கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களே
புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள்,
அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். (ஏசா 40:31).
உங்கள் மனைவியை நீங்கள் கரம்பிடித்த நாளிலிருந்து அவளுக்காக ஜெபிக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?.
ஆணுக்கு, பெண் திருமண உறவுக்குள் துணையாக இருக்கவேண்டுமென்பது தேவனுடைய அநாதி சித்தமும், தீர்மானமும் என்பதை நீங்கள் உணர்ந்துக்கொள்ளவேண்டும். திருமணம் தேவனுடைய திட்டம். ஆதி 2:18 வசனத்திலே
"பின்பு தேவனாகிய கர்த்தர் மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்" என்றார் என்று சொல்ல காண்கிறோம். திருமண வயதை அடைந்த ஒவ்வொரு ஆணுக்கும் - பெண்ணுக்கும் ஏற்ற துணை உண்டாயிருக்கவேண்டும் என்பது தேவன் ஆதியிலே, ஏதேன் தோட்டத்திலே திருவுளம் பற்றினது. |