மத சார்பற்ற கட்சி என்ற பெயர் நிலைநாட்ட காங்கிரஸ் தலைமையின் குறிப்பாக முன்னாள் பிரதமரின் மௌன அரசியல் விளையாட்டுதான் பாபர் மசூதி இடிப்பு சம்பவமாகும். அதனால் முழு இந்தியாவும் அடைந்த வேதனை எவ்வளவு? இதன் பின்விளைவு உலகத்தின் அனைத்து பாகங்களிலும் பரவியதே? எங்கும் சமாதான குலைச்சல். இதன்மூலம் மக்கள் அடைந்த வேதனை கொஞ்ச நஞ்சமல்ல, இதன்மூலம் மக்கள் BJP கட்சியை வெறுப்பார்கள் என்ற இவர்களின் திட்டத்துக்கு, சமீபத்தில் நடந்த இந்திய தேர்தலில் இந்திய மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த சரியான அடியாகும். இந்த தேர்தலில் BJP வெற்றி அடைய அரசியல் கணிப்பாளர்கள் கூறும் காரணங்களில் அதுவும் ஒன்றாக அமைந்தது. தினசரி இந்தியாவில் குண்டு வெடிக்காத நாளேயில்லை என்று கூறத்தக்கதாக இஸ்லாமியர்களின் உள்ளத்தில் ஏற்பட்ட வெறுப்பும், வெறியும் இன்றுவரை மாறவில்லை. ஆகவே பாபர் மசூதி இடித்ததற்கு BJP மட்டுமல்ல, அன்றைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியாளரும்தான் காரணராகும்.


இப்போது தேர்தலில் ஜெயித்தது BJP அல்ல என்றேன்:

காரணம், BJP, RSS பஜ்ரங்தள் ஆகிய கட்சிகள் யாவும் இந்துமத வெறி உள்ளவர்கள். இவர்கள் முஸ்லீம் மதத்தை வெறுப்பவர்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய தேசத்தில் பெரும்பான்மை மக்களாக மாறிக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்களுக்கும் - இந்து மதத்தில் இருப்பவர்களுக்கும் நிச்சயம் மதகலவரம் வெடிக்கும் என்ற பயம் இந்தியா முழுவதும் உள்ள எல்லார் உள்ளத்திலும் மட்டுமல்ல, BJPயில் உள்ள பலரின் உள்ளத்திலும்கூட இந்த பயம் இருந்தது!. பின் எப்படி BJP ஜெயித்தார்கள்?.

முன்புநான் குறிப்பிட்டதுபோல இந்தியாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ்க்கு மாற்று கட்சி என்ற யாரும் இல்லாத காரணத்தால் மக்கள் உள்ளத்தில் BJP மீது பயம் இருந்தாலும் திரு.மோடி என்ற தனி நபர்மேல் வைத்த நம்பிக்கைதான் வெற்றிக்கு காரணம் ஆகும்.

திரு.மோடியும், RSS என்ற இந்துமத தீவிரவாத இயக்கத்தில் தனது 8வது வயதிலேயே இணைந்தார். அப்படியே அந்த RSS இயக்க கொள்கையையும் தன் இதயத்தின் அடிதளத்தில் புதைத்துக்கொண்டார். குஜராத்தில் தன் நல்ல நிர்வாகத்தின் மூலம் பல நல்ல செயல்களை நடத்தி தன் உள்ளத்தில் உள்ள RSS பாசத்தை தற்காலிகமாக மறைத்துக்கொண்டவர். ஆனால் உள்ளத்தில் அடங்கியிருந்த அந்த RSS மத தீவிரவாதத்தை, குஜராத்தில் RSS இயக்கத்தை கட்டவிழ்த்துவிட்டதால் அவர்கள் அந்த பயங்கர மூன்று நாட்களில் குஜாரத்தில் உள்ள இஸ்லாமியர்களை உயிரோடு வெட்டிகுவித்ததும், அவர்களில் இன்றும் 5000த்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வீடிழந்து, குடும்பம் இழந்து அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி இப்போதும் வாழ்ந்துக் கொண்டிருப்பதை வெளி உலகம் அறியவில்லை. திரு.மோடியின் உள்ளத்தில் புதைத்திருந்த RSS கொள்கை அந்த மூன்று நாட்களில் வெளிப்பட்டதே!. இந்த சம்பவம் காரணமான பயம் இந்திய மக்கள் உள்ளத்திலும் மாறாமல் பயந்து கொண்டுதான் வேறு வழியேதும் இல்லாமல் திரு.மோடி அவர்களை ஜெயிக்க வைத்தனர்.


புதிய பிரதமர்.திரு.மோடி அவர்கள் இந்தியாவின் எல்லா
மதத்தினருக்கும் இப்போது பொது தலைவர் ஆகிவிட்டார்.

இந்தியா பல மதங்களையும், பலவித கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய நாடு ஆகும். பல ஆயிரம் பாஷைகள், பல ஆயிரம் மதங்களும் ஆயிரக்கணக்கான வித்தியாசமுள்ள கலாச்சாரங்களும் நிறைந்த மக்கள் அடங்கியதுதான் இந்திய தேசமாகும். இந்த தேர்தலில் பெரும்பாலான ஓட்டுகளை BJPக்கு அளித்த இந்திய மக்கள் மேலே குறிப்பிட்டப்படி ஒருவித பயத்தோடுதான் திரு.மோடி அவர்களை பிரதமராக தெரிந்தெடுத்துள்ளனர்.

திரு.மோடி பிரதமராக பொறுப்பெடுத்தவுடன் இந்திய மக்களின் இந்த பயத்தை நீக்கும் வகையில் செயல்படவேண்டும் என்பது எங்களின் தாழ்மையான வேண்டுகோள் ஆகும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN