பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது
இரண்டாம் அனுபவமா?

வேதத்தில் புரிந்துக்கொள்வதற்கு கடினமான ஒரு பகுதி சமாரியர் ஆவியானவரைப் பெற்ற அனுபவமாகும். பரிசுத்த ஆவியானவரை நாம் எப்பொழுது பெறுகிறோம்? இரட்சிக்கப்படும்பொழுதா? அல்லது அதற்கென்று காத்திருந்து பிரத்யேகமாக ஜெபிக்கும்பொழுதா? இரட்சிப்பின் அனுபவம் என்பது ஒரு அனுபவம். பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது என்பது இரண்டாம் அனுபவம். இது சரியா? பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது இரண்டாம் அனுபவம் என்பதற்கு பெந்தேகோஸ்தே திருச்சபையினர் பயன்படுத்தும் முக்கியமான வேதபகுதி இந்த சமாரியருடைய அனுபவமாகும். பிலிப்பின் ஊழியத்தில் சமாரியர் இரட்சிக்கப்பட்டனர். அப்பொழுது பரிசுத்த ஆவியானவரைப் பெறவில்லை. பேதுருவும், யோவானும் வந்த பின்னரே பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள். எனவே இரட்சிக்கப்படுவது என்பது ஒரு அனுபவம். பரிசுத்த ஆவியை பெறுவது இரண்டாம் அனுபவம் இதுதான் பெந்தேகோஸ்தே திருச்சபையினரின் வாதம். இது சரியா? என்பதை புரிந்துக்கொள்வதற்கு இஸ்ரவேலர் சமாரியர் வரலாற்றையும் அவர்களது உறவின் நிலைமையும் ஆழ்ந்து ஆராயவேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது.


இஸ்ரவேலர் சமாரியர் வரலாறு:

முதலாவது சமாரியா எப்படி உருவானது என்று பார்ப்போம். சாலமோனுடைய அரசாட்சிக்குப்பிறகு இஸ்ரவேல் தேசம் அவர்களுக்குள்ளேயே பிரிவினை ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்தது. 10 கோத்திரங்கள் சேர்ந்து இஸ்ரவேல் தேசமாகவும், 2 கோத்திரங்கள் (யூதா, பென்யமின்) சேர்ந்து யூதா தேசமாகவும் பிரிந்தது. இந்த இரண்டு நாடுகளும் தங்களுக்கென்று தனித்தனியாக இராஜாக்களை ஏற்படுத்திக் கொண்டனர். யூதாவின் ராஜாவாக ஆசா ஆண்டு கொண்டு இருக்கும்பொழுது இஸ்ரவேலை உம்ரி ஆரசாள்கிறார். இந்த உம்ரி சேமேரிடமிருந்து ஒரு மலையை விலைக்கு வாங்கி, அதில் கோட்டைகளைக் கட்டி அதற்கு சமாரியா என்று பேரிட்டான்.

உம்ரிக்குப் பிறகு அவன் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலில் அரசாண்டபோது அவன் பாகாலுக்கு ஆலயம் கட்டி தேவனுக்கு விரோதமாக பாவம் செய்தான். இந்த மக்களின் பாகால் வணக்கத்தை தீர்க்கதரிசிகள் அனைவரும் கண்டித்தனர். இஸ்ரவேலர் சமாரியாவிலே தொடர்ந்து பாவம் செய்து கொண்டிருந்தபடியினால் தேவகோபம் ஏற்பட்டு அதன் விளைவாக சமாரியாவிலுள்ள இஸ்ரவேலர் அசீரியரால் கி.மு.722ல் சிறைபிடித்துக் செல்லப்பட்டனர். அசீரியா ராஜா சர்கோன் 2 பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பரிவாமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாக சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான். இவர்கள் சமாரியாவை சொந்தமாய் கட்டிக்கொண்டு அதன் பட்டணங்களிலே குடியிருந்தார்கள். (1 இராஜா 17:24). இப்பொழுது சமாரியாவில் பல்வேறு மதங்களும் உண்டானது. அதனால் சமாரியாவில் உள்ள இஸ்ரவேலரின் ஆவிக்குரிய வாழ்க்கையில் கலப்படம் உருவானது.


சமாரியர் = யூதர் உறவின் நிலை:

சிறையிருப்புக்குப்பின் இஸ்ரவேல் ஜனங்கள் எருசலேமிலே தேவாலயம் கட்ட விரும்பினர். இந்த வேளையில் சமாரியாவிலுள்ள இஸ்ரவேலரும் சேர்ந்து எருசலேமில் தேவலாயம் கட்ட முன்வந்தபோது விசுவாசத்தில் கறைப்பட்ட சமாரியரை எருசலேமின் யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரவேல், யூதா என்று இருநாடுகளாகப் பிரிந்தாலும், இஸ்ரவேலிலுள்ள ஜனங்கள் எருசலேமுக்கு வந்து தேவாலயப் பண்டிகையை கொண்டாடுவதையும், ஆராதிப்பதையும் விட்டுவிடவில்லை.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN