இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால்: இந்த ஆசிரியையோ, ஆயரோ (பாஸ்டர்)
நிர்வாகத்துக்கு அல்லது தலைவரான பிஷப்புக்கு எதிராக
புகார் ஏதும் கொடுக்காமலே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதராவாக நிலைமைகள் மாறியது. முதலாவது கர்த்தர்
பிஷப்பை அடித்து ஒரு இடத்தில் படுக்கவைத்து, அரசாங்க அதிகாரிகளை ஆண்டவரே இயங்கவைத்து நியாயமில்லாத இந்த இடமாற்றத்தை சரிப்படுத்த வைத்தார். எத்தனை
பெரிய அற்புதம் இது!.
நம் தேவன் வானத்தையும், பூமியையும் படைத்தவர். அவர் சர்வ அதிகாரம் பெற்றவர், தன் பிள்ளைகளுக்கு, மிஷனரிகளுக்கு, ஊழியர்களுக்கு யார் தீங்கு இழைக்க முயன்றாலும் அது
அரசாங்கமானாலும், பிரதமரானாலும், பிஷப்பானாலும் மேலே வாசித்த ஊழியக்காரர் குடும்பத்துக்கு செய்ததுபோல் கர்த்தர்
சத்தமில்லாமல் தண்டனையை நிறைவேற்றி செயல்படுவார்.
"உன்னை தொடுகிறவன் என் கண்மணியை தொடுகிறான்" என்று கர்த்தர் கூறியிருக்கிறார்.
ஆகவே ஆட்சி மாறினாலும், அதிகாரம் மாறினாலும் உலக சட்டம் நம்மை துன்புறுத்தினாலும், கிறிஸ்தவர்கள் பயப்படவேண்டாம்.
"யுத்தம் என்னுடையது!. நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" என்று கர்த்தர் கூறினார். இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவர்களே போராடுவார்கள். பதிலுக்கு பதில் அவர்களே செய்வார்கள். ஆனால் கிறிஸ்தவர்களுக்கோ
சேனைகளின் அதிபதியான நம் தேவன் கிறிஸ்தவர்களுக்காக போராடுவார். பயம் வேண்டாம். புதிய இந்திய ஆட்சியின் பயம் கிறிஸ்தவர்களுக்கு வேண்டாம்.
நம்முடைய தேவன் உயிருள்ளவர் சகலத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
கர்த்தர் நம் தேசத்தை அழிக்காதபடிக்கு திறப்பின்வாசலில் நிற்க நாட்டுக்காக, பிரதமருக்காக ஜெபிக்க உண்மை கிறிஸ்தவர்களை கர்த்தர் தேடிக்கொண்டிருக்கிறார். எசே 22:30. நாம் செய்யவேண்டியது நம் புதிய பிரதமர்.திரு.நரேந்திரமோடி அவர்களுக்காக ஜெபிப்போம். RSS, பஜ்ரங்தள் தலைவர்களுக்காக ஜெபிப்போம். இயேசு அவர்களுக்காகவும் இரத்தம் சிந்தியுள்ளார். அவர்களை இயேசு நேசிக்கிறார். வாசகர்கள் யாவரும் தினசரி ஜெபிப்போம்.
பாரதம் இயேசுவை அறியவேண்டும். பிரதமர் இயேசுவை அறியவேண்டும். ஜெபிப்போம் கர்த்தர் நம் தேசத்தை ஆசீர்வதிப்பராக.
"வாழ்க பாரதம்". |