மக்களின் பயத்துக்கு காரணம். திரு.மோடி அவர்களை
RSS, பஜ்ரங்தள் என்ற இரண்டுமத தீவிரவாத இயக்கங்கள் நிழல் இயக்கங்களாக பிரதமருக்கு பின்னால் இருந்துகொண்டு தங்கள் கொள்கைப்படிதான் இந்திய நாட்டை பிரதமர் நடத்தி செல்லவேண்டும் என்று திரு.மோடி அவர்களை கட்டாயப்படுத்தும். இப்போதே
RSS இயக்க தலைவர் திரு.நடராஜன் அவர்கள் தங்கள் வலைதளத்தில்
[email protected] - ல் பிரதமர்.மோடி அவர்கள் தன் மந்திரி சபையில் சேர்க்கும் மந்திரிகளை
RSS குறிப்பிடும் நபர்களைத்தான் மந்திரிகளாக நியமிக்கவேண்டும் என்று நாங்கள் (RSS) மோடியை நிர்பந்திப்பதில் தவறேதும் இல்லை என்கிறார். பிரதமர்.மோடி ஆட்சிக்கு
RSS இயக்கம் ஒரு ராஜகுருவாக இருப்பதிலும் தவறில்லை. பிரதமர்.மோடி அவர்களுக்கு (கொல்ஜியம்) (RSS)
ஆலோசனை அமைப்பு தேவை என்று அவர் பகிரங்கமாகவே எழுதி வெளியிட்டுள்ளார். இது நிச்சயம் பிரதமர்.மோடி அவர்களை
பெரும் சிக்கலில் ஆழ்த்தும்.
RSS தலைவர் கூறியதை உண்மையாக்கும் விதத்தில்
BJPயின் தேர்தல் வாக்குறுதியாக திரு.மோடி அவர்கள் நாட்டின் சமாதானத்தை கெடுக்கும்
மூன்று பிரச்சனையுள்ள தேர்தல் அறிக்கைகளை புத்தகமாக வெளியிட்டு அதை மேடையில் பகிரங்கப்படுத்தியுள்ளார். அதைக்குறித்து மோடி அவர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசும்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலாவதாக அந்த மூன்று சட்டங்களை நிறைவேற்றுவோம் என்று கூறினார். அவைகளாவன:
1). பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே அயோத்தியில்
ராமர்கோவில் கட்டுவோம் என்றார்கள்.
2). பசு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்படும் என்றார்கள்.
3). பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்றார்கள்.
மேலே குறிப்பிட்ட 3 தேர்தல் வாக்குறுதிகளும் திரு.மோடி அவர்கள் நிறைவேற்ற முயலுவாரானால் இந்தியாவில் நிச்சயம்
மதக்கலவரமும், உள்நாட்டு போரும் உண்டாகி இந்தியா எங்கும்
இரத்த ஆறு ஓடும் என்பதில் சந்தேகமில்லை என்று அரசியல் கணிப்பாளார்கள் கூறுகிறதாக செய்திகள் வந்துள்ளன.
மேலே குறிப்பிட்ட 3 தேர்தல் அறிக்கைகளும்,
சிறுபான்மை இனம் என்றழைக்கப்படும் இஸ்லாமியர், கிறிஸ்தவர் போன்ற சில மதத்தினரை மனதில் வைத்து அறிவித்த அறிக்கையாகும் என்கிறார்கள். மேலும் இந்த
அறிக்கைகள் அந்த சிறுபான்மையினரின் வெறுப்பையும், பகையையும் கூடுதலாக்கும். அது நம் இந்திய தேசத்தின்
சமாதானத்தையும் கெடுத்து தேசமெங்கும் மதகலவரத்தை உண்டாக்கி இந்தியாவின்
பொருளாதாரத்தையே சீர்குலைக்கும்.
ஒரு பாபர் மசூதி இடித்ததையே இஸ்லாமியர் இன்னும் மறக்கவில்லை. அவைகளை மறக்க இயலாத இஸ்லாமியரில்
ஒரு பெரும்கூட்டம் உலகெங்கும் பழி வாங்க துடித்துக்கொண்டிருக்கிறது. புதிய ஆட்சி தொடங்கியவுடன் பயங்காரவாதத்தை தூண்டும் இந்த தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்பட்டால் தொடர்ந்து இவர்கள் எப்படி நிம்மதியாக ஆட்சி நடத்தமுடியும்? மக்கள் எப்படி நிம்மதியாக வாழ்வார்கள்?. பிறகு
ஜனாதிபதி ஆட்சி - மறுதேர்தல் என்று இந்திய அரசியலில் காட்சிகள் மாறும்.
பசு வதை சட்டம்: பசு மாடுகளையும், காளை மாடுகளையும் வெட்டக்கூடாது என்றால்
காளை இறைச்சியை வழமையாக சாப்பிடும் இஸ்லாமியர்களையும், கேரளா மாநிலத்தில் உள்ளவர்களையும் இது வெகுவாக பாதிக்கும். தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட அந்த குறிப்பிட்ட மாதங்களிலேயே
காளைகளை இறைச்சிக்காக வெளிமாநிலங்களுக்கு கொண்டுபோகப்பட்ட வாகனங்களை
RSS இயக்கத்தினர் தடை செய்துள்ளார்கள். வட இந்தியாவில் காளை இறைச்சியை கசாப்பு கடைகளுக்கு கொண்டுப்போன தலித் மக்கள் சிலர் கொலை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி இந்திய மக்களுக்கு ஆபத்தான எச்சரிப்பாக அமைந்ததுள்ளது.
பொது சிவில் சட்டம்:
திருமணம் முதல் மததொழுகை, சவ அடக்கம், மத பண்டிகைகளின்
சடங்குகள், மதகலாச்சார வழக்கம் போன்ற விஷயங்களில்
இஸ்லாமியரை மாத்திரம் அல்ல, இந்து மத்திலேயே பல பிரிவுகளிலுள்ள பலஜாதி இந்துமத மக்களை இந்த சட்டம் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். |