திரு.மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது அந்த கொடூர மதகொலைகள் நடந்த அந்த
மூன்று நாட்களை தவிர்த்து அவர் முதல்வர் பதவிவிலகும்வரை
RSS, பஜ்ரங்தள் போன்ற அரசியல்வாதிகளை தனது நிர்வாகத்தில் குறுக்கிடாமல் பார்த்துக்கொண்டு செவ்வனே ஆட்சி நடத்தி அவர்
உலக புகழ் பெற்றதுபோல் திரு.மோடி அவர்கள் ஆட்சியில்
இந்தியா மாறவேண்டும் என்று பிரதமர் பதவியை மக்கள் மிக நம்பிக்கையுடன் திரு.மோடி கையில் ஒப்படைத்துள்ளார்கள். தான் டீ கடையிலிருந்து
உயரத்தில் வந்ததை அவர் நினைத்து பாரத தேசத்தில் அடிப்படை வசதிகள் கிடைக்காத கிராம மக்களை குறிப்பாக
தலித்துகள், ஆதிவாசிகள், கிராமங்களில் வசிக்கும் மக்களின் முன்னேற்றத்துக்கு
கல்வி, மருத்துவம் ஆகியவைகள் கிடைக்க முன்னேற உதவி செய்யவேண்டும். நகர்புற நடுத்தர மக்களின் தேவைகளும் ஏராளம் உண்டு.
ஆதிவாசிகள் குடியிருக்கும் காடுகளுக்கு சாலை வசதி செய்து கொடுத்து, பஸ் வசதிகளும் செய்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தினால் ஆதிவாசிகளின் பிள்ளைகள் உயர்கல்வி கற்க அதன் காரணமாக அங்கு ஆதிவாசிகளின் நிலை உயர மிக உதவியாக இருக்குமே! இந்த போக்குவரத்து சாலை வசதிகள் காடுகளுக்குள் உள்ள கிராம மக்களுக்கு கிடைத்துவிட்டால்
நாக்ஸ்லைட்டுகளுக்கு அங்கு மக்கள் ஆதரவு தரமாட்டார்கள். அரசாங்கம் செய்யவேண்டிய உதவிகளை இப்போது
நாக்ஸ்லைட்டுகள் மக்களுக்கு செய்து உதவுவதால் காட்டுவாசிகள் நாக்ஸ்லைட்டுகளை காட்டி கொடுக்க விருப்பப்படுவதில்லை. இதுதான் இப்போதுள்ள யதார்த்தம். இவைகளையெல்லாம் நிறைவேற்ற
பிரதமர் ஏற்பாடு செய்யவேண்டும்.
மத விஷயத்தில் பிரதமர் தான் சார்ந்த
இந்து இயக்கங்களை கலந்தாலோசிக்காமல் இந்தியாவில்
மதசுதந்திரத்துக்கு எல்லை போடாமல் தடை போடாமல் மக்கள் அவரவர் தெய்வங்களை ஆராதிக்க பூரண சுதந்திரம் அளிக்கவேண்டும்.
இஸ்லாமியர் மதமாற்றம் செய்தால் அதை யார் தடுத்தாலும் அவர்கள் மிகவும் கடுமையாக எதிர்ப்பார்கள். அதன் எதிர்விளைவுகளும் பயங்கரமாக இருக்கும். ஆனால்
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் யாரையும் மதம் மாற்றுவதில்லை. மதத்தை
பரப்புவதுமில்லை. காரணம், கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல. அது
மார்க்கம். எங்கள் வேதம் கிறிஸ்துவை அறிவிக்க கட்டளையிட்டுள்ளது. நாங்கள் அதைத்தான் செய்கிறோம். அது எங்கள்
தெய்வத்தின் கட்டளை. உலகத்தின் எந்த நாட்டின் அரசாங்கமும் அதை தடைசெய்ய முடியாது. அதை நாங்கள்
அறிவிப்பது எங்கள் கடமைகளில் ஒன்றாகிறது. யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை. அப்படி நாங்கள் இயேசுவை மற்றவர்களுக்கு
அறிவிக்கும்போது அதை தடுத்தாலோ, இயேசுவை அறிவிக்கும் எங்களை
துன்புறுத்தினாலோ பதிலுக்கு நாங்கள் யாரையும் தாக்குவதில்லை. நாங்கள் பதிலுக்குபதில்
தாக்கக்கூடாது என்றுதான் எங்கள் வேதம் எங்களுக்கு
கட்டளையிட்டுள்ளது. ஆகவே நாங்கள் அன்பை அறிவிக்க, சமாதானத்தை அறிவிக்க இதன் மூல காரணகர்த்தராகிய
இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க திரு.மோடியின் அரசாங்கம் தடையேதும், உண்டாக்காமல் இருக்க இந்திய
பிரதமரான நீங்கள்தான் எங்களுக்கு உதவவேண்டும். ஏற்கனவே கிறிஸ்தவ
டாக்டர்களை, மிஷனரிகளை, சிறுபிள்ளைகளையும் சேர்த்து காரில் வைத்து உயிரோடு நெருப்பு வைத்து கொளுத்தி கொன்றது உங்களால் மறந்திருக்க முடியாது.
சேவை மனப்பான்மையுடன் சொந்த ஊரைவிட்டு, சொந்த வாழ்க்கையை மறந்து சேவை செய்த
கன்னியாஸ்தீரிகளை மானபங்கப்படுத்தி கொலை செய்தது குறித்து உலகமெ இந்தியாவிடம் கேள்வி கேட்டதே! |