திரு.மோடி அவர்கள் குஜாரத்தில் முதல்வராக மூன்றுமுறை வெற்றிகரமான ஆட்சி செய்ததற்கு முக்கிய காரணம், தன் குஜராத் ஆட்சி நிர்வாகத்தில்
RSS, பஜ்ரங்தள், BJP போன்ற இயக்கங்களில் உள்ள அரசியல்வாதிகளின் ஆலோசனைகள் எதையும் கேட்காமலும் நிர்வாக விஷயத்தில் தன் நெருங்கிய நண்பர்களான அரசியல்வாதிகளைகூட
நிர்வாகத்தில் தலையிடாமல் அவர்களை ஒதுக்கியே வைத்திருந்தார். நல்ல அனுபவமுள்ள
உயர்படிப்பு படித்த உயர் அதிகாரிகளை ஆலோசகர்களாக தெரிந்தெடுத்து அவர்கள் ஆலோசனையின்படி நிர்வாகத்தை நடத்தியதுதான் குஜராத் ஆட்சியின் வெற்றியாகும்.
திரு.மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது திரு.தினேஷ்பிஸ்ட்,
ஓம் பிரகாஷ் சிங், தான்மே உபாத்யாய், ஜெகதீஷ் தாக்கர், சஞ்சய் பவ்சார், அம்ருத்பாய் பட்டேல், பரத்லால், ஜி.சி.முர்மு, கைலாஷ்நாதன், விஜய் நெஹ்ரா, ஷர்மா, பிரஷாந்த் கிஷோர், ஹிரேன் ஜோஷி இவர்கள்தான் குஜராத் நிர்வாகத்தில் திரு.மோடிக்கு ஆலோசனை அளிக்க ஒவ்வொரு துறைக்கும் நியமிக்கப்பட்ட மெத்த படித்த உயர் அதிகாரிகளாவர்.
அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் தமிழ்நாட்டில் திரு.அலெக்சண்டார் அவர்களை
தலைமை செயலராக நியமித்தபோது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலங்களில் கோப்புகள் எதுவும் எந்த அதிகாரிகளும் 7 நாட்களுக்குமேல் தன்னிடம் வைக்காமல் உடனுக்குடன் பதில் எழுதி அனுப்பும் ஏற்பாடுகள் செய்ததின்மூலம், மக்கள்
லஞ்சம் கொடுத்து பைல்களில் அதிகாரிகளின் கையெழுத்து வாங்கும்நிலை வராமல் அதன்மூலம்
தமிழக முதல்வருக்கு நல்ல பெயர் கிடைத்தது. |