வரும் மாதங்களில் மிக அதிகமான ஊழியங்கள் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் வாழும்
ஜாமக்காரன் வாசகர்களின் குடும்பங்களை நேரில் பார்க்கவும், ஆவிக்குரிய விஷயங்களையும், வேத ரகசியங்களையும் மனம்விட்டு பேசவும் நல்ல வாய்ப்பை கர்த்தர் ஏற்பாடு செய்துள்ளார் என்று நம்புகிறேன்.
வட இந்திய கிராம ஊழியத்தையும், வட இந்தியாவில் உள்ள
மிஷனரி குடும்பங்களையும் நேரில் சந்தித்து உரையாட இது நல்ல சந்தர்ப்பம் ஆகும். இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்போதே உங்கள் கேள்விகளை, வேத சந்தேகங்களை ஆயத்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். குடும்ப பிரச்சனைகளைக் குறித்தும் என்னிடம் பேசி அறிந்துக்கொள்ளலாம். அவைகளைக்குறித்து ஆலோசனை பெறவும் கர்த்தர் கிருபை செய்வாராக. இதற்குமுன் இந்தியாவின் மேற்கு பகுதிக்கும், பம்பாய், மஹாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம் ஆகிய இடங்களுக்குதான் அதிகமான
நாட்களை சபைகளுக்கும் ஜெபகுழுக்களுக்கும் ஒதுக்கிவைத்தேன். இம்முறை ஏறைக்குறைய 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் வடகிழக்கு
சட்டீஸ்கர், ஆந்திராவின் வடக்குபாகம் ஆகிய இடங்களுக்கு என் பயண ஏற்பாடுகளை செய்துள்ளேன்.
இந்த ஜுன் மாத (2014) ஜாமக்காரன் உங்கள் கைகளில் கிடைக்கும்போது நான்
நேபாளம் பக்கத்தில், இந்திய எல்லை பகுதியான
கோரக்பூர் பகுதியியல் ஊழியம் செய்துகொண்டிருப்பேன். இந்த ஊழிய செலவினங்களை சந்தித்து ஏற்பாடு செய்து ஆங்காங்குள்ள எல்லா வாசகர்களுக்கும், திருச்சபை ஆயர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
|