BJP, (RSS) அரசாங்கம் திரு.மோடி அவர்கள் தலைமையில் இந்திய தேர்தலில்
BJP ஜெயித்தால் மத சார்பற்ற இந்திய நாட்டில் என்னவெல்லாம் நடக்கும் என்று யூகித்து இந்திய மக்கள் பயந்ததைப்போல் சில தொடர் சம்பவங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. கீழே நீங்கள் காண்பது புதிய
BJP அரசாங்கம் புதிதாக வெளியிட்ட 5 ரூபாய் நாணயம் ஆகும்.
பல்வேறு மதங்கள் கலாச்சாரங்கள் நிரம்பிய இந்திய ஜனநாயக நாட்டில் அவரவர்கள் வணங்கும் தெய்வங்கள் என்று குறிப்பிடும் கடவுள்கள் மிக ஏராளம்.
ஆனால் விக்கிரக தெய்வ வழிபாட்டை
வெறுக்கிற இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மார்க்கம் போன்ற சில குறிப்பிட்ட மதங்களை சார்ந்தவர்களின் மனம் புண்படும் வகையில்,
விக்கிரகத்தை வணங்க மறைமுகமாக கட்டாயப்படுத்தும் வகையில் நாம் தினசரி புழங்கும் நாணயத்தில் இந்துமத விக்கிரகத்தை வார்ப்பித்தது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
கிறிஸ்தவர்கள் தங்கள் உண்மை தெய்வத்துக்கு காணிக்கை சமர்ப்பிக்க மேற்கண்ட
இந்துமத விக்கிரகத்தை, எப்படி காணிக்கை பெட்டியில் இடுவது விக்கிரகத்தை வெறுக்கும், கிறிஸ்தவ மார்க்கம் எப்படி இதை ஏற்றுக்கொள்ளும். விக்கிரகத்தை வணங்குகிறவர்கள்
சபிக்கப்பட்டவர்கள் என்று கிறிஸ்தவ வேதத்திலும், இஸ்லாமிய
குரானிலும் எச்சரித்துள்ளதை இந்திய அரசாங்கம் கவனிக்க தவறிவிட்டது.
இந்த குறிப்பிட்ட சிறுபான்மையினர் வணங்கும் தெய்வத்தை கோபப்படுத்தும் வகையில், இப்படிப்பட்ட
இந்துமத தெய்வ விக்கிரகத்தை இப்போதுள்ள BJP அரசின் திரு.மோடி அரசாங்கம், 5 ரூபாய் மதிப்புள்ள பேசாத விக்கிரகம் பதிப்பிக்கப்பட்ட நாணயத்தில் உள்ள அந்த விக்கிரகத்தை வணங்க கிறிஸ்தவ மக்களை இந்திய
BJP அரசாங்கம் கட்டாயப்படுத்துகிறதா?
ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்போல் மதவித்தியாசம், தெய்வவித்தியாசம் இல்லாது சகோதர, சகோதரிகள்போல் பழகும் இந்திய மக்களை இப்போது ஆளும்
BJP அரசு பிரிக்க நினைக்கிறதா? இந்தியாவில் உள்ள பல மதத்தினர் ஒருவருக்கொருவர் பகைக்க அரசாங்கம் கட்டாயப்படுத்துகிறதா?. |