அந்த அதிகாரி அந்த வாலிபனை பிஷப் முன்பாக கொண்டுபோய் நிறுத்தினார். (இப்போதும் கேரள மாநிலத்தில் உள்ள சில
கிறிஸ்தவ சபைகளின் பிஷப்மார்களின் வீட்டை அரண்மனை என்றுதான் அழைக்கப்படுகிறது.
மார்தோமா, ஜேக்கபைட், கத்தோலிக்க சபைகளின் பிஷப் இல்லம் அரண்மனை என்றுதான் அழைக்கப்படுகிறது.
பிஷப் அவர்களை திருமேனி என்றுதான் அழைக்கிறார்கள். திருமேனி என்றால்
உயர்ந்த பரிசுத்த சரீரம் உள்ளவர் என்று அர்த்தமாகும். அந்த அர்த்தத்தில்தான் பழையகால கேரள உயர்ஜாதி
பிராமணர்கள் எல்லாரையும் கேரள நாட்டிலுள்ள அனைவரும்
திருமேனி என்றுதான் அழைப்பார்கள். இப்போதும் இந்த நவீன காலத்திலும் பலர் அப்படியே அழைக்கின்றனர்.
சில இடங்களில் சிஎஸ்ஐ பிஷப்மார்களும், தங்களையும்
திருமேனி என்று அழைக்கப்படுவதை விரும்புகின்றனர். (அது ராஜ ஸ்தானத்து பெருமைக்குரிய பெயர்).
பிஷப் அவர்கள் வாலிபனைப் பார்த்து மகா பரிசுத்த வேதபுத்தகத்தை நீ தொட்டு வாசிக்க அனுமதியளித்தது யார்? என்று ஆத்திரத்துடன் கேட்டார். அதற்கு அந்த வாலிபன் முன்பு பிஷப் நீதிமன்ற அதிகாரியிடம் கூறிய பதிலையே பிஷப்பிடமும் கூறினான்.
இனி நீ வேதத்தை தொடுவதோ, வாசிப்பதோ கூடாது என்று கண்டிப்பாக அவனுக்கு கட்டளையிட்டார். ஆனால் அந்த பையனோ சற்றும் பயப்படாமல் நான் உயிரோடு இருக்கும் காலம் வரை வேதத்தை எங்கிருந்தாலும் இரகசியமாக வாங்கி படிக்க புதிய தீர்மானம் எடுத்திருப்பதாகவும் அது என்னை பரிசுத்தமாகவும், உண்மையுள்ளவனாகவும் வாழவைக்க உதவும் என்று தான் நம்புவதாகவும் கூறினான்.
அவனின் தீர்க்கமான பதிலால் பிஷப் கோபமுற்று இவன் ஒரு
கிறிஸ்தவ மத விரோதி என்று குற்றஞ்சாட்டி பிஷப்பின் குற்றசாட்டுடன் நீதிபதிமுன் நிறுத்தப்பட்டான். கிறிஸ்தவ சபைக்கு எதிரான
வேத புரட்டன் என்று அவன்மேல் குற்றஞ்சாட்டப்பட்டு லண்டனிலிருந்து பெரிய பிஷப்புக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
செயின்பால்ஸ் என்ற இடத்திலிருந்த கிறிஸ்தவ மத சம்பந்தமான நீதிமன்றத்துக்குமுன் அவன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டது. இங்கு அவனை
உயிரோடு எரிக்கப்படவேண்டும் என்றும் உடனே தீர்ப்பும் வழங்கப்பட்டது.
கிறிஸ்தவ சமூகம் - ஒரு
நல்ல கிறிஸ்தவனையே கொல்லும் கொடுமை அங்கு நடந்தது அந்த வாலிபன்
மரணதண்டனை நிறைவேற்றும் வரை ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். பல நண்பர்கள், உறவினர்கள் அவனை சந்தித்து போனார்கள். பரிதாபப்பட்டார்கள் அவ்வளவே! ஆனால் அந்த பையனை பெற்ற தாயும் - தகப்பனும் ஜெயிலில் அவனை பார்க்க
வரும்போதெல்லாம் தன் மகன் மன்னிப்பு கேட்டு மரண தண்டனையிலிருந்து தப்பிக்கும் ஆலோசனையை கூறாமல், மகனே நீ தொடங்கிய ஆவிக்குரிய ஜீவிய வழியிலேயே கடைசிவரை தொடர்ந்து நில் என்று அவன் சோர்ந்துபோகாதபடியும் மரணத்துக்கு அவனை ஆயத்தப்படுத்தும் வண்ணமாகவும் ஜெபம் செய்தார்கள். கிறிஸ்துவினிமித்தம் தன் ஜீவனையே இழக்க முன்வந்த தன் மகனுக்காக அந்த பெற்றோர் பெருமையடைந்து இப்படி
ஒரு மகனை எங்களுக்கு கொடுத்தீரே என்று தேவனை துதித்ததை ஜெயில் அதிகாரிகள் கண்டு அதிசயித்தார்கள்.
அந்த வாலிபன் பெற்றோரோடு கூறினான். அம்மா என்னை ஒரு மர கம்பத்தில் இருக்க கட்டி கீழே நெருப்பை எரிய விட்டு கொல்லப்போகிறார்கள். அந்த நெருப்பு சூடும், எரிச்சலும் கொஞ்சநேரம் மட்டும்தானே! அதற்குள் நான் மரித்து கர்த்தரின் சமூகத்தில்போய் சேர்ந்துவிடுவேன். அங்கு வேதனையோ, எரிச்சலோ இல்லாத அந்த இடத்தில்போய் நிலையான பேரின்பத்தை அனுபவிப்பேனே! அப்படித்தானே நம் வேத புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
கொஞ்சகாலம் பாடு அனுபவிக்கிறவர்கள் என்று வசனத்தில் குறிப்பிட்டுள்ளதை ஞாபகப்படுத்தி மகன் பெற்றோரை ஆறுதல்படுத்தினான். அந்த கொஞ்சநேரம் அனுபவிக்கபோகிற
நெருப்பின் வேதனைக்குபின் கிறிஸ்து எனக்கு மகிமையின்
கிரீடத்தை வாக்கு பண்ணியிருக்கிறார் என்று எல்லாரிடடும் கூறி மகிழ்ந்தான். |