ஜோர்டான் தேசத்தில் யோர்தான் நதியின் மேற்கு கரை பகுதியான மிகமுக்கிய இடமான வெஸ்ட் பேங்கை இஸ்ரவேல் பிடித்து தன் நாட்டின் எல்லையை மேலும்மேலும் பெரிதாக்கிக்கொண்டது. யுத்தம் செய்த அத்தனை முஸ்லீம் நாடுகளும் ஏன் இந்த யுத்தம் செய்தோம் என்று தன் தோல்வியால் தளர்ந்துபோனது.

தேவன் தான் நேசிக்கும் நாடான இஸ்ரவேலை எப்படி இழப்பார்!. உலகில் உள்ள யாரும் அவர்களை ஜெயிக்கவிடாமல் பார்த்துக் கொண்டார். ஆனாலும் இஸ்ரவேல் தன் தேவனிடம் திரும்பாமல் தேவன் அனுப்பிய மேசியாவான இயேசுகிறிஸ்துவையும் ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் இருதயத்தை கடினப்படுத்திக் கொண்டிருக்கிறது. தன் சுய பெலத்தாலும், தந்திரத்தாலும் சாமர்த்தியத்தினால்தான் தாங்கள் ஜெயம் பெறுவதாக இஸ்ரவேல் மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இஸ்ரவேலின் இரட்சிப்புக்காக நாம் ஜெபிப்போம். அவர்களின் அகம்பாவம் நீங்கவும் இயேசுகிறிஸ்துவே மேசியா என்று ஏற்றுக்கொள்ளவும் நாம் ஜெபிப்போம்.

அந்த யுத்த தோல்விக்குபின் இஸ்லாமியர் மிகவும் தளர்ந்துபோனார்கள். யூதர்களோடு ஒரு கட்டத்தில் இஸ்ரவேலர்கள் சமாதான ஒப்பந்தம்கூட செய்துகொண்டனர். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே தாங்கள் யுத்தத்தில் பிடித்த இடங்களாகிய காசா (Gaza), (West Bank) வெஸ்ட் பேங்க் ஆகிய இடத்தைமட்டும் யூதர்கள் பாலஸ்தீனர்களுக்கு விட்டுக்கொடுத்தார்கள்.

பாலஸ்தீனர்களும் தங்கள் இனி தனிராணுவம் எங்களுக்காக வைக்கமாட்டோம், எங்களுக்கு உங்கள் (யூதர்களின்) ராணுவமே பாதுகாப்பாக இருக்கட்டும், பணமும், நாணயமும் இஸ்ரவேல் நாட்டின் நாணயத்தையே நாங்கள் எங்கள் புழக்கத்தில் வைத்துக்கொள்கிறோம், உங்களுடைய மாவட்ட(District)ங்களில் ஒன்றுபோல் நாங்கள் உங்களுடன் இணைந்துவாழ ஆசைப்படுகிறோம் என்று கூறி வாழ்ந்தார்கள். ஆனால் நாளாக நாளாக இஸ்ரவேல் நாடு தங்களை அளவுக்கு மீறி கட்டுப்படுத்துவதையும், ஆளுவதையும் பாலஸ்தீனியர்கள் விரும்பவில்லை.

அவர்களில் சிலர் இஸ்லாமிய கொள்கையோடுள்ள பற்றின் காரணமாக யூதர்கள்மேல் வெறுப்பு கொண்டு அடிக்கடி இஸ்ரவேலுக்குள் நுழைந்து இரகசியமாக யூதர்களை கொரில்லா முறையில் தாக்கிவிட்டு ஓடிவந்துவிடுவார்கள்.

பாலஸ்தீனர்களுக்கு நாட்டை பிரித்துக்கொடுக்கும்முன்பே ஏற்கனவே இஸ்ரவேல் தேசத்தில் யூதர்களோடு சுமார் 15 லட்சம் பாலஸ்தீனர்கள் குடியிருந்தார்கள். அவர்களால் எந்த பிரச்சனையும் யூதர்களுக்கு இல்லாமல் இருந்தது. இப்போது பாலஸ்தீனத்தில் இஸ்லாமிய வெறியுள்ள ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம் இஸ்ரவேல்மேல் 3000 ஏவுகணைகளை ஏவியுள்ளது. அது இப்போது யுத்தமாகவே மாறியுள்ளதால் இஸ்ரவேலும் பாலஸ்தீனர்கள்மீது தாக்குதல் நடத்தியதால் ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கைக்குழந்தைகளும், சிறுமிகளும், பெண்களும் இறந்து குவியலாக கிடப்பதை TVயில் காணும்போது மனம் பதறுகிறது.

பாலஸ்தீன நாட்டுக்காக போராடிய திரு.யாசர் அரபாத் அவர்களின் மரணத்துக்கு பின் பாலஸ்தீன தேசத்தில் கட்டுபாடு இல்லாமல் போயிற்று. இப்போது புதிதாய் தோன்றிய ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கத்துக்கு அல்-கெய்தா மற்றும் சில இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் ஆயுதங்களை கொடுத்து ஹமாஸ் இயக்கத்தை தூண்டிவிடுகிறது.

உலகிலுள்ள இஸ்லாமியர்கள் எண்ணிக்கையும் இப்போது மணலத்தனையாக பெருகிவிட்டது. தேவன் அன்று ஆகார்மூலமாக ஆசீர்வதித்ததைப்போல் இஸ்மவேல் சந்ததியை ஆசீர்வதித்தார். இவர்கள் மணல் பிரதேசமாகிய பாலைவனத்தில் வாழ்ந்தாலும் அங்கு எங்கு தோண்டினாலும் பெட்ரோல் ஊற்று பொங்கி வருவதால் பெட்ரோலை விற்று செல்வம் கொழித்த நிலையில் இஸ்மவேல் சந்ததியில் வறுமையில்லா நிலை ஏற்பட்டு அவர்களை திமிர் அடைய செய்தது. துஷ்டனாய் இருப்பான் என்று அன்று கூறிய தீர்க்கதரிசனத்தின்படி (இஸ்மவேல்) இஸ்லாமியர் எல்லாரையும் பகைத்துக்கொண்டு வாழ்கிறார்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN