நான் இதுவரை அவளை நடத்திய விதங்களைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். மனஸ்தாப்படுகிறேன். இனிமுதல் அவளை கனம் பண்ணவும் அவள்மேல் அன்பு பாராட்டவும் பரிசுத்த ஆவியானவர் உதவியை நான் நாடுகிறேன். ஆண்டவரே.
அவள்
என்னைவிட சரீர பலம் குறைந்தவள் என்பதை உணர்ந்து அவளால் செய்ய முடியாததை நான் செய்யவும், அவள் செய்யக்கூடியவைகளை இன்னும் சிறப்பாகச் செய்ய ஊக்கமளிக்கவும் எனக்கு உதவும்.
அவள்
சரீரத்தில் சோர்வடையும்போது, அவளை விசாரிக்கவும், உதவவும், ஆவியிலே, சோர்வுறும்போது அவளோடு சேர்ந்து ஜெபிக்கவும், அவளுக்காக நான் தனியே ஜெபிக்கவும், நேரத்தை ஒதுக்கச் செய்யும்.
நான் அவளை நடத்தும் விதத்தைக்கண்டு
என் பிள்ளைகளும், உற்றார் - உறவினர்களும் அவளை கனம்பண்ணவும், சுயமரிதையோடு நடத்தவும் செய்யட்டும்.
என் பிள்ளைகள் நடக்கவேண்டிய வழியிலே அவர்களை நடத்தி, அவர்கள் ஒருபோதும் அவளுக்கு விசனத்தைத்தராதபடி அவர்களைப் பழக்கவும் எனக்கு உதவும்.
உயர்விலும், தாழ்விலும், செழிப்பிலும், வறுமையிலும், ஆரோக்கியத்திலும், வியாதியிலும் நான் அவளோடு இருக்கவும், அவளோடு சேர்ந்து உமது நாமத்தை உயர்த்தவும், உம்மைத் தொழுது கொள்ளவும் செய்யும்.
என் மனைவி நீர் எனக்கு தந்த ஏற்ற துணை என்பதை நான் எப்போதும் உணர்ந்து செயல்படவும் உம்மை துதிக்கவும் செய்யும்.
என் கண்கள் இச்சையோடு பிற ஸ்தீரிகளை காணாதபடி என் கண்களையும், மனதையும் காத்துக்கொள்ளும். என்னையும் தம் சொந்த சரீரமாக எண்ணும் இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். பிதாவே ஆமென்.
நீங்கள் இப்படி உண்மையாகவும், ஆத்மார்த்தமாகவும் ஜெபித்திருந்தால், தேவன் தம்முடைய
பரிசுத்த ஆவியானவர் மூலமாக உங்களை மேன்மை பொருந்திய மனிதனாகவும், நல்ல
கணவராகவும், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாகவும் மாற்றுவார். உங்கள் குடும்பம் கிறிஸ்து இயேசுவில் கட்டப்பட்டிருக்கவும், தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்திரித்துக்கொள்ளவும்,
உங்கள் மனைவி வீட்டோறும் கனிதரும் திராட்சை செடிபோல இருக்க நான் வாழ்த்துகிறேன். |