இந்த இரண்டு செயல்களுமே அசாதாரணமான செயல்கள் ஆகும். இவைகளை
பிலிப்பு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் மட்டுமே செய்திருக்கக்கூடும். பரிசுத்த ஆவியானவர்தான்
தாழ்மையை கற்றுக்கொடுத்து ஓடிக்கொண்டே சுவிசேஷம் அறிவிப்பதை முறுமுறுப்பு இல்லாமல் நிறைவேற்ற கற்றுக்கொடுத்திருப்பார். இதை கவனித்த அந்த மந்திரி
பிலிப்பை ஒரு விசேஷமான மனிதர் என்று உணர்ந்து அவரை
தன்னுடைய இரதத்திலே ஏற்றி தன்னோடு உட்காரும்படி வேண்டிக் கொண்டான். (அப் 8:31).
அன்று பிலிப்பு அவனோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்துக்கொண்டதின் விளைவாக
எத்தியோப்பியாவிலேயே அதிக உயர்ந்த பதவி வகிக்கும் செல்வாக்குள்ள மந்திரி பதவி வகிக்கும் ஒருவர்
இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானமும் பெற்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பிலிப்பு
"என்னை எத்தியோப்பியாவுக்கு அழையுங்கள் நான் வந்து உங்கள் நாட்டில் கன்வென்ஷனில் பேசுவேன், சுவிசேஷம் அறிவிப்பேன் என்று கூறவில்லை!. அந்த
எத்தியோப்பிய மந்திரியின் மூலமாகவே அந்நாட்டில் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதுதான் தேவனுடைய சித்தமாயிருந்தது.
பிலிப்புவோ தனிமனிதருக்கு சுவிசேஷம் அறிவித்தவுடன்
தேவ ஆவியானவருடைய வழி நடத்துதலுக்கு கட்டுப்பட்டவராய் அவ்விடத்திலிருந்து மறைந்து
ஆசோத்திலெ காணப்பட்டு அதன்பின் அவ்விடத்திலிருந்து பிரயாணம்
பண்ணி செசரியாவுக்கு வருகிற வரையில் வழியெங்கும் சகல
பட்டணங்களிலும் சுவிசேஷத்தை பிரசங்கித்துக்கொண்டு
வந்தார்" அப்8:40 என்று கூறப்பட்டுள்ளது. இதன்பிறகு எங்கும் போகாமல்
பிலிப்பு செசரியாவிலே தங்கி தன் ஊழியத்தை தொடர்ந்திருக்கக்கூடும். ஏனெனில் பவுலும் அவரை சேர்ந்தவர்களும் இப்பட்டிணத்தில்தான் பிலிப்புவின் வீட்டில் தங்கினார்கள் என்று அப் 21:8ம் வசனத்தில் நாம் வாசித்தோம்.
இப்படியாக தன்னுடைய ஆவிக்குரிய நல்ல தகுதிகளினாலே அப்போஸ்தலரால் தெரிந்தெடுக்கப்பட்டும், ஒரு
எளிய பொறுப்பை மனதார ஏற்றுக்கொண்டு அந்த சிறு ஊழியத்தில் பிலிப்பு சிறப்பாக செயல்பட்டது மட்டுமில்லாமல், தொடர்ந்து ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு முழுவதுமாக கட்டுப்பாடு, தன் விருப்பு வெறுப்புகளையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, உண்மையாய் ஊழியம் செய்த
பிலிப்புவை மட்டுமே வேதம் சுவிசேஷகன் (Evangelist) என்று அழைக்கின்றது.
இவ்வாறு சிறப்பான ஊழியத்தைச் செய்த பிலிப்புவுக்கு பிரதிபலனாக கர்த்தர் அருளிய ஆசீர்வாதம் என்ன தெரியுமா?
தீர்க்கதரிசனம் சொல்லுகிற நான்கு குமாரத்திகளை பிலிப்புவின் குடும்பத்தில் எழுப்பி அவர்களையும் ஊழியத்தையும் உபயோகித்தார். அப் 21:9. கர்த்தருக்கு உத்தமும், உண்மையுமாக ஊழியம் செய்யும் ஊழியர்களின்
சந்ததியை ஆண்டவர் பிள்ளைகள் மூலமாகவும் ஆசீர்வதிக்கிறார் என்பதற்கு
பிலிப்புவின் குடும்பம் ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.
ஆசீர்வாதம் என்று கூறும்பொழுது அது உலக பிரகாரமான ஆசீர்வாதங்கள் மட்டுமல்ல, அதைவிட மேலான
ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தம் ஊழியர்களுக்கு தேவன் அருளுகிறார் என்பதை இங்கு காண்கிறோம்.
அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபே 1:3.
ஜாமக்காரன் குறிப்பு:
Dr.புஷ்பராஜாகிய நான் Dr.பில்லிகிரஹாகாம் அவர்கள்
ஹாலந்து தேசத்தில் ஆம்ஸ்டர்டேம் என்ற இடத்தில் நடத்திய உலக ஊழியர்கள் மகா நாட்டில் கலந்துக்கொள்ள நானும், திருநெல்வேலி திருமண்டல பிஷப்.Rt.Rev.ஜேஸன் தர்மராஜ் அவர்களும் கலந்துக் கொண்டோம். எங்கள் இருவரையும் ஒரே அறையில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் பெரிய மண்டபத்தில் காலையிலிருந்து - இரவுவரை மூன்று கூட்டங்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒவ்வொரு கூட்டம் முடிந்தவுடன் சாப்பிடும் மண்டபத்துக்கு நாங்கள் யாவரும் செல்வோம். அங்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ஊழியர்கள்,
சிறிய, பெரிய பிரசங்கிமார்கள் பலர் வந்திருந்தனர். |