காரணம், BJP, RSS பஜ்ரங்தள் ஆகிய கட்சிகள் யாவும்
இந்துமத வெறி உள்ளவர்கள். இவர்கள் முஸ்லீம் மதத்தை வெறுப்பவர்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய தேசத்தில் பெரும்பான்மை மக்களாக மாறிக்கொண்டிருக்கும்
இஸ்லாமியர்களுக்கும் - இந்து மதத்தில் இருப்பவர்களுக்கும் நிச்சயம் மதகலவரம் வெடிக்கும் என்ற பயம் இந்தியா முழுவதும் உள்ள எல்லார் உள்ளத்திலும் மட்டுமல்ல,
BJPயில் உள்ள பலரின் உள்ளத்திலும்கூட இந்த பயம் இருந்தது!. பின் எப்படி
BJP ஜெயித்தார்கள்?.
முன்புநான் குறிப்பிட்டதுபோல இந்தியாவில் ஆட்சி அமைக்க
காங்கிரஸ்க்கு மாற்று கட்சி என்ற யாரும் இல்லாத காரணத்தால்
மக்கள் உள்ளத்தில் BJP மீது பயம் இருந்தாலும் திரு.மோடி என்ற தனி நபர்மேல் வைத்த நம்பிக்கைதான் வெற்றிக்கு காரணம் ஆகும்.
திரு.மோடியும், RSS என்ற
இந்துமத தீவிரவாத இயக்கத்தில் தனது 8வது வயதிலேயே இணைந்தார். அப்படியே அந்த
RSS இயக்க கொள்கையையும் தன் இதயத்தின் அடிதளத்தில் புதைத்துக்கொண்டார். குஜராத்தில் தன்
நல்ல நிர்வாகத்தின் மூலம் பல நல்ல செயல்களை நடத்தி தன் உள்ளத்தில் உள்ள
RSS பாசத்தை தற்காலிகமாக மறைத்துக்கொண்டவர். ஆனால் உள்ளத்தில் அடங்கியிருந்த அந்த
RSS மத தீவிரவாதத்தை, குஜராத்தில் RSS இயக்கத்தை கட்டவிழ்த்துவிட்டதால் அவர்கள்
அந்த பயங்கர மூன்று நாட்களில் குஜாரத்தில் உள்ள இஸ்லாமியர்களை
உயிரோடு வெட்டிகுவித்ததும், அவர்களில் இன்றும் 5000த்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வீடிழந்து, குடும்பம் இழந்து
அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி இப்போதும் வாழ்ந்துக் கொண்டிருப்பதை வெளி உலகம் அறியவில்லை. திரு.மோடியின் உள்ளத்தில் புதைத்திருந்த
RSS கொள்கை அந்த மூன்று நாட்களில் வெளிப்பட்டதே!. இந்த சம்பவம் காரணமான பயம் இந்திய மக்கள் உள்ளத்திலும் மாறாமல் பயந்து கொண்டுதான் வேறு வழியேதும் இல்லாமல் திரு.மோடி அவர்களை ஜெயிக்க வைத்தனர். |