அதனால்தான் RSS, பஜ்ரங்தள், VHP ஆகிய தீவிரவாத இயக்கங்கள் செய்த ஆலய இடிப்பு, தாய்மத மாற்றம் மற்றும் பல இடத்தில் மத கலவரம் இத்தனை நடந்தும் பார்லிமெண்டில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தியும் அந்த தீவிரவாதங்களுக்கு சாதகமாக எதிர்கட்சியினர் கேள்விக்கு பதில் கூறாமலும், தன் RSS இயக்கத்தினரை கண்டிக்காமாலும் இருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியின் குடியரசு தின செய்தியும், எச்சரிப்பும், டெல்லி தேர்தலில் தன் கட்சியான BJP படுதோல்வியை சந்தித்ததும் மோடியின் முகத்துக்காக பல்வேறு மாநிலங்களில் தேர்தலில் ஜெயித்த BJP கட்சி, டெல்லி தேர்தலில் மக்களின் மனமாற்றத்தை கண்டனர். மோடியின் முகம் இப்போது மக்களுக்கு பயத்தை உண்டாக்கியது. இந்தியாவில் இனி எந்த மதகலவரம் வெடித்தாலும் மோடி அவர்கள் கண்டுக்கொள்ளாமல் போனால் இந்தியா என்னவாகும் என்று யோசித்தப்பின் டெல்லியில் BJPயை தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் செய்தனர். அதன் விளைவுதான் திரு.மோடி அவர்களின் மனந்திரும்பிய அறிக்கையின் பிரசங்கம்.

திரு.மோடி அவர்கள் கூறியதாவது: நாட்டில் வெறுப்புணர்வை தூண்டிவிட இந்திய நாட்டில் எந்தவொரு மதக்குழுவையும் என் அரசு இனி அனுமதிக்காது. மத வன்முறைகளுக்கு எதிராக இனி என் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் யாருடைய நிர்பந்தமுமில்லாமல் தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான மறுக்க முடியாத உரிமை உள்ளது. இப்படிப்பட்ட மத வழிபாட்டு சுதந்திரத்தை எனது அரசு உறுதி செய்யும். பெரும்பான்மையினரோ அல்லது சிறுபான்மையினரோ யாராக இருந்தாலும் பிறர்மீது வெறுப்புணர்வை தூண்டிவிட மத்திய அரசு அனுமதிக்காது. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களுக்கும் எனது அரசு சம மரியாதையும், அந்தஸ்தையும் அளிக்கிறது.

எதையோ காரணம் காட்டி ஒரு மதத்தின் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதை ஏற்க முடியாது. நடந்துமுடிந்த இத்தகைய வன்முறைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விஷயத்தில் எனது அரசு உறுதியுடன் செயல்படும். இந்தியா மதசார்பற்ற நாடாகவே இருக்கும். மதம் என்பது தனிநபர் சுதந்திரம் சார்ந்தது. மத வெறுப்பை பரப்ப இங்கு (இந்தியாவில்) யாருக்கும் அனுமதியில்லை. முழு மத சுதந்திரத்தை எனது அரசு உறுதி செய்யும். மதவெறி கூடிக்கொண்டே வருகிற இந்த காலத்தில் நாம் அனைத்து மதத்தையும் மதித்து நடப்பது என்பது நமது இரத்தத்தில் ஓடவேண்டும். பிற மதத்தை மதிப்பது சகிப்புத்தன்மை ஆகியவை நமது பண்டைய பாரத தேசத்தின் ஆத்ம நெறி.

இந்தியாதான் என் மதம். இந்திய அரசியல் அமைப்பு சட்டம்தான் என் மத நூல் ஆகும் என்று கூறியிருக்கிறார்.

இது நல்ல சந்தோஷ மாற்றம்தான். ஆனால் இவர் இப்படி பிரசங்கித்த இடம் தேவலாயம் எரிக்கப்பட்ட டெல்லியில் கிறிஸ்தவர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் இப்படி பேசியிருக்கிறார். ஆனால் இதே செய்தியை இவருடைய RSS இயக்க கூட்டத்தில் பேசியிருந்தால் இந்திய மக்கள் பிரதமரின் மீது கூடுதல் நம்பிக்கை கொள்ள ஏதுவாக இருந்திருக்கும். கிறிஸ்தவர்கள் மக்கள் மத்தியில் அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் பேசியிருப்பாரோ அரசியல்வாதிகள் இடத்துக்கு தக்கவாறு பேசுவதில் சிறப்பு பெற்றவர்கள் என்று அரசியல் கணிப்பாளர்கள் கருதுகிறார்கள். என்றாலும் பிரதமரின் மாற்றங்கள் போகபோகத்தான் தெரியும்.

பிரதமருக்காக ஜாமக்காரன் வாசகர்கள் அனைவரும் தொடர்ந்து ஜெபிப்போம்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN