இயேசுகிறிஸ்துவை இரட்சகராக, பாவமன்னிப்பை அருளுகிறவராக உண்மையான, உயிருள்ள தெய்வமாக மற்றவர்களுக்கு அறிவிக்கும்போது, அறிக்கை செய்யும்போது மிஷனரிகள்
கொல்லப்படுவதை அவர்கள் இரத்தசாட்சிகளாய் மரித்தார்கள் என்று கூறக்கேள்விப்பட்டிருக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் எல்லாரும் கிறிஸ்துவை இரட்சகராக அறிவித்த காரணத்தால் அனைவருமே உயிரோடு கொல்லப்பட்டார்கள்.
ஆப்பிரிக்கா, நியூகினி தீவுகள், ரஷ்யா, சீனா இப்படிப்பட்ட நாடுகளில் இயேசுவை அறிவிக்க சென்ற பலர் அங்குள்ள மக்களால் கொல்லப்பட்டு இரத்த சாட்சிகளாய் மரித்தனர்.
ஆனால் மார்டீன் லூத்தர் கத்தோலிக்க சபையிலிருந்து
புராட்டஸ்டன்ட் சீர்திருத்த பிரிவை தொடங்கிய காலத்தில் பலர் வேத புத்தகத்தின் அருமையை கர்த்தரின் வசனத்தின் வல்லமையை, வசனத்தின் ஆறுதலை ருசிக்கவும் அனுபவிக்கவும் வாஞ்சித்தார்கள். ஆனால் அந்த சீர்திருத்த கால ஆரம்பத்தில் பாரம்பரிய கிறிஸ்தவ கத்தோலிக்க சபையானது கிறிஸ்துவையும், மரியாளையும் மரித்த பரிசுத்தவான்களின்
சிலைகளைமட்டும் வணங்கவும், சில கிறிஸ்தவ சடங்காசார முறைகளை பின்பற்றவும் கிறிஸ்தவத்திலேயே சில மூடநம்பிக்கைகளை பின்பற்றவும், கிறிஸ்தவ மத தலைவர்கள் சபை மக்களை கட்டாயப்படுத்தினர். நாட்டின் ஆளுகையும் அவர்கள் கையில்தான் இருந்தது. அவர்கள் கட்டளையின்படிதான் சபைகளும் நடத்தப்பட்டது. |