எங்களது குடும்ப முகாம் (Blessing Youth Mission) ஒன்றில் கணவரும் மனைவியரும் நிரப்பிக் கொடுக்க (form) படிவங்கள் விநியோக்கிக்கப்பட்டன. அதில் ஒருவர் "என் மனைவி எனக்குக் கீழ்ப்படிவதில்லை" என்று எழுதியிருந்தார். பரிதாபப்பட்டேன். ஆனால் அவரது மனைவியின் படிவம் வந்தபோது. என் கணவர் குடிக்காரர். என்று எழுதியிருக்கக்கண்டேன். அழுவதா, இல்லைச் சிரிப்பதா? மது, மாது விவரங்களில் மனைவிக்கு கீழ்ப்படியாத கணவன், மனைவியின் கீழ்படிதலுக்குத் தகுதியற்றவன். இதனால் அவரை அலட்சியம் செய்யவேண்டுமென்பதல்ல. எப்போது கீழ்ப்படியக்கூடாது என்பதில் விழிப்பாயிருக்கவேண்டும்.1 பேதுரு 3:1-4ஐக் கைக்கொள்ளளும்போது அதில் குறிப்பிட்டுள்ள நடக்கை என்பது விவேகமான கீழ்படிதலையும் உள்ளடக்கும் என்பதை நினைவிற்கொண்டு, கீழ்ப்படியாதிருக்கவேண்டிய சூழ்நிலையில் பெண்கள் சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியோடிருக்கவேண்டும்.
"மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள், என்கிறது." கொலே 3:18. உங்கள் கீழ்படிதலை அங்கீகரித்து தேவன் ஆனந்தமாய் தலையசைப்பாரா? என்பதை அந்த சூழ்நிலையில் யோசித்துபாருங்கள். பின்வரும் கேள்விகளையும் கேட்டுப்பாருங்கள். எனது கீழ்ப்படிதல் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருமா? என் குடும்பத்தைக் காயப்படுத்துமா? யாருக்கேனும் பங்கம் விளைவிக்குமா? நல்ல சாட்சியாக இருக்குமா? என் மனச்சாட்சியை களங்கப்படுத்துமா? சந்தோஷமாய் மற்றவர்களுடன் என் அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள முடியுமா? என் கீழ்ப்படிதலினால் தேவனைப் பின்பற்றுகிறவளாயிருப்பேனா? அன்பிலே நடந்துக் கொள்கிறவளாயிருப்பேனா?. ஞானத்திற்கும் கணவனுக்கும் கீழ்ப்படிதலுக்கு இடையிலுள்ள கத்திக் கூர்மை விளிம்பில் நடப்பதைபோல் ஒரு பெண் நடக்கவேண்டும். கயிற்றின்மேல் நடக்கும் இந்த வித்தையைக் கற்பிக்க அனுபவமே அவளுக்கு ஆசிரியை. எஸ்தர் அதைச்செய்தாள். உங்களது கீழ்ப்படியாமை உங்கள் கணவரை கௌரவிக்குமானால் அதைத்தான் ஞானம் எனலாம். |