கடிதம் 1: ஜாமக்காரன் மூலம் நாங்கள் குடும்பமாக சரியான வேத வசன உபதேசத்தில் நடக்க மிக உதவியாக இருந்தது. உங்களுக்கும் உங்கள் ஜாமக்காரனுக்கும் நன்றி.
2003ம் ஆண்டுவரை நான் கிறிஸ்தவ ஜீவியத்துக்கு முற்றிலும் தொடர்பில்லாதவனாக இருந்தேன். அப்போது
ஒரு பெந்தேகோஸ்தே பாஸ்டரின் அறிமுகம் கிடைத்தது. அவரோடு இணைந்து
பெர்க்மான்ஸ் பாடல்களை உற்சாகமாக பாடுவதும், அந்நியபாஷை பேசுவதும் தீர்க்கதரிசனம் உரைப்பதும், தலைமேல் கை வைத்தல், கைகளைதட்டிக்கொண்டே கீழே விழுவதும், தரையில் விழுந்து புரளுவதுமாக இருந்தேன். பார்ப்பவர்கள் ஆவியானவர் மிக வல்லமையாக என்மேல் இருக்கிறார் என்று பலர் நினைத்தார்கள். ஆனால் அதே சமயம் மனந்திரும்புதல், இரட்சிப்பு என்றால் என்ன என்றே எனக்கு தெரியாதவனாக இருந்தேன்.
உங்கள் ஆலோசனையின்படி நான் (LEF) Laymens
Evangelical Fellowship சபைக்கு சென்றேன். இங்கு நான் போகும் சபையில்
போதகரின் சாட்சியும், செய்தியும், தாழ்மையும், அவர் கடிந்துகொள்ளுதலும், என்னையும் என் குடும்பத்தையும் தலைகீழாக மாற்றின. இப்போது நான் வசனத்தில் வளருகிற மனசமாதானமுள்ள சாட்சியுள்ள குடும்ப வாழ்க்கை வாழ்கிறேன்.
- குன்னூர், ஊட்டி.
கடிதம் 2: ஜாமக்காரன் வெப் சைட்டில் நீங்கள் எழுதுவதை
இந்துசமய ஆதரவு மற்றும் கிறிஸ்தவ எதிர்ப்பு வெப்சைட்களில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க ஏதும் வழி இருந்தால் செய்யுங்கள்.
- இ-மெயில்
ஜாமக்காரன்: அறிவேன்! அவர்கள் ஜாமக்காரன் வெப் சைட்டிலிருந்து எடுத்து எழுதுவதை தடுக்க இயலாது. |