பூனாவில் CSI தமிழ் சபையில் 3 நாட்கள் கன்வென்ஷன் ஏற்பாடுகளை சகோ.ஸ்டீபன் மற்றும் ஆயர் யாவரும் இணைந்து கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பல்வேறு இடங்களிலிருந்து ஜாம்காரன் வாசகர்கள், மற்றும்
CNI, மெத்தடிஸ்ட் சபை, UBS வேதாகம கல்லூரியிலிருந்தும் ஏராளமானவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் பங்குகொண்டனர். கூட்டம் ஆசீர்வாதமாக நடந்தேறியது. கேள்வி-பதில் பகுதி மிகச்சிறப்பாக நடைபெற்றதால் சபை மக்களின் பல வேதாகம கேள்விகளுக்கும், குடும்ப விவகாரங்கள் சம்பந்தமான கேள்விகளுக்கும், பதில் வசன அடிப்படையில் பதில் கிடைத்ததால் யாவரும் மிகவும் சந்தோஷப்பட்டனர். கர்த்தரின் நாமம் மகிமைப்பட்டது. |