இல்லை. அவசியமில்லை. கணவர் தெய்வங்களல்ல. நம்மைப்போல் மனிதர்தான். அமைப்பு செவ்வனே இயங்கும்படியாக தேவன் ஆணைத் தலையாக்கினார். நாம் தவறு செய்வதுபோலவே அவர்களும் தவறு செய்யலாம். அவிசுவாசிகளான கணவர் மட்டுமல்ல. விசுவாசிகளும்கூட தவறு செய்யலாம். கணவருக்குப் பெண்களை அடிப்பணிய அழைக்கும் முன்பாக எபேசியர் 5 அத்தியாத்தில் வசனம் 8ல் இருந்தே முன்னுரையாக பவுல் எழுதுகிறார். "முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள். இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள், வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துக்கொள்ளுங்கள்" (வச 8). குருட்டுப் பூனையைப் போல் நடவாமல் தேவன் நமக்களித்த வெளிச்சத்தில் நடக்கவேண்டும் ".... கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள்" (வச 10). நாம் செய்யப்போவது தேவனது மகிழ்ச்சியான அங்கீகாரத்தைப் பெறுமா என்பதை முதலில் பகுத்தறியவேண்டும். "தூங்குகிற நீ விழித்து மரித்தோரைவிட்டு எழுந்திரு. அப்பொழுது கிறிஸ்து உன்னை பிரகாசிப்பிப்பார் (வச 14). நாம் தூக்கத்தில் நடக்கிறவர்கள் போலவோ, சடலங்கள் போலவோ மற்றவர்கள் நம்மைத் தம் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்க இடமளிக்காமல் கிறிஸ்து அளிக்கும் வெளிச்சத்தைத் தேடவேண்டும். நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல் ஞானமுள்ளவர்களைப்போல கவனமாய் நடந்துக்கொள்ளுங்கள்" (வச 15). கவனம் என்பது சூழ்நிலைகளையும் விளைவுகளையும் கணித்து விவேகமாய் நடந்துக்கொள்வது ஆகும். ஆகவே பெண்கள் தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் (வச 21). கீழ்ப்படிதல் என்னும்போது கணவனுக்குப் பயப்படும் பயமல்ல. இதில் தேவபயமே மேலோங்கியிருக்க வேண்டும். மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல உங்கள் சொந்த புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள் (வச 22). "ஆண்டவர் இந்தக் காரியத்தைச் செய்யும்படி என்னைக்கேட்பாரா? என்ற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்த காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும் என்று வேதம் போதிக்கிறது." (வச 24). ஒத்துப்போக முடியாமலே, கீழ்படியமுடியாமலோ சில குறிப்பிட்ட விஷயங்களில் இருக்கும் பட்சத்தில் அகங்காரமாயல்ல, பிடிவாதமாயுமில்லாமல் பணிவோடு செய்யுங்கள். விவேகம், புத்தி, ஞானம், அறிவுக்குறித்து இவ்வளவு போதித்துவிட்டு, நிச்சயமாய் பவுல் மரப்பாச்சி (பொம்மைப்போல்) கீழ்ப்படிதலை ஊக்குவிக்கவில்லை. மனைவியார் நூற்றுக்குநூறு கீழ்ப்படிந்ததால் சமூகத்தில் பல விபரீதங்கள் நேர்ந்திருக்கின்றன. சப்பீராளை யோசித்துப்பாருங்கள். பெண்கள் யோசித்து செயல்படுவதை தேவன் விரும்பாவிட்டால் பெண்களுக்குத் தெளிந்த புத்தியைக் குறித்து வேதம் இவ்வளவு எழுதவேண்டிய தேவையென்ன? சமயோசித புத்தியைப் பயன்படுத்துங்கள். அசம்பாவிதத்தை ஆபத்தை பெண்கள் உணருவீர்களானால் கீழ்ப்படிதலைத் தவிர்த்துவிடுங்கள். பாலியப்பெண்கள். தெளிந்தபுத்தியுள்ளவர்களும் ...தங்கள் புருஷருக்குக்கீழ்படிகிறவர்களும்"(தீத்து 2:4,5).மாயிருக்கவேண்டும் என்று வசனம் கூறுகிறது. |