இன்றைய கிறிஸ்தவ சபைகளிலும், ஸ்தாபனத்திலும்
"பரிசுத்த ஆவியும், ஞானமும் நிறைந்து, நற்சாட்சிப் பெற்றவர்கள் தேவை" என்று ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டால் அது ஒரு உயர்ந்த பதவிக்காகவோ அல்லது மேலான பொறுப்புக்காகவோ இருக்கும். இப்படிப்பட்ட உயர்ந்த தகுதிகளைப் சாதாராண சீஷனாகிய பிலிப்பு பெற்றிருந்தான். ஆனால் ஒரு
தாழ்மையான வேலையை ஏற்றுக்கொள்ள பிலிப்பு தயங்கவில்லை. அதுமட்டுமல்ல, பிலிப்பும் மற்ற ஆறு பேரும் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர்
"தேவவசனம் அந்த ஊரில் விருத்தியடைந்தது, சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று: ஆசாரியர்களில் அநேகரும் இயேசுவை விசுவாசித்து கீழ்ப்படிந்தார்கள்" என்று அப் 6:7ல் கூறப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். பந்தி விசாரிப்பு என்ற இந்த எளிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட 7 நபர்களும் சுவிசேஷம் அறிவிக்கும் ஊழித்திலிலும் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது.
அடுத்தப்படியாக
பிலிப்புவை நாம் அப் 8ம் அதிகாரத்தில் காண்கிறோம். அக்காலத்தில் எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அதனால் யாவரும் யூதேயா, சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுபோனார்கள். இந்த சூழ்நிலையில் பிலிப்பு சமாரியாவுக்கு சென்று இயேசு கிறிஸ்துவைக்குறித்து பிரசங்கித்தார். (அப் 8:5).
இயேசுகிறிஸ்து பரமேறுமுன் சீஷர்களுக்கு கொடுத்த கட்டளை
"பரிசுத்தஆவி உங்களிடத்தில்வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதில் சமாரியாவிலும் பூமியின் கடைசிப்பரியந்தம் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்" என்பதே. அப் 1:8. இதனை நினைவிற்கொண்டே பிலிப்பு
சமாரியாவிற்கு சென்றிருக்கக்கூடும். சமாரியாவில் இவரது ஊழியம் வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இவ்விதமாக சமாரிய ஊழியத்தின் உச்சக்கட்டத்தில் பிலிப்பு அந்த ஊழியத்தைவிட்டு
வனாந்திரத்திற்கு போகும்படி கர்த்தருடைய தூதனிடமிருந்து கட்டளை பெற்றார். இச்சூழ்நிலையில் வேறு எவராகயிருந்தாலும் இப்படியொரு மகிமையான ஊழியத்தை விட்டுச்செல்ல அவர்களுக்கு மனமிருந்திருக்காது. ஆனால்
பிலிப்பு எந்தவொரு மறுப்பும் சொல்லாமலும் எதற்காக அங்குச் செல்ல வேண்டும் என்றும் கேட்காமல் கர்த்தருடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து
ஒரே ஒரு மனிதனுக்காக சுவிசேஷம் அறிவிக்க வனாந்திரத்திற்குச் சென்றார்.
(ஆனால் இன்று சிலர் சபையானாலும், மிஷனரி ஸ்தாபனமானாலும் ஊழியம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக சற்று
தாழ்ந்த பதவியில் கொஞ்சநாள் ஊழியம் செய்யுங்கள் என்றோ, ஒரு
சிறிய சபைக்கு இடமாற்றம் செய்து கொஞ்சநாள் ஊழியம் செய்யுங்கள் என்றோ கூறினால் பலர் அதை ஈகோ பிரச்சனையாக கருதி அவர்கள் கோபத்தை ஊழியத்தின்மீதும் நிர்வாகத்தின்மீதும் காண்பிப்பார்கள். சிலர் கத்த்தரின்மீதும் கோபத்தை காட்டுகிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு
ஜெபம் செய்ய ஆசைவருவதில்லை. வேதம் அறவே வாசிப்பதில்லை. இப்படி செய்து அறவே தேவனைவிட்டு விலகிபோய்விடுகிறார்கள். இந்த பிலிப்பின் செய்தி அப்படிப்பட்டவர்களுக்கு பிரயோஜமாக இருக்கவேண்டும் என்பதற்காக
டாக்டர்.முரளிதர் அவர்கள் எழுதிய செய்தியில் அவர் உத்தரவு இல்லாமலே நான் உள்ளே புகுந்து என் உள்ளத்தின் பாரத்தை பகிர்ந்து கொண்டேன்)
அந்த வனாந்திரத்தின் வழியாய் எருசலேமிலிருந்து
எத்தியோப்பியாவுக்கு இரதத்திலே பிரயாணம் செய்துகொண்டிருந்த அந்த
எத்தியோப்பிய மந்திரியுடன் போய் சேர்ந்துக்கொள்ளும்படி
ஆவியானவர் பிலிப்புக்கு கட்டளையிட்டார். அப்போது பிலிப்பு ஓடிப்போய் அந்த இரதத்தோடு சேர்ந்தார் என்று வேதம் கூறுகின்றது.
"பிலிப்பு ஓடிப்போய் சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக்கேட்டு நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா" என்று கேள்விகேட்டு
சுவிசேஷம் அறிவிக்கும் ஊழிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறான். (அப் 8:30).
பிலிப்பு அன்று சுவிசேஷம் அறிவித்த
சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள். அன்று அந்த குதிரைகளின் வேகத்தைவிட அதிவேகமாக பிலிப்பு
ஓடியிருக்கவேண்டும். ஓடிக்கொண்டே அந்த இரதத்தின் இரைச்சலின் நடுவே அந்த
மந்திரி வாசிக்கிறது என்னவென்பதை பிலிப்புவினால் அறிந்துக்கொள்ள முடிந்தது. |