இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்தவ சபைகள் தாக்கப்படுகின்றன. சபை ஊழியர்கள், மிஷனரிகள் தாக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, மதம் மாற்றம் செய்ய முயன்றார்கள் என்று கூறி எந்தவித ஆதாரமுமில்லாமல் பாஸ்டர்களையும், விவாசிகளையும் போலீஸ் லாக்கப்பிலும், சிலர் ஜெயிலிலும் அடைக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவ ஆவிக்குரிய வக்கீல் தொழில் செய்யும் கர்த்தருடைய பிள்ளைகள் இந்தியா முழுவதும் ஒன்றாக இணைந்து UNITED CHRISTIAN FORUM என்ற பெயரில் உதவி இணைப்பு Help Line தொடங்கியுள்ளார்கள்.
உதவி தேவைப்படுவோர் இங்கு குறிப்பிடும் 1800 2084 545 என்ற எண்களில் தொடர்புக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வக்கீல்களுக்காக தேவனை துதிப்போம். இவர்களுக்காக தினமும் ஜெபிப்போம். |