குறிப்பு: இந்த பிரசங்கத்தை செய்தவர்.
டாக்டர்.முரளிதர், எம்டி, டிரைபல் மிஷன் பொதுசெயலரும்,
ஆனைக்கட்டியில் உள்ள எங்கள் டிரைபல் மிஷன் ஆஸ்பத்திரியின் தலைமை பொறுப்பில் உள்ள ஆஸ்பத்திரியில் எம்டி படித்த
இருதய வியாதி நிபுணர் ஆவார். உலக பிரசித்தி பெற்ற கன்வென்ஷன் பிரசங்கியுமாவார். இவர் பொறுப்பில் டிரைபல் மிஷன் கையளிக்கப்பட்டபின் மிக பெரிய அளவில் மிகச் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டது.
பாண்டிசேரி ஜிப்மர் மெடிக்கல் காலேஜில் எம்டி படிப்பும், இருதய சிறப்பு படிப்பும் படித்து கேரளாவில் மிகவும் பிரபலமானவர் ஆவார். அவருக்காகவும், அவர் கையில் ஒப்படைக்கப்பட்ட மிக உன்னத பொறுப்புக்காகவும் ஜாமக்காரன் வாசகர்கள் ஜெபியுங்கள்.
வேதாகமத்தில் சுவிசேஷகன் (Evangelist) என்று குறிப்பிடப்பட்ட ஒரே நபர்
பிலிப்பு. அப்போஸ்தலனாகிய பவுலும் அவரை சேர்ந்தவர்களும்
செசரியா பட்டணத்திலே பிலிப்பு என்னும்
சுவிசேஷகனுடைய வீட்டில் தங்கினதாக அப் 21:8ம் வசனத்தில் வாசிக்கின்றோம்.
சுவிசேஷகன் என்று அழைக்கப்பட்ட இந்த பிலிப்பு என்பவர் யார்? இவரது தகுதி அல்லது குணாதியசங்கள் என்ன? என்பதை சற்று ஆராய்வோம்.
அப் 6:5ம் வசனத்தில் முதன் முறையாக இவரைக்குறித்து நாம் வாசிக்கின்றோம். ஆதி திருச்சபையில் கிரேக்க விசுவாசிகளிடையே முறுமுறுப்பு ஏற்பட்டபொழுது அதை சரிப்படுத்த தெரிந்துக்கொள்ளப்பட்ட ஏழு பேரில்
பிலிப்பும் ஒருவர். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு,
பந்தி விசாரணை செய்யும் ஒரு எளிய வேலையாகும். (அப் 6:2). இந்த எளிய வேலையைச் செய்ய நியமிக்கப்பட்ட ஏழு நபர்களுக்கும் இருந்த தகுதியைப்பற்றி வேதம் கூறுவது என்னவென்றால்
"பரிசுத்த ஆவியும், ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிறவர்கள்" என்பதே (அப் 6:3).
ஒரு சாதாரண பந்தி விசாரிக்கும் வேலைக்கு ஆதி திருச்சபையில் அன்று சபையில் உள்ள அனைவரையும் கூட்டி வறுத்தி அவர்களில் எல்லாராலும்
நல்ல சாட்சி பெற்றவர்களை தெரிந்தெடுத்து சபை ஊழியத்தில் அந்த
சாதாரண பணிக்கு தெரிந்தெடுக்கப்பட்டார்கள். அதில் ஒருவன்தான் பிலிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
(ஆனால் நம் சபையில் ஆயர்களை, பிஷப்மார்களை சபை நிர்வாக கமிட்டி மூப்பர்களை தெரிந்தெடுக்கும்போது எல்லாராலும்
நற்சாட்சி பெற்றவர்களா என்று அவர்களை ஆராய்ந்து பார்க்காமல் குடிக்காரர்களை அல்லது பணக்காரர்களின் அதாவது அரசியல்வாதிகளின் சிபாரிசு பெற்றவர்களை தெரிந்தெடுக்கிறார்கள். சினாட்டில் உள்ளவர்களுக்கு பல கோடிகளை லஞ்சமாக கொடுத்து பிஷப் பதவியையே விலைக்கு வாங்கிவிடுவதால் தகுதியில்லாதவர்கள் சபை பொறுப்பில் அமர்கிறார்கள். இப்படிப்பட்டவர்களால் சபை பிரச்சனகளை சரிப்படுத்த முடிவதில்லை. சபையில்
பிரச்சனைகள் வரும்போது நியாயம் கிடைக்க விசுவாசிகள்
நீதிமன்றம் தேடிப் போகிறார்கள். நம் சிஎஸ்ஐ, லூத்தரன் சபைகளில் உள்ள ஊழியர்கள், நிர்வாக துறையில் உள்ளவர்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள்
குடிக்கு அடிமையானவர்கள் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது இப்படிபட்டவர்களைக்குறித்து நாம் கேள்விப்படும்போது நம் சபை - டையோசிஸ் சீரழிய முக்கிய காரணம் ஆயர்களும் டையோசிஸ் தலைமையில் உள்ளவர்களும்
தகுதியற்றவர்களாக தெரிந்தெடுக்கப்பட்டார்கள் என்றால் அது மிகையாகாது.
- ஜாமக்காரன்). |