இப்போது நாம் யாவரும் ஒரு புதிய
ஆட்சியின் கீழ் வந்துள்ளோம். கிறிஸ்தவ வேதம் கூறுவது என்னவென்றால்
இந்தியாவை ஆளுகின்றவர்களுக்காக அவர்களை ஆசீர்வதித்து ஜெபிக்க வேண்டியது நம் கடமையாகும். 1தீமோ 2:1,2. வசனங்களில் அப்படி எழுதியுள்ளது
ஆளுகின்றவர்களுக்காக, அதிகாரிகளுக்காக ஸ்தோத்திரத்தோடு வேண்டுதல் செய்யவேண்டுமாம். அப்படி செய்வதால் மட்டுமே நாமும் நம் தேசமும்
கலகமில்லாமல், சமாதானத்துடன் வாழ்க்கை நடத்தமுடியும் என்று எழுதப்பட்டுள்ளது.
ஓட்டுப்போடுவது ஒவ்வொரு இந்திய கிறிஸ்தவனின்
உரிமையாகும். நாம் யாருக்கு ஓட்டுபோடவேண்டும் என்பதும் ஒவ்வொரு கிறிஸ்தவ இந்தியனின் சொந்த
தனிப்பட்ட உரிமையாகும். தேர்தல் முடிந்து யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒருவேளை
உனக்கு பிரியமில்லாதவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்தாலும்,
ஆளுகின்றவர்களுக்கு கீழ் அடங்கி வாழவேண்டும் என்பதுதான் நம் வேதம் நமக்கு கட்டளையிட்டுள்ளது. காரணம்
நம் தெய்வமான இயேசுகிறிஸ்துவுக்கு தெரியாமல் யாரும் எந்த பதவிக்கும் வரமுடியாது. அது
இந்திய தலைமையானாலும், திருச்சபையின் திருமண்டல தலைமை(பிஷப், மாடரேட்டர்)யானாலும் கர்த்தருக்கு தெரியாமல் அந்த பதவிக்கு யாரும் வரமுடியாது!. ஒருவேளை
தலைமை மோசமானதாக இருந்தாலும், தலைமையில் உள்ளவர் நமக்கு அநியாயம் செய்பவர்களாக இருந்தாலும் அப்படிப்பட்டவர்களையும் நம் தேவன்தான்
அனுமதித்துள்ளார் என்று நம் வேதம் கூறுகிறது. மோசமான
இந்திய தலைமையானாலும், திருச்சபை பிஷப், மாடரேட்டரானாலும் இவர்களை தேவன் தெரிந்தெடுக்கவில்லை. ஆனால் இவர்கள் தேவனால்
அனுமதிக்கப்பட்டவர்களாகிறார்கள்.
நம்மை ஆள மோசமான தலைமையை கடவுள் அனுமதிப்பாரா? ஆம். சில சமயம் நம்மை
திருத்தவும், நாம் தேவனிடத்தில் நெருங்கி சேரவும் மோசமான தலைமையை கர்த்தர் அனுமதிக்கிறார்.
தேவன் நேசித்த ஜனங்களாகிய
இஸ்ரவேலர் எப்போது கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் அவர் மனதை வேதனைப்படுத்துகிறார்களோ! உடனே கர்த்தர் தன் மக்களை சத்துருவான
பெலிஸ்தியர் அல்லது அம்மோன் புத்திரர் அல்லது பார்வோன் ஆகியவர்களிடத்தில்
அடிமைகளாக வாழ கர்த்தரே தம் மக்களை ஒப்புக்கொடுப்பார். விசுவாசத்தை, நம்பிக்கையை பெலப்படுத்த ஆளுகின்ற
பார்வோன் இருதயத்தைகூட கர்த்தரே மேலும் மேலும்
கடினப்படுத்தி மக்களை கொடுமைப்படுத்த ஏற்பாடு செய்கிறார் என்று வேதம் கூறுகிறது.
இது கர்த்தரின் வித்தியாசமானவழி - நாம் மனந்திரும்பி கர்த்தருக்கு கீழ்படிய தொடங்கும்போது மன உருக்கமுள்ள தேவன் நம்மை வேறு ஒரு
ஆட்சியின்கீழ் அல்லது வேறு ஒரு தலைமையின்கீழ் வாழ ஏற்பாடு செய்கிறார்.
அதனால்தான் எந்த மனுஷனும் மேலான
அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படியகடவன். ஏனென்றால்
தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை. .... ஆதலால் அதிகாரத்துக்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்துக்கு எதிர்த்து நிற்கிறான்.... மேலும் அதிகாரிகள் (தலைமையில் உள்ளவர்கள்)
நற்கிரியைக்கல்ல, துர்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்...
மேலும் உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன்
தேவ ஊழியக்காரனாயிருக்கிறான்... அவன் பட்டயத்தை விருதவாய் பிடித்திருக்கவில்லை.
அவன்.... தேவ ஊழியக்காரனாயிருக்கிறானே. ரோ15:1-14. |