்த்தேன்.
இலங்கை உள்நாட்டு போரில் சீரழிந்த தமிழ்நாட்டு பொருளாதாரம் முன்னேற இலங்கை பண மதிப்பு சரிந்ததை சீர்ப்படுத்த பல கோடிகள் இந்தியா கொடுத்து உதவியது. இலங்கையின் பலவருட சீரழிவுக்கு இந்தியாவும் உடந்தையாக இருந்ததை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்டு பரிகாரம் செய்ததுபோல் மேற்கூறிய பொருளாதார உதவிகள் அமைந்தது. இலங்கையின் மறுமலர்ச்சிக்காக நாம் செய்த ஜெபம் கேட்கப்பட்டதை போல் மேற்குறிப்பிட்ட காட்சிகள் அமைந்தன. தொடர்ந்து இலங்கைக்காக ஜெபிப்போம். |