ஜாமக்காரன் வாசகர்கள் தங்கள் பிள்ளைகளை வேதம் வாசிக்க சொல்லுங்கள். வேதம் கிடைக்காத காலம் வரப்போகிறது!. பெற்றவர்கள் வேதம் வாசியுங்கள். அந்த வேதம் உங்களை சரியான வழியில் வழிநடத்தும், உண்மையான ஊழியர்களை அடையாளம் காட்டும், அந்த வேதம் உண்மையான உபதேசம் எது? என்பதையும் காட்டும். உங்கள் சபை காட்டாத, உங்கள் பாஸ்டர்கள் காட்டாத, உங்கள் பிஷப்மார்கள் காட்டாத உண்மை சத்தியத்தை, உண்மை உபதேசத்தை ஆறுதலை சுகத்தை வேதவசனம் காட்டும்.
அந்த வாலிபன் வில்லியம் இயேசுவை அறிவித்ததற்காக கொல்லப்படவில்லை. வேத புத்தகம் வாசித்ததற்காக கொல்லப்பட்டான். வித்தியாசமான இரத்தசாட்சி.
இப்போது அப்படிப்பட்ட காலத்திலா நாம் இருக்கிறோம். இது கிருபையின் காலம். வேதம் உன் கையில் இருக்கிறது. ஒரு நாளில் 24 மணி நேரத்தில் வேதம் வாசிக்க எள்ளளவே நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள். வேதத்தை வாசிக்காத ஊழியர்கள் - பாஸ்டர்கள் இப்போதும் உண்டு. இதை அவர்களின் பிள்ளைகள் கூறுகிறார்கள் என் தகப்பனர் பாஸ்டர் லூத்தரன், சிஎஸ்ஐ சபையின் ஆயர். ஆனால் அவர் வேதத்தை வாசிக்கிறதை எங்களால் காணமுடிகிறதில்லை என்கிறார்கள். மனைவிமார்களும் தங்கள் கணவர் மார்களை குறித்து அப்படியே கூறுகிறார்கள்: என் கணவருக்கு சபையின் மற்ற வேலையெல்லாம் செய்ய நேரம் இருக்கிறது. ஆனால் வேதபுத்தகம் படிக்கநேரம் இல்லை. என்றாலும் அவர் ஒவ்வொரு ஞாயிற்கிழமைகளிலும் ஆராதனையில் பிரசங்கிக்கிறார் என்கிறார்கள்!. என்ன பரிதாபம்?
ஜாக்கிரதை - கடைசிக்காலம் - வேதத்தை வாசிக்காத பெயர்கிறிஸ்தவர்கள், ஊழியர், பாஸ்டர்கள், பிஷப்மார் நிச்சயம் பரலோகம் போகமுடியாது. |