மற்றொரு பக்கம் பிசாசுக்கு வல்லமை உண்டு என்றும், பிசாசை அழிக்க இயேசு கிறிஸ்துவால் முடியாது என்றும் கூறி அந்த கருத்தை உண்மையாக்கும் வகையில் பல பிசாசு சம்பந்தமான படங்களையும், செத்துப்போன ஆவிகளைப்பற்றிய வேத உபதேசத்துக்கு புறம்பான சினிமா படங்களையும் எடுத்து, பெரும் கூட்ட மக்களை குழப்பத்தில் ஆக்கமுயலுகிறார்கள். இப்படிப்பட்ட சினிமா அல்லது சீரியல் படங்களை எடுக்க யூத பணக்கார வியாபாரிகள் பலர் சினிமா தயாரிப்பாளருக்கு பண உதவிகளை செய்கிறார்கள்.

யூதர்கள் இன்னும் மனம் திரும்பவில்லை. ஆண்டவரோ மனவேதனையுடன் எருசலேமை பார்த்து கண்ணீர்விட்ட நிலையில் இருக்கிறார்.

இத்தனை காலம் பல பெரிய யுத்தங்களில் தாங்கள் ஜெயித்தது தங்களின் சொந்த சாமர்த்தியம் என்று யூதர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக கர்த்தரே யுத்தம் செய்து இஸ்ரவேல் மக்கள் மனம்திரும்ப வேண்டி காத்துக்கொண்டிருக்கிறார் என்பதை யூத மக்கள் இன்னும் உணர்ந்தபாடியில்லை.

ஆகவே அன்றைய தீர்க்கதரிசனமாக சங் 122:6ல் எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள், உன்னை நேசிப்பவர்கள் சுகித்திருப்பார்களாக என்று கர்த்தர் கூறியுள்ளார்.

இதுவரை இஸ்ரவேலுக்கு உதவிய அமெரிக்காவிடமிருந்து கிடைத்த உதவியும் நின்றுபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளன. இஸ்ரவேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து பாதுகாப்பு அல்லது உதவி செய்து தொடர்ந்தால் அமெரிக்கா மீது எல்லா இஸ்லாமியரும், அல்கொய்தாவுக்கு பதிலாக இப்போது தோன்றியுள்ள ISIS என்ற மற்றொரு தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து இஸ்ரவேல் மீது தாக்குதல் நடத்துவார்கள்.

ஆகவே இஸ்ரவேலுக்கு உதவி செய்து தேவையில்லாமல் இஸ்லாமியரின் பகையை ஏன் அதிமாக்குவானேன் என்று அமெரிக்கா செனட்டில் பலர் இஸ்ரவேல் நாட்டுக்கு பாதுகாப்பு மற்றும் ராணுவ உதவி அளிப்பதை நிறுத்திவிடும்படி கூறிவிட்டார்கள்.


ஆண்டவராகிய இயேசுவை அழ வைத்த யூதர்கள்:

எருசலேம் நகரம் சமீபமாக இயேசுகிறிஸ்து வந்தபோது எருசலேம் நகரத்தைப்பார்த்து.... கண்ணீர் விட்டழுதார். லூக் 19:41,42. காரணம் இந்த எருசலேம் பயணம் இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்து மரிக்கபோகும் முன் உள்ள கடைசி பயணமாகும்.

எருசலேம் வாழும் (இஸ்ரவேல்) யூத மக்களே உனக்கு கிடைத்த இந்த கடைசி சந்தர்ப்பமான (Last Opportunity) இந்த நாளிலாகிலும் உனக்கு சமாதானம் கொடுக்ககூடியவரை நீ புரிந்துக்கொண்டால் எவ்வளவு நலமாக இருக்கும். இப்போதோ அது உன் கண்ணுக்கு மறைந்திருக்கிறது.


சமாரியர் யார்?

இஸ்ரவேல் தேசமாகிய கானானிலிருந்து ரோமர்களின் கொடுமைக்கு ஆளாகி ஏராளமான யூதர்கள் சிதறடிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்கள். அப்போது சில லட்சம் யூதர்கள் வெளியேராமல் அடிமைகள்போல் வாழ ஒத்துக்கொண்டார்கள். இவர்களின் யூத இன வைராக்கியத்தை குலைக்க விக்கிரக வணக்கக்காரர்கள் பலரை இவர்களோடு வாழ வைத்து கலப்பு மணம் செய்து வைத்துவிட்டார்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN